tag:blogger.com,1999:blog-55404425972289687112024-03-13T10:12:52.007-07:00புதுகை மணிச்சுடர்.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comBlogger218125tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-75724054141219521702018-04-07T01:31:00.000-07:002018-04-07T01:31:01.107-07:00உலக சுகாதார நாள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<ol style="text-align: left;">
<li style="text-align: center;"> <b><span style="font-size: large;">நலம்... நலமடைய ஆவல் </span></b></li>
</ol>
<br />
<br />
<b><span style="color: cyan;">ஒரு நாட்டின் வளம் அங்கு வாழும் மக்களின் நலத்தைச் சார்ந்தே.</span></b><b><span style="color: cyan;">அமைகிறது. . </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">அடிப்படையாக தனிமனிதனின் நலம் பெருக, </span></b><br />
<b><span style="color: cyan;">அக் குடும்பத்தில் நலம் பெருகும். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">குடும்பங்களின் நலம் பெருக அவ்வூரின் நலம் பெருகும்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> ஒவ்வொரு ஊரின் நலமும் பெருக பெருக </span></b><br />
<b><span style="color: cyan;">அம்மாநிலம் நலம் பெருகும் . </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">மாநில மக்களின் நலமே </span></b><br />
<b><span style="color: cyan;">மனித வளத்தின் பெருக்கம். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">மனித வளம் பெருகிட , </span></b><br />
<b><span style="color: cyan;">உழைப்பும் உற்பத்தியும் பெருகும். </span></b><br />
<b><span style="color: cyan;">தொழில்துறை பெருகும், </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">தனிமனித வருவாயின் பெருக்கமே</span></b><br />
<b><span style="color: cyan;">ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளம். </span></b><br />
<b><span style="color: cyan;">நாம் தன்னிறைவு பெற்ற சமூகத்தில் வாழ்வதாக</span></b><br />
<b><span style="color: cyan;">அப்போதுதானே பெருமைப்பட முடியும். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">எனவே உலக சுகாதார நாளைக் கொண்டாடுவதாகப் </span></b><br />
<b><span style="color: cyan;">பெருமைப் பட்டுக் கொள்வதைவிட, </span></b><br />
<b><span style="color: cyan;"> நல ஆதாரங்களைக் காப்பதையும் </span></b><br />
<b><span style="color: cyan;">பெருக்குவதையும் நோக்கி </span></b><br />
<b><span style="color: cyan;">நாம் செயல்பட முனைவோம்..</span></b><br />
<b><span style="color: cyan;">-----------------------------------------------------------------------------------------------------</span></b>----<br />
<br />
<br />
<b><i><span style="color: yellow;">சித்திரம் வரையச் சுவர் வேண்டும்-நம்</span></i></b><br />
<b><i><span style="color: yellow;">அத்தனை பேருக்கும் நலம் வேண்டும்</span></i></b><br />
<b><i><span style="color: yellow;">நோயற்ற வாழ்வு பெற வேண்டும்</span></i></b><br />
<b><i><span style="color: yellow;">நூறாண்டு வாழவும் வழி வேண்டும்.</span></i></b><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;"><br /></span></i></b></span>
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">நோயற்ற வாழ்வே பெருஞ் செல்வம்</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">நோயைத் தவிர்க்க வழிவகை செய்வோம்</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">தூய்மையை எதிலும் கடைப் பிடிப்போம் </span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">துயரத்தைத் தூரத்தில் விரட்டிடுவோம்.</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;"><br /></span></i></b></span>
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">உண்ணும் நீரும் உறிஞ்சும் காற்றும்</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">ஒழுங்காய் இருந்தால் நோய் வருமா?</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">வேதி உரத்தினில் விளையும்பொருளால்</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">வேதனை உடலுக்கு உடன் வருமே .</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;"><br /></span></i></b></span>
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">கருத்தின்றி வீசும் கழிவுப் பொருளால்</span></i></b></span><br />
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;">காற்றும் நீரும் கடும் நஞ்சாச்சு</span></i></b></span><br />
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> கவனமாய்க் கழிவைக் கையாளத் தெரிந்தால்</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> கவலைகள் காற்றினில் பறந்தாச்சு</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> சுற்றுப் புறமெலாம் சுத்தமாய் இருந்தால்</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> சுகாதாரக் கேடுகள் பரவாது</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> சுழற்சிக்கு ஏலாத வன்பொருள் தவிர்த்தால்</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> சூழலை மாசுகள் கெடுக்காது</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> காய்ச்சிய நீரையேப் பருகிடப் பழகு</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> காற்று வெளியினில் தினந்தினம் உலவு</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> உணவிலும் உடையிலும் தூய்மையை நிறுவு</span></i></b></div>
<div style="text-align: left; text-indent: -12px;">
<b><i><span style="color: yellow;"> உழைத்தபின் ஓய்வெடு உடலுக்கு அழகு</span></i></b></div>
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;"><br /></span></i></b></span>
<span style="text-align: center; text-indent: -9pt;"><b><i><span style="color: yellow;"><br /></span></i></b></span>
<div align="center" class="MsoNormal" style="text-align: center; text-indent: -9.0pt;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center; text-indent: -9.0pt;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center; text-indent: -9.0pt;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center; text-indent: -9.0pt;">
<b><i><span style="color: yellow;"><br /></span></i></b></div>
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-16912766935138829712018-03-26T23:02:00.000-07:002018-03-26T23:02:50.416-07:00தாய்... தாய்...தாய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;">நெஞ்சிருக்கும் வரை......</span></b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<b><span style="color: lime;">தாயிற் சிறந்த கோயிலுமில்லை...</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">தாயில்லாமல் நானில்லை...</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">அன்னை ஓர் ஆலயம் ...</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">அன்னையைப் போல்ஒரு தெய்வமில்லை...</span></b><br />
<b><br /></b>
<b>என்றெல்லாம் காலம் காலமாகப் பல்வேறு கவிஞர்கள் </b><br />
<b>தாயின் பெருமையைப் போற்றிப் பாடி வந்துள்ளனர்.</b><br />
<b><br /></b>
<b>எனது நெஞ்சிருக்கும் வரை நீங்காது நினைவில் வாழும் என் தாயின் 12 ஆவது நினைவு நாளில் என்னுள் எழுந்த எண்ண வரிகள் இதோ...</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b><span style="color: cyan;">கருவாய் நான் உருவான முதலே</span></b><br />
<b><span style="color: cyan;">கருத்தாக எனைக் காத்த தாயே</span></b><br />
<b><span style="color: cyan;">இணையாக உனக் கென்றும் நீயே</span></b><br />
<b><span style="color: cyan;">இன்னமுது ஊற்றாய் இருந் தாயே</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">உதிரத்தை உருக்கிப் பாலூட்டி வளர்த்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">உறங்கிட எனக்குத் தாலாட்டு இசைத்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்நீ புதைத்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்?</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">அம்மாஎனும் சொல்லால் அதரத்தை அசைத்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">அப்பாஎனும் உறவை அறிமுகம் அளித்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">அறிவினை ஊட்டும்நல் ஆசானாய்த் திகழ்ந்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">அல்லலெனை நெருங்கிடாத அணையாக இருந்தாய்</span></b><br />
<span style="color: cyan;"><br /></span>
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">நன்னெறியில் நான்ஒழுக நாளும்நீ உழைத்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">நலங்கெட்டு நலிந்தாலும் மடிதந்து மகிழ்ந்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">நானிலத்தும் நான்தேடும் தெய்வமாக இருந்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;">நாளுமுனை மறந்திடாது நனிநெஞ்சில் நிறைந்தாய்</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"><br /></span></b>
<div style="text-align: right;">
<b><span style="color: cyan;">-</span><span style="color: magenta;">- பாவலர் பொன்.க.,</span></b></div>
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-27481843655603231512018-03-25T05:24:00.000-07:002018-03-25T05:24:09.434-07:00வீட்டுக்கொரு கழிப்பறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: yellow;">வீட்டுக்கொரு கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத் தையும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஊர்ப்புற மக்களிடம் ஊரக வளர்ச்சி முகமை மூலம் பரப்புரை செய்ய உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல்.</span></b><br />
<b><br /></b>
<b>இசைப்பாடல் - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b><span style="color: lime;">வீட்டுக்கொரு கழிப்பறைதான்</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அய்யா அம்மாமாரே</span></b><br />
<b><span style="color: lime;">வேணுமுங்க அவசியமா</span></b><br />
<b><span style="color: lime;"> கட்டிடுவோம் வாங்க நீங்க</span></b><br />
<b><span style="color: lime;">திறந்தவெளிப் பொட்டலத்தான்</span></b><br />
<b><span style="color: lime;"> தேடிப்போயி மலம் கழிச்சா</span></b><br />
<b><span style="color: lime;"> தீராத தொற்றுநோயும்</span></b><br />
<b><span style="color: lime;"> தேடிவரும் நம்மலைத்தான் --- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">வாய்க்குள்ளே போறதெல்லாம்</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அய்யா அம்மாமாரே</span></b><br />
<b><span style="color: lime;">வயித்துக்குள்ளே தேங்கிடாமே</span></b><br />
<b><span style="color: lime;"> வெளியேவந்து ஆகவேணும்</span></b><br />
<b><span style="color: lime;">காலைமாலை ரெண்டுவேளை</span></b><br />
<b><span style="color: lime;"> கழிவைவெளி யேற்றவேணும்</span></b><br />
<b><span style="color: lime;">கலகலன்னு ஒடம்பிருக்கும்</span></b><br />
<b><span style="color: lime;"> கண்டபிணி ஓடிவிடும் - -- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">பொழுதெல்லாம் அடக்கிவச்சு</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அக்கா தங்கைமாரே</span></b><br />
<b><span style="color: lime;">பொழுதுபட்டும் விடியுமுன்னும்</span></b><br />
<b><span style="color: lime;"> புதரைத்தேடிப் போறீகளே</span></b><br />
<b><span style="color: lime;">தேக்கிவைக்கும் மலஜலத்தால்</span></b><br />
<b><span style="color: lime;"> தீங்குரொம்ப வெளையும்தானே</span></b><br />
<b><span style="color: lime;">தீரும்ஒங்க துயரமெல்லாம்</span></b><br />
<b><span style="color: lime;"> கழிப்பறையைக் கட்டுனாலே --- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">கூரைவீடோ ஓட்டுவீடோ</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அய்யா அம்மாமாரே</span></b><br />
<b><span style="color: lime;">குடியிருப்பின் வெளியேகொஞ்சம்</span></b><br />
<b><span style="color: lime;"> எடமிருந்தாப் போதுந்தானே</span></b><br />
<b><span style="color: lime;">பஞ்சாயத்து ஆபீசுக்கு</span></b><br />
<b><span style="color: lime;"> கழிப்பறைன்னு கேட்டுப்போனா</span></b><br />
<b><span style="color: lime;">பன்னெண்டாயிர ஊக்கநிதியில்</span></b><br />
<b><span style="color: lime;"> கழிப்பறையும் வருமேதானா --- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">அஞ்சுக்கு மூனடியில்</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அய்யா அம்மாமாரே</span></b><br />
<b><span style="color: lime;">அழகாஒரு கழிப்பறையை</span></b><br />
<b><span style="color: lime;"> அமைச்சுவச்சு நீயும்பாரு</span></b><br />
<b><span style="color: lime;">உருளைவடிவ உறைகளாலே</span></b><br />
<b><span style="color: lime;"> உலர்கழிவுத் தொட்டிபோதும்</span></b><br />
<b><span style="color: lime;">ஒருதுளியும் நாத்தமின்றி</span></b><br />
<b><span style="color: lime;"> உரமாஅந்தக் கழிவும்மாறும் --- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">குளக்கரையில் மலம்கழிச்சா</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அண்ணந் தம்பிமாரே</span></b><br />
<b><span style="color: lime;">கொசு கிருமி உருவாகி</span></b><br />
<b><span style="color: lime;"> கொல்லைநோயைப் பரப்பிடுமே</span></b><br />
<b><span style="color: lime;">குடிநீரும் காத்தும்கெட்டு</span></b><br />
<b><span style="color: lime;"> கணக்கில்லாம தொல்லைதரும்</span></b><br />
<b><span style="color: lime;">கவலைநீங்கி சுகமாவாழக்</span></b><br />
<b><span style="color: lime;"> கழிப்பறைதான் அடித்தளமே --- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">சுத்தியுள்ள எடத்தையெல்லாம்</span></b><br />
<b><span style="color: lime;"> ஏ அய்யா அம்மாமாரே</span></b><br />
<b><span style="color: lime;">சுத்தமாக வச்சிக்குவோம்</span></b><br />
<b><span style="color: lime;"> சுகவாழ்வு தானேவரும்</span></b><br />
<b><span style="color: lime;">தூய்மைபாரத் திட்டத்தாலே</span></b><br />
<b><span style="color: lime;"> திறந்தவெளியில் மலம்கழிக்கா</span></b><br />
<b><span style="color: lime;">மாவட்டமா புதுக்கோட்டையை</span></b><br />
<b><span style="color: lime;"> மாத்திடுவோம் வாங்கநீங்க -- வீட்டுக்கொரு</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">தன்னனன்ன தானே னன்னே</span></b><br />
<b><span style="color: lime;">தானானே தானே னன்னா</span></b><br />
<b><span style="color: lime;">தனனானே தானே னன்னன்னா</span></b><br />
<b><span style="color: lime;">ஏஅம்மாமாரே தானானே </span></b><br />
<b><span style="color: lime;">தானே தன்னன்னா</span></b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-56974604454184682472018-03-21T00:07:00.001-07:002018-03-21T00:07:36.906-07:00கட்டட்டும் கட்டிக்கிறேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="font-size: large;"><b><span style="color: lime;">கட்டட்டும் கட்டிக்கிறேன்</span>.</b></span></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<b><span style="color: purple;">“</span><span style="color: yellow;">ஏய் பொன்னி, பாத்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு ஒன்னைப் பிடிச்சிருக்காம். சம்மதம் சொல்லிடலாமா?” </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ வேண்டாம்மா”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ஏன்டி, அந்தக் கிராமத்திலேயே அந்தப் பையன்தான் நெறையப் படிச்சிருக்காம்”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ படிப்பைப் பத்திக் கவலையில்லை”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">” படிச்சிருந்தாலும் அரசாங்க வேலையை எதிர்பாக்காம சொந்த நெலத்துல விவசாயம் பண்ணி வெளைச்சல் பாக்கிற பையன்டி. ”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ வேலையைப் பத்தியோ விவசாயத்தைப் பத்தியோ எனக்குப் பிரச்சனையில்லை”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ வேற என்ன? ஓன் நெறத்துக்கு கொஞ்சம் கம்மின்னு பாக்குறியா?”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“நெறத்தைப் பத்தியோ, அழகைப் பத்தியோ நா ஒன்னும் பெருசா நெனைக்கிறவ இல்லே”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ பீடி சிகரெட் புகையிலை மதுன்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்னு விசாரிச்சதுல தெரியுது”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ நானும் கேள்விப் பட்டேன்”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ அவங்க அப்பா அம்மால்லாம் நல்ல குணமானவங்க.ஒன்னைய தங்கங்தங்கமா பாத்துக்குவாங்களாம் கொழுந்தன் நாத்துனா பிச்சுப்புடுங்கல் இல்லை”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ மாமியார் நாத்தனார் கொடுமையைப் பத்தி நா கவலைப்படலே”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ ரெண்டு எடத்துல ஒங்க அப்பாவும் மாமாவும் சாதகம் பாத்ததுல பத்துப் பொருத்தமும் நல்லா இருக்காம்டி”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ இந்த சாதகம், சகுணத்தையெல்லாம் பத்திக் கவலைப் படுறவ இல்லே நா”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ அடியே, அவ்வளவு நகை போடு, இவ்வளவு சீர் செய்யுங்கன்னு எதுவுமே கேக்காம பொண்ணை மட்டும் குடுத்தாப் போதுமுங்குறாங்கடி மாப்பிளை வீட்ல”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ அப்படி எதுவும் கேட்டிருந்தா என்னைப் பொண்ணுப் பாக்க வந்தப்பவே வெளியே போங்கன்னு சொல்லிருப்பேன்“</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ அதுக்காக, ஒரே பொண்ணு ஒன்னை ஒன்னும் சும்மா அனுப்பப் போறதில்லே. நகை, பண்டம் பாத்திரம், கட்டில் மெத்தை, மிக்சி கிரைண்டர், டிவி, பிரிட்ஜ், மாப்பிள்ளைக்கு கழுத்துக்குச் செயினு, கைக்கு பிரேஸ்லெட், விரலுக்கு மோதிரம், பல்சார் பைக் அப்டி இப்டின்னு ஒரு பத்து லெட்சத்துக்கு சீர் செய்ய நானும் ஒங்கப்பாவும் திட்டம் போட்டு வச்சிருக்கோம்”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ என்னதான் ஆசைகாட்டினாலும் எனக்கு சம்மதமில்லேம்மா”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">” ஏன்டி, வேற யாரையும் மனசுக்குள்ளே விரும்புறியா?</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">” விரும்பியிருந்தா ஒங்கக்கிட்டச் சொல்றதுக்கு எனக்கு என்ன பயம்?”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“அப்பறம் எதுக்குடி இந்தக் கல்யாணத்தை வேணாங்குறே?“</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">” ஏம்மா, பத்துப் பொருத்தம் சரியா இருக்கு, பத்து லெட்சம் செலவு செஞ்சு கட்டிக் குடுக்குறேன்னு சொல்ற நீங்க, ஒரு பொண்ணு சங்கடமில்லாம வாழத் தேவையான ஒன்னு அந்த மாப்பிள்ளை வீட்டுல இருக்காங்குறதைக் கவனிச்சீங்களா?”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ என்னடி இல்லை? கப்பல்மாதிரி வீடு . அந்தக் கிராமத்துலேயே அவுக வீடுதான் பெருசு”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ வீடுதான் பெருசு. ஆனா கழிப்பறை- அதான் கக்கூஸ் அந்த வீட்ல இல்லையாம். என் தோழிய விட்டு விசாரிச்சேன் ”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ப்பூ.. இந்த சின்ன விசயத்துக்கா இம்புட்டு பிடிவாதமா வேண்டாங்குறே? கிராமத்துல, வீட்டுக்குள்ளேயோ, வெளியிலேயோ கக்கூஸ் வச்சுக் கட்டமாட்டாங்க. அப்படியே காலாறக் குளத்துப் பக்கமோ, காட்டுப் பக்கமோ காத்தாட வெளியே போறதத்தான் விரும்புவாக “</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<span style="color: yellow;"><b>“ அம்மா, அப்படி திறந்த வெளியில மலம் கழிக்கிறது எவ்வளவு சுகாதாரக் கேடு தெரியுமா? இயற்கையா ஏற்படுற உடல்கழிவை அப்பப்ப வெளியேத்தனும். </b><b>அடக்குறதுதான் ஒடம்புல பல நோய் உருவாகக் காரணம்.</b><b> அவசர ஆத்திரமுன்னா பொண்ணுங்க கழிப்பிடம் தேடி வெளிய போறது எவ்வளவு ஆபத்துன்னு தினம் தினம் செய்தியில பாக்குறியல்ல. அதனால கழிப்பறையை முதல்ல கட்டச் சொல்லு அப்பறம் நா கட்டிக்கிறேன்”</b></span><br />
<b><span style="color: yellow;">.</span></b><br />
<b><span style="color: yellow;">( அப்போது வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த அப்பா)</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ நீ கேக்குறதுக்கு முன்னாலே மாப்பிளை தூய்மை பாரத் திட்டத்திலே கழிப்பறை கட்ட பஞ்சாயத்து ஆபீசுல மனு கொடுத்து, அவங்களும் வந்து எடத்தைப் பாத்துட்டு, பன்னெண்டாயிரம் ஊக்கநிதியில கழிப்பறை கட்ட ஏற்பாடு பண்ணிட்டாங்கலாம்.”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“பாத்தீங்களா நம்ப பொண்ணு நெனைச்சதையே மாப்பிளையும் நெனைச்சிருக்காரு.” </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ அதுதான்டி பதினோராவது பொருத்தம்”</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">” அப்பறம் என்னடி?“</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">“ கட்டட்டும் கட்டிக்கிறேன்”</span></b><br />
<b><span style="color: yellow;">------------------------------------------------------------------------------------------------------------------------</span></b><br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-77366662618122529042018-03-19T00:48:00.000-07:002018-03-19T00:48:02.389-07:00தமிழ்ப் பண்பாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 12.8px; text-align: center;">
<b><span style="color: #222222;"> </span><span style="color: purple;">“தமிழ்ப் பண்பாடு“ --</span></b><b style="background-color: transparent; font-size: 12.8px;"><span style="color: purple;">கவிதை-</span></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span style="color: white;"><br /></span></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">தமிழரின் பண்பாடு தரணியில் </b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> அமைந்தது தனிப்பெருஞ் சிறப்போடு</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">தலைமணி முடியெனத் தகதகத்</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> திருந்தது தகைமைச் சான்றோடு</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">தனக்கென வாழாது பிறர்க்கென</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> வாழ்ந்தவர் தழைத்திட்ட ப் பூக்காடு</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">தன்மானம் காத்தலில் தமிழினம்</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> முதலெனச் சாற்றுவம் தெம்போடு</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"><br /></b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">அன்பின் வழியினில் அகம்புற</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> வாழ்க்கையும் அமைந்தங்கு நடந்ததுவே</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">பண்பின் வெளிப்பாடு பட்டின்</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> ஒளியென பதிந்தெங்கும் கிடந்ததுவே</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">மன்புகழ் காத்திட மறத்தமிழ்</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> வீரரும் மார்தந்து மாண்டனரே</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;">பண்வழிப் பாவலர் காட்டிய </b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"> நெறியினில் புவனத்தை ஆண்டனரே</b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<b style="background-color: black;"><br /></b></div>
<div style="font-family: arial, sans-serif;">
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">கற்றவரைப் புகழ் பெற்றவரின்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<span style="background-color: black;"><b> </b><b>மேலாய்ப் போற்றிப் புகழ்ந்தனரே</b></span></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">கொற்றவனைப் பாடிப் பெற்றபொருள்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> கொண்டு சுற்றம் தழுவினரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">அற்றநிலை யெனில் அறம்தழு </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> வாதவரை அதட்டி இகழ்ந்தனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">உற்றதுய ரினில்உடை இழந்தார்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> கைபோல் உதவியே மகிழ்ந்தனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"><br /></b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">ஏறுதழுவிய வீரரையேப் பெண்டிர்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> இணைய ராய் ஏற்றனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">ஊறுளங் கொண்டவர் உற்றா </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> ராயினும் ஒதுக்கியே தூற்றினரே.</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">காதல் கணவரைக் கைபற்றி </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> நங்கையர் கற்புநெறிக் காத்தனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">காணும் மக்கட்செல்வம் களிப்புற</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> வாழ்நெறி கடிதே யாத்தனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"><br /></b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">வந்தவிருந்தினர் வன்பசி போக்கியே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> வாழ்ந்தது தமிழ்க் குடியே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">நொந்தொன்றை விலக்காது நோற்பவர் </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> கருத்தையும் ஏற்றனர் முறைப்படியே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">எந்நிலை மாந்தரும் எங்களது </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> உறவென்று ஏற்றசீர் மனத்தினரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">சிந்தையிலும் மாற்றார் சீர்கெட</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> நினையாத செந்தமிழ் இனத்தினரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"><br /></b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">ஈட்டும் பொருளுக்கு ஏற்றநல்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> உழைப்பினை ஈந்திட்ட தரப்பினரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">பாட்டும் இசையுமாய் பல்கலை </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> வளர்த்திட்ட பண்பமை மரபினரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">பிறர்க்கென வாழ்தலை பெற்றியாய்க்</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> கொண்ட பெருமக்கள் வாழ்ந்தனரே</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;">எவர்க்கெப் புகழ்வரின் எமக்கென </b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<b style="background-color: black;"> மகிழ்ந்திட்ட இனிமனக் குணத்தவரே.</b></div>
<div class="MsoNormal" style="line-height: 15.6933px; margin: 0in 0in 8pt;">
<span style="background-color: black;"><b>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------</b><b>-</b></span></div>
<div style="background-color: white; color: #222222;">
<br /></div>
</div>
</div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-61525651159644636362018-01-24T01:08:00.000-08:002018-01-24T01:08:12.519-08:00காலத்தின் குரல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b><br /></b>
<div style="text-align: center;">
<span style="font-size: large;"><b><i style="background-color: lime;">நிறைவேறாதவையும் நிறைவேற்ற நினைப்பதுவும்</i></b></span></div>
<b><br /></b>
<b><br /></b>
<b> அகவை எழுபத்தொன்றாயிற்றா? என்ற நினைப்போடு என் அறையின் நாள்காட்டியில் தேதியைக் கிழிக்க முனைந்தபோது,</b><br />
<b><br /></b>
<b>“எழுபதாண்டு காலம் இம்மானுட சமூகத்திற்குள் சங்கமித்து காலததைக் கழித்தாயே இச்தச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு நீ என்ன செய்து கிழித்தாய்?”</b><br />
<b><br /></b>
<b>என்று என் கன்னத்தில் அறைந்ததுபோல் அந்த நாள்காட்டி என்னைக் கேட்டதாக ஓர் உணர்வு.</b><br />
<b><br /></b>
<b>மன உறுத்தலோடு, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். </b><br />
<b><br /></b>
<b> விளையாட்டுப் பருவம், விடலைப் பருவம் கடந்து, 36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை, பாடப் புத்தகங்களுக்கு அப்பால் அவர்களிடம் புதைந்து கிடந்த வாழ்வியல் திறன்களை வளர்த்து உருவாக்கி இருக்கிறேனே, அதற்காக தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகூட வழங்கி இருக்கிறதே </b><b>என நான் நினைக்கு முன்,</b><br />
<b><br /></b>
<b> ” அது உன் வயிற்றுப் பிழைப்புக்கான வருமானத்திற்காகச் செய்த பணி” என்றது காலத்தின் குரல்.</b><br />
<b><br /></b>
<b> 50 ஆண்டுகாலம் மணிமன்றம் என்ற கலை,கல்வி வளர்ச்சி அமைப்பின் மூலமும், 14 ஆண்டுகளாய் நினைவில் வாழும் என் இணையாள் பெயரில் “மரகதவள்ளி அறக்கட்டளை”யை நிறுவி அதன் மூலமும், வகுப்புவாரி முதல் மாணவர்களுக்கும், மாவட்ட முதல் மாணவர்களுக்கும், முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும் மாவட்ட உயர் அலுவலர்களைக் கொண்டு விருதுகள் வழங்கி வந்துள்ளோமே என்று பெருமிதம் கொள்ளுமுன்...</b><br />
<b><br /></b>
<b>” நீட் தேர்வு முறையில்தான் அந்த முதல் மாணவர்களெல்லாம் கரைந்தே போனார்களே” என்றது காலத்தின் குரல்.</b><br />
<b><br /></b>
<b> கடந்த ஐம்பது ஆண்டுகளாய் பள்ளி ஆண்டுவிழாக்களில், வானொலியில், பொதுவெளி மேடைகளில் மணிமன்றம், மணிச்சுடர் கலைக்கூடம் மூலம் 72 சமூக, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி, 354 இசைப்பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடி,3ஒலி நாடாக்கள்,2 இறுவட்டுகள் வாயிலாக, மக்களிடையே சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்திருக்கிறேனே எனப் பட்டியலிட முனைந்தபோது....</b><br />
<b><br /></b>
<b>” விதைத்தாயே, அதில் விளைச்சல் என்ன கண்டாய்?” எனக் கேட்டது காலம்.</b><br />
<b><br /></b>
<b> அறிவொளி இயக்கம், தொடர் அறிவொளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, முதலிய அமைப்புகளில் இணைந்து 25 ஆண்டு காலம் பாமர மக்களிடம் மணிடிக்கிடந்த மூட நம்பிக்கைகளை, மந்திரமா? தந்திரமா?, நழுவப்படக்காட்சி, எளிய அறிவியல் ஆய்வுகள் மூலமாக அ றியாமையை அகற்றும் விழிப்புணர்வுப் பணியை ஆற்றி இருக்கிறேனே எனச் சொல்லுமுன்...</b><br />
<b><br /></b>
<b>” மூட நம்பிக்கை ஒழிஞ்சுதா? அறியாமை அகன்றிடுச்சா? என்ற காலத்தின் கேள்விக்கு , ஆம் எனச் சொல்லி என்னை நான் ஏமாற்றிக் கொள்ள இயலவில்லை.</b><br />
<b><br /></b>
<b> 28 ஆண்டு காலம் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் காவல்துறைக்குத் துணையாகப் பணியாற்றிப் பாராட்டு, பதக்கமெல்லாம் வாங்கிய சேவையைச் சொல்ல முற்பட்டபோது,</b><br />
<b><br /></b>
<b>“ நீ துணையாய்ப் போனே, அது உனக்கு எப்பவாவது துணையா நின்னுச்சா? ன்னு நச்சுன்னு குட்டியது காலம்.</b><br />
<b><br /></b>
<b>செஸ்டாட், நபார்டு வங்கி மூலம் கிராமப்புற மக்களுக்குச் சிறுசேமிப்பு, சிறுகுறு தொழில் தொடங்க வங்கிகளின் சேவை பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரை நிறையச் செய்திருக்கிறேனே...</b><br />
<b><br /></b>
<b>“ஓ... அப்ப மக்களை உண்டியலை ஒடைக்க வச்ச பாவத்தில உனக்கும் பங்கிருக்குன்னு சொல்லு” என்று எடக்கு மடக்கா காலம் என் மீது ஒரு பழியைப் போட்டது.</b><br />
<b><br /></b>
<b> கதிரவன் புப்பந்தாட்டக் கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், இளந்தென்றல் கலை மன்றம் முதலிய அமைப்புகளை உருவாக்கி, அவை மூலம் இளந்தலைமுறைக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவித்தேனே... என நினைத்தபோது</b><br />
<b><br /></b>
<b>” அப்படி எத்தனைபேர் ஒலிம்பிக்கில், ஆசியாட்டில் பதக்கம் பெற்றுள்ளார்கள்? ” என எள்ளலாய் வந்தது காலத்தின் கேள்வி.</b><br />
<b><br /></b>
<b> மாவட்ட காசநோய்த் தடுப்பு இயக்கம், அனைவருக்கும் சுகாதார இயக்கம் ஆகியன மூலம் கிராமப்புற மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பரப்புரை செய்ததெல்லாம் சேவை இல்லையா? என மனதுக்குள் நான் பொங்கியபோது....</b><br />
<b><br /></b>
<b>” அதனால் காசநோய் மட்டுப் பட்டுடுச்சா இல்லே இறப்பு எண்ணிக்கைதான் குறைஞ்சிடுச்சா?” என எதிர்க் குரல் காலத்திடமிருந்து வந்தது உணர்ந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> செஞ்சிலுவைச் சங்க பயிற்சி பெற்று, பள்ளிகளில் வழிகாட்டியாய், கருத்தாளராய் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குச் சாலை விபத்துத் தடுப்பு, முதலுதவி மற்றும் மீட்புப் பயிற்சிகள் அளித்திருக்கிறேனே என்றெண்ணியபோது...</b><br />
<b><br /></b>
<b>” சாலை விபத்துகள் குறைந்து விட்டதா? நீ கற்றுத்தந்த படி எத்தனைபேர் முதலுதவி செய்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்?” என்று பதில் சொல்ல முடியாதபடி வாயை அடைத்தது காலத்தின் குரல்.</b><br />
<b><br /></b>
<b>நுகர்வோர் பாதுகாப்புக் குழுவில் இணைந்து, எடை மோசடி, கலப்படம் பற்றி வில்லுப்பாட்டு மூலமெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதைச் சொல்லவா? என நினைக்குமுன்..</b><br />
<b><br /></b>
<b>“ கலப்படமும் எடை மோசடியும் ஒழிஞ்சிருச்சா? ” எனக்கேட்டது காலத்தின் குரல்.</b><br />
<b><br /></b>
<b> திருக்குறள் கழகம், இளங்கோவடிகள் மன்றம், கணினித் தமிழ்ச் சங்கம், வீதி கலை இலக்கியக் களம், முதலான இலக்கிய அமைப்புகளில் களமாடி இலக்கியப் பணியாற்றியதையும், ஆறு நூல்கள் வெளியிட்டுள்ளதையும் தாய்மொழியாம் தமிழுக்குச் செய்த தொண்டுகள் இல்லையா ? எனக் கேட்க மனம் ஏங்கியபோது...</b><br />
<b><br /></b>
<b>” காற்றில் கரைத்த கற்புரம் நீ, ஆயிரமாயிரம் இலக்கியவாதிகள் சாதிக்காததை நீ என்ன சாதிச்சுட்டே.” எனும் அலட்சியக் குரல் காலத்திடமிருந்து வந்தது.</b><br />
<b><br /></b>
<b> இறுதியாக காலம் ஏற்றுக் கொள்ளும் புண்ணிய சேவையைச் சொல்லி ஆறுதலடைய நினைத்தேன். சர்வசித் மக்கள் சேவை இயக்கத்தில் இணைந்து 200க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் கோரப்படாத உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து எடுத்து நல்லடக்கம் செய்துள்ளமையைக் காலத்தின் செவியில் உரக்கப் போட்டபோது...</b><br />
<b><br /></b>
<b>“ இது நல்ல சேவைதான். ஆனால் இனிமேல் அத்தகைய உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கல்லவா போய்விடும்”. என அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது காலம்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: cyan;"> வாழும் காலத்தே செய்தவையெல்லாம் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய் விட்டதை உணர்ந்த நான் “ இறந்த பிறகு எனது உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்பிற்காக “உடற்கொடை”யளிப்பதாக 2010ல் 171ஆம் எண்ணில் பதிவு செய்து மெய்யியல் துறையின் ஒப்புதல் பெற்றுள்ளதைக் காலத்தின் கருத்தில் பதிவிட்டபோது...</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">” நல்ல செயல்தான். அதற்கும் நீ விபத்திலோ, தற்கொலை செய்து கொண்டோ சாகாமல் இயற்கையாக மரணிக்க வேண்டும் என்ற காலத்தின் எச்சரிக்கைக்கு....</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">” அந்த நாளைத்தான் விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று நாள்காட்டியின் தேதியை விரைந்து கிழித்தேன்.</span></b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-17557047405109702482017-06-11T01:42:00.001-07:002017-06-11T01:42:29.879-07:00எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-29<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b><span style="color: blue; font-size: large;">கனக மணிகளினும் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;"> மேலாய்க் கண்ணீர்த் துளிகள்</span></b><br />
<br />
<b> <span style="color: yellow;"> ஆடிப்பூரம் பொருட்காட்சிக் கலைமேடையில் புதுக்கோட்டை கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு </span></b><b><span style="color: yellow;"> “ தலைக்கு ஒரு விலை” என்ற நாடகத்தினை அரங்கேற்றி, பாதி நாடகம் நடந்து கொண்டிருந்த வேளையில் “ நாடகத்தை நிறுத்து” என்ற குரல் இரண்டாவது முறையாகக் கேட்டதும் குரல் வந்த பக்கம் திரும்பினேன்.</span></b><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> அங்கே பொருட்காட்சி மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளரான உதவி மக்கள்தொடர்பு அலுவலர் ஆவேசத்துடன் மேடையினுள் நுழைந்தார்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> “ஏன் சார் நாடகத்தை நிறுத்தணும்?” ன்னு கேட்டேன்</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> “ சிறப்பு நடன நிகழ்ச்சி நடத்தும் அரசு நர்த்தகி சுவர்ணமுகி வந்துட்டாங்க. அவங்க நிகழ்ச்சி தொடங்கணும்” ன்னார்</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b>“சார் இன்னும் ஐந்து நிமிடத்தில் நாடகம் முடிந்து விடும். முக்கியமான உச்சகட்ட காட்சி அடுத்துதான்” என்றேன்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> பரிசில் பெற வந்த ஆவூர் புலவர் பெருந்தலைச் சாத்தனார் காட்டில் இருக்கும் குமணனைச் சந்திக்கிறார். அவருக்கு பரிசளிக்க பொருளேதும் இல்லாத நிலையில், தனது தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக தன் தம்பி இளங்குமணன் அறிவித்திருப்பதால், தனது தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்னை பரிசாகப் பெற்றுக் கொள்ள தனது வாளை புலவரிடம் கொடுக்கிறார். </b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> அடுத்த காட்சியில் இரத்தம் வழியும் ஒரு மூட்டையுடன் புலவர் இளங்குமணன் முன் நிற்கிறார். தனது அண்ணனைக் கொல்ல, தானே காரணமாக இருந்ததை எண்ணிய இளங்குமணன் , மனம் திருந்தி கதறுகிறான்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> அவனது மனமாற்றத்தைக் கண்ட புலவர், தான் கொண்டு வந்திருப்பது குமணனின் தலையல்ல வாழையின் அடிக்கிழங்கு எனக்காட்டி அண்ணன் தம்பியை சேர்த்து வைக்கிறார்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b>இந்த இரு காட்சிகளும் நடந்தால்தான் நாடகக் கரு முற்றாக பார்வையாளர்களுக்கு விளங்கும்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> ஆனால் அந்த அலுவலர் எனது கோரிக்கையை ஏற்காமல் </b></span><br />
<b><span style="color: yellow;">“ ஒரு பள்ளி மாணவர் நாடகத்திற்காக அரசு நர்த்தகியைக் காக்க வைக்க முடியாது” எனப் பிடிவாதமாக நாடகத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்.</span></b><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> எங்கள் விவாதத்தைக் கண்ணுற்று அங்கு வந்த கல்வித்துறை அலுவலரிடமும் ஒரு ஐந்து நிமிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் நாடகத்தை முடித்து விடுகிறேன் என்று மன்றாடினேன்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> அவரின் வேண்டுகோளையும் மறுத்து, முன் திரையை மூடச் செய்தார் அன்றைய உதவி மக்கள் தொடர்பு அலுவலர். கல்வி அலுவலரும் செய்வதறியாது மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> “ அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்” என்ற பழமொழியின் பொருளை அப்போதுதான் உணர்ந்தேன்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> வேறு வழியின்றி ஒலி வாங்கியில் ” மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நெருக்கடியால் நாடகம் இத்தோடு நிறுத்தப்படுகிறது” என அறிவித்துவிட்டு, ஏக்கத்தோடு நின்ற மாணவ நடிகர்களை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன். </b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> பக்கத்திலிருந்த ஒரு ஆசிரியர் வீட்டில் அவர்களது ஒப்பனையைக் கலைத்து, அவர்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லி, ஒரு தானியில் அவர்களை அழைத்துக் கொண்டுபோய் அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்தேன்.</b></span><br />
<b style="color: yellow;"><br /></b>
<b><span style="color: yellow;"> </span> அரசு நர்த்தகியின் நடன நிகழ்ச்சி முடிந்தபின், அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க என்னையும் நாடகத்தில் நடித்த மாணவர்களையும் ஒலி பெருக்கியில் அழைத்திருக்கிறார்கள் . நாங்கள் அந்த அழைப்பிற்கு மதிப்பளிக்கவில்லை.</b><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> மறுநாள் பள்ளிக்கு வந்த கல்வி அலுவலர் நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தப்பட்டு , மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கிச் சென்றார்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> ஒரு படைப்பு அரங்கேற்றத்தின் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கொச்சைப் படுத்தப் படும்போது அந்தப் படைப்பாளன் படும் மன வேதனையை பட்டவரே உணர்வர். அதைவிட இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்துத் தங்கள் திறமைகளை மேடையில் காட்டி, பாராட்டுப் பெற நினைத்திருந்த மாணவர்களின் மனநிலை, அவர்களின் பெற்றோரின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும்?</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> நீறு பூத்த நெருப்பாக நெடுநாளாக என்னுள் கனன்று கொண்டிருந்த அந்த ஆதங்கம் ஆற்றுப்படும் நாள் ஒன்று வந்தது.</b></span><br />
<b style="color: yellow;"><br /></b>
<b><span style="color: cyan;">சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் இணைந்து புதுக்கோட்டையில் 21,22,23-01-2011 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய “இயல், இசை, நாடகத்திற்குத் தமிழின் கொடை” என்னும் கருத்தரங்கின் ஐந்து நெறியாளர்களில் ஒருவனாக நானும் செயலாற்றும் வாய்ப்பு வந்தது.</span></b><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> அக்கருத்தரங்கின் நிறைவு நாளில் நாடகத்திற்குத் தமிழின் கொடை என்னும் பொருளுக்கான சங்க இலக்கியம் தந்த நாடகம் ஒன்றினை நடத்தித்தர திலகவதியார் திருவருள் ஆதீன ப் பொறுப்பாளர் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> நெடுநாளாய் நிறைவேறாதிருந்த கனவினை நனவாக்க முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிப்பூரம் பொருட்காட்சியில் முழுமை பெறாது தடைப்பட்ட குமணன் வரலாற்றை இன்னும் சற்று விரிவுபடுத்தி “பழிதவிர்த்த பாவலர்” என்னும் பெயரில் ஒரு மணி நேர நாடகமாக அரங்கேற்றினேன். </b></span><br />
<b><span style="color: yellow;"> மணிச்சுடர் கலைக்குழுவினரால் நடிக்கப்பெற்ற அந்நாடகம் கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"><br /></span></b>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-EidZaB7KL7c/WTz2j55CFpI/AAAAAAAAB6w/mXpdEh2FSLYTPyutunjB6pHW11VBtZZwgCLcB/s1600/DSC_0214.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1065" data-original-width="1600" height="212" src="https://2.bp.blogspot.com/-EidZaB7KL7c/WTz2j55CFpI/AAAAAAAAB6w/mXpdEh2FSLYTPyutunjB6pHW11VBtZZwgCLcB/s320/DSC_0214.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-rWFaEyRuAP0/WTz3KX8cjbI/AAAAAAAAB60/8Ok9lFShHOsQFrbvjtoF407S4ukUpgsfACLcB/s1600/DSC_0232.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1065" data-original-width="1600" height="212" src="https://4.bp.blogspot.com/-rWFaEyRuAP0/WTz3KX8cjbI/AAAAAAAAB60/8Ok9lFShHOsQFrbvjtoF407S4ukUpgsfACLcB/s320/DSC_0232.JPG" width="320" /></a></div>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /><br /><br /><br /><br /><br /><br /><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b><br />
<b>அந்நாடகத்திற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?</b><br />
<b><br /></b><b> <span style="color: lime;">கருத்தரங்கிற்குத் தலைமை யேற்றிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன எண்பேராயக் குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உதிர்த்த ஆனந்தக் கண்ணீர்தான் .</span></b><br />
<b><br /></b><b> <span style="color: cyan;">ஆம் நாடகத்தில் குமணன் நாடிழந்து காட்டுக்குள் படும் துயரம் முதல் பெருந்தலைச் சாத்தனாரால் மனம் திருந்திய இளங்குமணன் தன் அண்ணனைத் தேடி ஓடி அண்ணனைக் கட்டித் தழுவி அவனிடம் தன் தவறுக்கு மண்ணிப்புக் கோரி மணிமுடியை ஒப்படைக்கும் காட்சி வரையிலான நாடகத்தை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிலம்பொலி செல்லப்பனார் நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து அகம் மகிழப் பாராட்டினார். </span></b><br />
<span style="color: cyan;"><b><br /></b><b> அப்போது பாராட்டுரைத்த கவிச்சுடர் கவிதைப் பித்தன் “அய்யா சிலம்பொலியார் விழிகள் சிந்திய ஆனந்தக் கண்ணீரே” இந்நாடகத்திற்கான சிறப்புப் பரிசென அறிவித்தார். </b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b>
<b>அந்தத் தமிழ்ச் சான்றோரின் கண்ணீர்த் துளிகளே கனகமணிகளினும் மேலாய் இன்றும் என்னுள்ளத்தில்</b> <b> .</b></span><br />
<b><br /></b>
<b><br /></b>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-CHo7sgkCukk/WTz70wWJhCI/AAAAAAAAB7A/Sb0Dr4VscG4nBCyesJQrG3d7Sp9ZHCYYwCLcB/s1600/DSC_0247.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1065" data-original-width="1600" height="265" src="https://3.bp.blogspot.com/-CHo7sgkCukk/WTz70wWJhCI/AAAAAAAAB7A/Sb0Dr4VscG4nBCyesJQrG3d7Sp9ZHCYYwCLcB/s400/DSC_0247.JPG" width="400" /></a></div>
<b><br /></b>
<b><br /></b>
<b> அம்மேடை நாடகத்தின் உரையாடல்கள் திருச்சி வானொலி நிலையத்தாரால் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டு, திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது .</b><br />
<b><br /></b>
<b> <span style="color: magenta;"> இது போன்ற இலக்கிய வரலாற்று நாடகங்களை உரிய பின்புலங்களோடு நடத்த வேண்டுமென என்னுள் அரும்பிய எண்ணங்களை ஈடேற்ற, மணிமன்றத்தின் முப்பதாம் ஆண்டு விழா மேடையில் , குறுந்தொகையில் பெண்கொலை புரிந்த நன்னன் என வரும் வரியினை மையப்புள்ளியாகக் கொண்டு “ துணை தேடும் கணையாழி” என்னும் வரலாற்று நாடகத்தை ஆக்கி பொது வெளி மேடையில் அரங்கேற்ற முனைந்தேன். </span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<span style="color: magenta;"><b>அந்த நாடக அரங்கேற்றத்தில் இதுவரை பட்டிராத </b><b>பட்டறிவு எங்களுக்கு.</b></span><br />
<b><br /></b>
<b> என்னவென அறிய ஆவலா? </b><br />
<b> -----பொறுத்திருங்கள் அடுத்த தொடரில் வரும். </b><br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-3593780492544000722017-06-07T09:14:00.001-07:002017-06-07T09:14:25.344-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் . தொடர்ச்சி-28<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: cyan; font-size: large;"><i>புகழ்ச்சியில் பணிவும், </i></span></b><br />
<div style="text-align: center;">
<b><span style="color: cyan; font-size: large;"><i>இகழ்ச்சியில் துணிவும்</i></span></b></div>
<br />
<b> வரலாற்று நாடகப் பயணத்தில், பொதுவெளி மேடை நாடக அரங்கேற்ற அனுபவங்களுக்கு முன், பள்ளி மேடைகளில் அரங்கேறிய வரலாற்று நாடக அனுபவங்களில் ஒன்றிரண்டைப் பதிவிடலாமென நினைக்கிறேன்.</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b> நான் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆண்டில் (1969) நாடெங்கும் காந்தியடிகள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.</b><br />
<b><br /></b>
<b> பள்ளிகளில் காந்தியடிகளின் வாழ்வியல் சிறப்புகளை, பாட்டு. நடனம், முதலான கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று அரசின் சுற்றறிக்கை.</b><br />
<b><br /></b>
<b> பலபள்ளிகளில் காந்தியின் புகழ்பற்றிய பாடல்கள், நடனங்கள் தயாரிக்கப்பட்டன. நான் பணிபுரிந்த மாலையீடு நகராட்சிப் பள்ளி, நகராட்சி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இருந்தது. பள்ளிச் செயல்முறைகளைப் பார்வையிட வந்த பள்ளித்துணை ஆய்வாளர் திரு பரமசிவம் அவர்கள் என்னை அழைத்து “எல்லாப் பள்ளிகளிலும் பாட்டும் ஆட்டமுமா இருக்கு . நீங்க காந்தி பற்றி ஒரு சின்ன நாடகத்தைத் தயாரிங்க” ன்னார்.</b><br />
<b><br /></b>
<b> அவர் அப்படி என்னைப் பணித்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நான் புதுக்கோட்டையில் ஆதார ஆசிரியர் பயிற்சி படித்த காலத்து அவர் எனக்கு ஆசிரியர் பயிற்றுநராக இருந்தவர். பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்து விடுதி விழாவில் நான் நடத்திய “வழிகாட்டி” என்ற நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியவர்.</b><br />
<b><br /></b>
<b> இன்னொன்று 1964ல் இருந்து நான் மணி மன்றம் </b><br />
<b>தொடங்கி, பிச்சத்தான்பட்டியில் பொது மேடையில் நடத்திய நாடகங்களை நகர வாசியாய் இருந்து பார்த்தவர். </b><br />
<b><br /></b>
<b> அந்த நம்பிக்கையில்தான் என்னிடம் நாடகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.</b><br />
<b><br /></b>
<b> அவர் பணித்ததைத் தட்ட முடியாமல் “காந்தியின் அகிம்சை” என்ற பெயரில் ஒரு பத்து நிமிட நாடகத்தைத் தயாரித்திருந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> மாவட்ட விழாக்குழு அந்த நாடகத்தைத் , காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் நடத்தத் தேர்வு செய்து விட்டனர்.</b><br />
<b><br /></b>
<b> இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு திறந்த ட்ரக்கில் அந்த நாடகக் குழு நகரின் முக்கிய இடங்களில் நாடகத்தை நடித்துக் கொண்டே விழா மேடைக்குச் செல்ல வேண்டும். அதாவது நகரும் நாடகக்குழுவாக.</b><br />
<b><br /></b>
<b> மூன்றாம் வகுப்பில் ஒரு மாணவனை மொட்டை யடிக்கச் செய்து உடன் நடிக்கும் நான்கு மாணவர்களையும் ட்ரக்கில் ஏற்றி அவர்களுடன் ஊர்வலத்தின் முன்னே எங்கள் பள்ளியின் நகரும் நாடகக்குழு நகர்ந்தது. நான்கு இடங்களில் நடித்துக் காட்டி நிறைவாக திருவப்புரில் நடந்த நிறைவு விழாவில் அரங்கேற்றியது.</b><br />
<b><br /></b>
<b> அது முதலாக நான் பணிபுரிந்த 13 நகராட்சிப் பள்ளிகளிலும் பள்ளி ஆண்டுவிழா என்றால் கலை நிகழ்ச்சிப் பொறுப்பு என் தலையிலேயே சுமத்தப்பட்டது.</b><br />
<b><br /></b>
<b> அப்படிப் பள்ளி ஆண்டுவிழாக்களில் நடத்திய வரலாற்று நாடகங்களில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் சிறு துளியான “மலைநாட்டு மன்னன்”, </b><br />
<b><br /></b>
<b> சிலப்பதிகாரத்தில் ”கண்ணகி” வழக்குரைத்த காதை, </b><br />
<b><br /></b>
<b> பிரான்சு வீரமங்கை ஜோன் ஆப் ஆர்க்கின் “ நெருப்பில் வீழ்ந்த மலர்” </b><br />
<b><br /></b>
<b> “ சாணக்கிய சபதம்” “ தலைக்கு ஒரு விலை”</b><br />
<b><br /></b>
<b> ஜான்சி ராணி இலக்குமிபாய் வீரம் பற்றிய</b><br />
<b>“விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” முதலியன.</b><br />
<b><br /></b>
<b> பள்ளி மேடைகளில் வரலாற்று நாடகங்களை நடத்துவதில் இரண்டு நெருக்கடிகளைச் சந்தித்தாக வேண்டும். ஒன்று பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் நாடகம் முடிய வேண்டும். ஏனென்றால் நடனம், பாடல், முதலான பல நிகழ்ச்சிகளுக்கு பல வகுப்புப் பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.</b><br />
<b><br /></b>
<b> இன்னொன்று குறைந்த பொருட்செலவில்தான் நாடகம் அமைய வேண்டும். </b><br />
<b><br /></b>
<b> சிறிய அரங்கினுள் பெரிதாக எந்த காட்சி அமைப்பையும் செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு திரைச் சீலைகள்தான். சிம்மாசனம், அரச உடைகள், கிரீடம் வாள் முதலிய அரங்கப் பொருள்களை நாடகம் தயாரிப்பவரே செய்து கொள்ள வேண்டும்.</b><br />
<b><br /></b>
<b> இந்த வரம்புக்குள் நடத்திய நாடகங்களிலும் வெற்றி பெற்றது ஒரு வரலாற்று நாடகம். </b><br />
<b><br /></b>
<b> திருச்சி வானொலி நிலையத்தார் புதுக்கோட்டை வந்து மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முதலான சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் மக்கள் மன்றத்தில் நடந்த “ விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது. அதுவே மறுமுறை நகர் மன்றத்திலும் நடத்தப்பட்டது.</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b> அந்நாடகம் இங்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி வானொலியில் பலமுறை ஒலிபரப்பப் பட்டது. நாட்டுப் பற்றை விளக்கும் கதை, உரையாடல், போர்க்களக் காட்சிகளில் யானை பிளிறல், குதிரைக் குளம்பொலி, கனைப்பு, வாள்களின் உரசல், துப்பாக்கிகளின் வெடிச் சத்தம் முதலான வற்றுக்கு எளிய கருவிகளால் உரிய ஒலிகளை அமைத்த இசையமைப்புப் பாங்கு முதலானவற்றால் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நாடகம் அது..</b><br />
<b><br /></b>
<b> எனது மேடை நாடகத்திற்கு ஒருமுறை தலைமை தாங்கி நாடகம் முழுமையையும் பார்த்து வியந்து பாராட்டிய வானொலி அண்ணா திரு இளசை சுந்தரம் அவர்கள் அளித்த அந்த வாய்ப்பை என்றும் மறக்க முடியாது. </b><br />
<b><br /></b>
<b> அதன் தொடர்ச்சியாக நான் திருச்சி வானொலி நாடகங்களில் நடிக்கவும் நாடகங்கள் எழுதவும் வந்த வாய்ப்புகள் தனிக்கதை.</b><br />
<b><br /></b>
<b> பள்ளி மேடை நாடகங்களில் நடித்த மாணவர்களின் திறமைகளையும் அவர்கள் இன்று வகிக்கும் பொறுப்புகளையும் நோக்க வியப்பாகவும் நகைப்பாகவும் இருக்கிறது.</b><br />
<b><br /></b>
<b> அன்று கண்ணகியாக உரிமைக்குப் போராடிய மாணவி, இன்று காவல் துணை ஆய்வாளராக இருக்கிறார்.</b><br />
<b> ( பெயர்கள் வேண்டாமென நினைக்கிறேன்) </b><br />
<b><br /></b>
<b> அன்று அகிம்சைவாதி காந்தியாக நடித்தவர் இன்று கராத்தே மாஸ்டராக இருக்கிறார். </b><br />
<b><br /></b>
<b> இராணி இலட்சுமி பாய் பாத்திரமேற்றவர் இன்று ஒரு பெரிய தனியார் நிறுவன நிருவாகியாக இருக்கிறார். </b><br />
<b><br /></b>
<b> அவுரங்கசீப்பை அலற வைத்த கலகக்காரனாக நடித்தவர் இன்று ஒரு நீதிமன்ற நடுவராக இருக்கிறார். </b><br />
<b><br /></b>
<b> அவர்களுக்கு ஆசிரியராக இருந்த நான் அவர்களை உயர்த்திவிட்ட ஏணியாகவே ஓய்வு பெற்று, அவர்களின் உயர்வில் பெருமைப்பட்டு இருக்கிறேன்.</b><br />
<b><br /></b>
<b> ஒரு முறை ஒரு சிறுபான்மை தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் , வீர சிவாஜி நாடகத்தை நடத்தக் கேட்டார்கள். நான் அப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெண்பாத்திரமே இல்லாத ஒரு நாடகத்தை வெறும் பெண் குழந்தைகளை வைத்து எப்படி நடத்துவது ? என்று கேட்டேன். அதில்தான் உங்கள் திறமையைக் காட்ட வேண்டுமென்று ஒரு சவால்போலச் சொன்னார்கள். </b><br />
<b><br /></b>
<b> நானும் அதைச் சவாலாகவே எடுத்துக் கொண்டு அம்மாணவியர்க்குப் பயிற்சியளித்தேன். </b><br />
<b><br /></b>
<b> அப்பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த நிகழ்ச்சிக்கு பரிசளிப்பதுண்டு என்பதால் பல கலைநிகழ்ச்சிகள் போட்டிக்கானவையாகவே நடந்தன. </b><br />
<b><br /></b>
<b> ஆண்டுவிழா நிறைவில் பரிசுக்குரிய நிகழ்ச்சியாக</b><br />
<b> “ மலைநாட்டு மன்னன்” நாடகம் அறிவிக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. </b><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-UN2hvAmjOoY/WTgQdlsQXrI/AAAAAAAAB6U/6aEu67MpcrwZmW4BZgczDfZ5SfUhU8FuACLcB/s1600/IMG_6864.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://3.bp.blogspot.com/-UN2hvAmjOoY/WTgQdlsQXrI/AAAAAAAAB6U/6aEu67MpcrwZmW4BZgczDfZ5SfUhU8FuACLcB/s640/IMG_6864.jpg" width="640" /></a></div>
<br />
<b> எல்லாக் குழந்தைகளிடமும் எல்லாத்திறமைகளும் புதைந்துதான் கிடக்கின்றன. அகழ்ந்தெடுக்கும்போதுதான் அதனதன் மகத்துவம் புரிகின்றது.</b><br />
<b><br /></b>
<b> அதே போல புதுக்கோட்டை ஜே.சி.ஐ யும் கண்ணதாசன் நற்பணி மன்றமும் நடத்திய நாடகப் போட்டியிலும் மாணவர்கள் நடித்த மலைநாட்டு மன்னன் நாடகம் முதல் பரிசு பெற்றதைக் குறிப்பிட்டாக வேண்டும்.</b><br />
<b><br /></b>
<b> பரிசு பெற்றதைப் பெருமையாக நினைக்கும் அதே வேளையில் புறக்கணிக்கப்பட்டபோது பட்ட வேதனையையும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.</b><br />
<b><br /></b>
<b> 1970 களில் புதுக்கோட்டையில் மாவட்ட நிருவாகம் “ஆடிப்பூரம் ” பொருட்காட்சி நடத்திய காலம். பலதுறை சார்ந்த சிறப்புகள் பொருட்காட்சி அரங்குகளில் வைக்கப்படும். ஒவ்வொருநாள் மாலையும் இரண்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.</b><br />
<b><br /></b>
<b> அப்படி ஒருநாள் கல்வித்துறை சார்பான கலை நிகழ்ச்சியில், நான் பணிபுரிந்த பள்ளி சார்பாக “ தலைக்கு ஒரு விலை” என்ற எனது முப்பது நிமிட நாடகம் நடத்த வாய்ப்பு தரப்பட்டது. </b><br />
<b><br /></b>
<b> குமணவள்ளல் பற்றிய வரலாற்று நாடகம் அது. பொதுமக்கள் கூடும் பெருவெளி மேடை என்பதால் திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடுமையாகப் பயிற்சியளித்திருந்தேன். </b><br />
<b><br /></b>
<b> கல்வித் துறை அலுவலரும் முழு ஒத்திகையைப் பார்த்து அருமை எனப் பாராட்டி அரங்கேற வாய்ப்பளித்தார். </b><br />
<b> அரச இருக்கை, உடைகள். வாள், கிரீடம் முதலியவற்றை வாடகைக்கு எடுத்து மாலை 6.30 மணி நாடகத்திற்கு 4.00 மணிக்கே ஒப்பனை செய்து மாணவர்களை ஆயத்த நிலையில் வைத்திருந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> தொடக்கத்தில் நடந்த நாதசுர கச்சேரிக் காரர்கள் 6.45க்குத்தான் மேடை விட்டார்கள். அரசவை நடனத்துடன் தொடங்கிய நாடகம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது.</b><br />
<b><br /></b>
<b> படைத்தளபதியின் சூழ்ச்சியால் இளங்குமணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு குமணன் காட்டுக்குச் செல்கிறான். </b><br />
<b><br /></b>
<b> காட்டில் அவன் தனித்து வருந்தும் உணர்ச்சி மயமான காட்சி நடந்து கொண்டிருந்தது. </b><br />
<b><br /></b>
<b> “போதும் நிறுத்துங்க நாடகத்தை” என்ற குரல் மேடையின் பக்க மறைவிலிருந்து வந்தது.</b><br />
<b><br /></b>
<b> அதை பொருட்படுத்தாது நாடகத்தைத் தொடர்ந்தேன். </b><br />
<b><br /></b>
<b> குமணனிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க விரும்பாமல் குமணனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன்கழஞ்சு என முரசடிக்க வைக்கிறான் தம்பி இளங்குமணன். </b><br />
<b><br /></b>
<b> “ இப்போ நிறுத்தப் போறியா இல்லையா?”</b><br />
<b><br /></b>
<b> கோபாவேசத்தோடு ஒருவர் மேடைக்குள் நுழைந்தார்.</b><br />
<b><br /></b>
<b>யார் இவர்? ஏன் நிறுத்தச் சொல்கிறார்? புரியாமல் விழித்தேன்.</b><br />
<b><br /></b>
<b> --- அடுத்து நடந்ததை அடுத்த தொடரில் </b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b> </b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-22211784309009236972017-06-04T10:58:00.000-07:002017-06-04T10:58:32.600-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-27<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;">விழி திறந்து ஒளி தந்த மகளே</span></b></div>
<br />
<b><span style="color: lime;"> “தனிக்குடித்தனம்” நாடகத்திற்கு தலைமையேற்ற சிறப்பு விருந்தினரை வழியனுப்பிவிட்டு, நாடகத்தைத் தொடங்க வேகமாக மேடைக்கு ஓடியபோது, அங்கே நாடகத்தில் நடிக்கக் கூடிய மன்ற நடிகர்கள் எல்லோரும் திரை திறந்த ஒளிமேடையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> என்னைப் பார்த்ததும் “ மாட்டோம் மாட்டோம் நாடகத்தில் நடிக்க மாட்டோம்” என ஆர்ப்பாட்டக் குரல் கொடுத்தார்கள்.</span></b><br />
<b><span style="color: lime;">“என்னப்பா பிரச்சனை?”</span></b><br />
<b><span style="color: lime;"> “நிறைவேற்று நிறைவேற்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்று”</span></b><br />
<b><span style="color: lime;">“ என்னப்பா உங்க கோரிக்கை?“</span></b><br />
<b><span style="color: lime;">“நிறைவேற்ற உறுதி கொடு”</span></b><br />
<b><span style="color: lime;">“என்னன்னு சொன்னாத்தானே முடியுமா முடியாதான்னு சொல்லமுடியும்”</span></b><br />
<b><span style="color: lime;">“ உங்களாலே முடியும். உறுதி கொடுங்க ”</span></b><br />
<b><span style="color: lime;"> “ நேரமாயிடுச்சு, எதுவானாலும் நாடகம் முடிஞ்சு பேசிக்குவோம்“</span></b><br />
<b><span style="color: lime;">“முடிஞ்ச பிறகு எதுக்கு? தொடங்கும் முன்னே செய்யுங்க”</span></b><br />
<b><span style="color: lime;">“ என்ன செய்யணும் சொல்லுங்க”</span></b><br />
<b><span style="color: lime;">செய்யுறேன்னு சொல்லுங்க”</span></b><br />
<b><span style="color: #ead1dc;"> “ இப்போ நாடகத்தை நடத்தப் போறீங்களா இல்லே கல்லெறி வாங்கப்போறீங்களா? -- பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குடிமகனின் மிரட்டல் குரல்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“செல்வின் சார், நீங்க சிலைடைப் போடுங்க” நாடகத்தை ஆரம்பிப்போம்” - ஒளிப்பதிவாளரிடம் நான்</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">” போடாதே போடாதே. சிலைடு போடாதே” கூட்டாக எதிர்ப்புக் குரல் மேடைக் கலைஞர்களிடமிருந்து </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> “ இப்ப என்னதான் செய்யணுங்குறீங்க?“</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“ முதல்ல நாங்க கேக்குறதைச் செய்யுறேன்னு சொல்லுங்க”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: #ffe599;"> </span><span style="color: #45818e;"><span style="color: #ffe599;">“ </span><span style="color: blue;">அட செய்யுறேன்னுதான் சொல்லேய்யா” தர்ணாவுக்கு ஆதரவாக ஒரு ரசிகரின் குரல்.</span></span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“ சரி செய்யுறேன், என்ன செய்யணும்?</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“அப்படிவாங்க வழிக்கு, 30நாள் 40 நாள்ன்னு எங்களை ஒத்திகை ஒத்திகைன்னு போட்டு வதைக்கிறீங்கல்ல, எங்களை யாருன்னு மக்களுக்கு அடையாளம் காட்டுறீங்களா?” கதைத்தலைவனா நடிக்க இருந்தவரின் கேள்வி</span></b><br />
<b><span style="color: lime;">“என்னப்பா நாடகத் துண்டறிக்கையிலே எல்லோருடைய பெயர்களையும் அச்சடிச்சுத் தானே விளம்பரம் பண்றோம்.”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“நோட்டீசிலே சரி, மேடையிலே....?”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> ”அதான் வெள்ளைத் திரையில வண்ண சிலைடுல பெயர்களைப் போடுறோமுல்ல”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“அது எங்க ஆயி அப்பன் வச்ச பேரு, இந்த மூனு மணி நேரத்துக்கு எங்களுக்கு என்ன பேரு?</span></b><br />
<b><span style="color: lime;">.......</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“ சார் , நாடகத்திலே என்ன பேருல நடிக்கிறோம்” மன்றத் தலைவரின் கேள்வி</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“ நீங்க காதர்பாட்சாவா. அவரு பாட்டு வாத்தியார் பசவப்பா”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“அப்படி கேரக்டர் பேரைச் சொல்லி எங்களை மேடையில அறிமுகப் படுத்துங்க”</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">“அவ்வளவுதானே. செஞ்சுடுறேன். எல்லாம் எந்திரிச்சு அந்த நீலத்திரைக்குப் பின்னாலே போங்க” ன்னு சொல்லிட்டு அவங்க கோரிக்கையை நிறைவேற்றத் தொடங்கினேன்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> ஒவ்வொருவருடைய நாடகப் பாத்திரப் பெயரையும் நடிப்பவர் பெயரையும் நான் சொல்லச் சொல்ல ஒவ்வொருவராக வந்து தங்களின் “பஞ்ச்” டயலாக் ஒன்றைச் சொல்லிச் சென்றனர்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> நாடகம் பார்வையாளர்களின் கையொலியுடன் கலகலப்பாகத் தொடங்கியது .</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> நாங்கள் முன்னரே திட்டமிட்டுச் செய்த ஒருவகை</span></b><br />
<b><span style="color: lime;"> “அறிமுக உத்தி” என்பது பார்வையாளர்களுக்குத் தெரியவா போகிறது?</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b> பெண்சிசுக் கொலை.</b><br />
<b><br /></b>
<b> பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியும், நெல் மூக்கைச் செருகியும் கொன்றழிக்கும் ஈனச்செயல் தென்மாவட்டக் குக்கிராமங்களில் நடப்பதான செய்தி நாளேடுகளில் பரபரத்த வேளை.</b><br />
<b><br /></b>
<b> பெண்சிசுக் கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தி 1994ல் ஆக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த மேடை நாடகம்தான்</b><br />
<b> “ விடியலைத்தேடி”</b><br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-_7mH1DZGVP4/WTQX8DIrUeI/AAAAAAAAB4c/9u0jpPygwNUcS8gKlNCQXjmhdw3WnKLSQCLcB/s1600/IMG_6896.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://3.bp.blogspot.com/-_7mH1DZGVP4/WTQX8DIrUeI/AAAAAAAAB4c/9u0jpPygwNUcS8gKlNCQXjmhdw3WnKLSQCLcB/s400/IMG_6896.JPG" width="400" /></a></div>
<br />
<br />
<b> பெண்களுக்குத் திருமணத்தின்போது சீர்வரிசை செய்வதைச் சுமையாகக் கருதி, அந்தியுர் என்ற கிராமத்தில், பெண்குழந்தை பிறந்தால் உடனே அக்குழந்தையின் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியோ, நெல்சுனையை அக்குழந்தையின் தொண்டைக்குள் செருகிக் கொன்று புதைத்து விடும் சமூகஅநீதிச் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. பள்ளி. போக்கு வரத்து செய்தித் தொடர்பு என்ற எவ்வித வசதிகளும் இல்லாத அந்த மலைக்கிராமம் கங்காணியார் குடும்பம் என்ற ஒரு தனிக் குடும்பத்தின்</b><b> சர்வாதிகாரத்தில் இயங்கும் </b><br />
<b>ஒரு த னித் தீவாகவே இருந்து வந்தது.</b><br />
<br />
<b><span style="color: cyan;"> இரண்டு முறை பெண்குழந்தை பிறந்து அவற்றைக் கொன்ற பின்னர் மூன்றாவதும் பெண்குழந்தையாகப் பிறந்தால், அப்பெண் தன் கணவனை விலக்கிவிட்டு ஆண்குழந்தை வேண்டி வேறு கணவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முரண்பாடான நடை முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது அக்கிராமத்தில்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> அந்த கங்காணி மகள் குருவம்மாவுக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் கொன்று புதைக்க அக்குழந்தையின் தந்தை கொண்டையனிடமே ஒப்படைக்கிறார் கங்காணி. அவன் அக்குழந்தையைக் கொல்ல விரும்பாமல் அடுத்த ஊர் தமுக்கு அடிக்கும் கொம்பேறி என்பவனிடம் வளர்க்க ஒப்படைத்து விட்டு கரடிக்காட்டிற்குள் தலைமறைவாகிறான் கொண்டையன்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தாய் முகம் தெரியாது, தன்னை வளர்த்த கொம்பேறியே தனது தந்தை என நினைத்து வேணி என்னும் பெயரில் வளர்கிறாள் அக்குழந்தை . அப்படி வளர்ந்த அந்தப்பெண் படித்துப் பட்டம்பெற்று புலனாய்வுக் காவல் ஆய்வாளராகிறாள்.</span></b><br />
<br />
<b> அந்தியுரில் நடக்கும் சிசுக் கொலை தடுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட வேணி, மாறுவேடத்தில் அந்தியுர் வந்து கங்காணி வீட்டில் எடுபிடியாக இருக்கும் ஊமைத்துரை என்னும் வெகுளியோடு பழகி இரகசியங்களைச் சேகரிக்கிறாள்.</b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-1ckQHJ5YKcc/WTQp4UvswHI/AAAAAAAAB4k/EMVE2pOYzu0NRE1jnGwJ8nnL6LleXnMNwCLcB/s1600/IMG_6847.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://3.bp.blogspot.com/-1ckQHJ5YKcc/WTQp4UvswHI/AAAAAAAAB4k/EMVE2pOYzu0NRE1jnGwJ8nnL6LleXnMNwCLcB/s400/IMG_6847.jpg" width="400" /></a></div>
<br />
<b>கொண்டையனை விலக்கிவிட்டு புலிக்குட்டி என்பவனைத் தன் மகள் குருவம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் கங்காணி. வெடிவிபத்தில் கங்காணி இறந்ததும் குருவம்மாள் அந்த கிராமத்தையே ஆட்டிப் படைக்கிறாள்.</b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> பெண்சிசுக்களைக் கொல்வதில் கொடூரமாக நடந்து கொள்ளும் கு ருவம்மாவுக்கு அவளுடைய மகன் கோபால் முரடனாகத் தாயின் அன்முறைக்கு துணையாகிறான்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> உளவுபார்க்க வந்திருக்கும் வேணியை ஊரைவிட்டு விரட்ட அவளின் தந்தை வெட்டியான் கொம்பேறியை அடியாள்களை வைத்துத் தாக்குகிறான். கடுமையான தாக்குதலால் இறக்கும் நிலையில், கொம்பேறி வேணியோடு பழகும் ஊமையனிடம் தனது மகள் இல்லை, கொண்டையன் மகள் என்பதைச் சொல்லி இறந்து விடுகிறான்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> தன் தந்தை இறப்புக்குக் காரணமான கோபாலைச் சட்டத்தின் முன் நிறுத்த வேணி முயற்சிக்கையில் அவளை தன் கூலிப்படை மூலம் கடத்திக் கொல்ல முயற்சிக்கிறாள் குருவம்மா.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> கொம்பேறி இறந்ததையும், அவனால் வளர்க்கப்பட்ட தன் மகள் வேணி குருவம்மாவால் கொடுமைப் படுத்தப்பட இருப்பதையும் ஊமைத்துரை மூலம் அறிந்த கொண்டையன், வேணியைக் காப்பாற்ற வருகிறான். </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> </span><span style="color: yellow;"> வேணியைத்தூணில் கட்டி வைத்து மண்ணெண்ணையை ஊற்றி எரிக்க முயலும் குருவம்மாவைத் தடுத்து, வேணி தங்கள் மகள் என்னும் உண்மையைச் சொல்கிறான் கொண்டையன்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> பெண்களால்தான் ஒருசமூகம் முன்னேறமுடியும். மாற்றத்திற்கான விதைகள் பெண்களாலே விதைக்கப்படுகிறது. பெண்கள் இல்லாத உலகு விடியல் இல்லாத இருளாகவே இருக்கும், மணம்தரும் மலர்களை அரும்பில் அமிலம் ஊற்றிக் கருக்கலாமா? எனப் பெண்களின் அருமை பெருமைகளை குருவம்மாவுக்கு உணர்த்துகிறான் கொண்டையன். </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> பெண்சிசுக் கொலைக்கு ஒரு பெண்ணான தானே காரணமாகியிருந்த தனது செயலுக்கு வருந்துகிறாள் , பெண்குழந்தைகளை அரும்பவிடாமல் அழித்து மனித குலத்தையே குருடாக்கிய தனக்கு தன்மகளே விழி திறந்து </span></b><br />
<b><span style="color: yellow;">ஒளிதந்தவள் எனப் பெருமை கொள்கிறாள். </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<br />
<b><span style="color: magenta;"> --- அடுத்த தொடரில் வரலாற்று நாடக அனுபவங்கள்.</span></b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-8936407536383371042017-06-01T05:20:00.001-07:002017-06-01T05:20:39.276-07:00எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி- 26<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: blue; font-size: large;">நாற்றங்காலும் நடவுப் பயிரும் </span></b></div>
<br />
<br />
<b><span style="color: lime;"> மாற்றுக் கருத்துகளைக் கருத்து ரீதியாக எதிர் கொள்வர் </span></b><b><span style="color: lime;">கொள்கை வாதிகள் சிலர் . குள்ளநரிகளாய் கூட இருந்தே அடுத்துக் கெடுப்பவர் பலர். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> எனது முற்போக்கு நாடகக் கருத்தகளை விரும்பாத அத்தகு குள்ளநரி ஒன்று. “ கரையேறிய அலைகள்” நாடகத்தில் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடிக்க, இருபது நாள்களாகப் பயிற்சி பெற்றிருந்த ஒருவரை நாடகத்தின் முதல்நாள் கடத்திவிட்டார்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> இறுதி முழு ஒத்திகையின்போது அவரைக் காணாது தேடினால் அவரது அண்ணன் அவரை மேல்மருவத்தூருக்கு ஒரு அவசர ஆன்மீகப் பணிக்காக அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> “அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தில் கதைத் தலைவனாக நடிக்கப் பயிற்சியெடுத்தவர் திடீரென பணி மாறுதல் காரணமாக சென்னை சென்றுவிட, நான் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கசப்பான பட்டறிவால், அடுத்தடுத்த நாடகங்களில் நான் எந்த முதன்மைப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்காமல் என்னை எதற்கும் தயாரான நிலையிலேயே ( ஒரு ஜோக்கர் போல ) வைத்திருப்பேன். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> எந்த க்காலி இடத்தையும் இட்டு நிரப்பும் திறமை யுள்ளவன்தான் ஒரு மேடைநாடக இயக்குநராக இருக்க முடியும் என்பது எனது மேடை நாடக அனுபவம்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அந்த வகையில் இந்த நாடகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்கக் காவல் ஆய்வாளர் பாத்திரத்தை நானே ஏற்று நடித்து, நாடகம் நின்றுபோகும் எனக் குள்ளநரி கண்ட கனவினைக் களைத் தொழித்தேன். </span></b><br />
<br />
<b><span style="color: yellow;"> “இத்தனைக்குப் பிறகும் மேடை நாடகத்தைத் தொடர வேண்டுமா?” என்ற விரக்தியில் சோர்ந்து போயிருந்த எனக்கு அரசு வழக்குரைஞராக அப்போதிருந்த திரு எருதலான், திரைப்பட இயக்குநர் மகேந்திரா போன்றவர்கள் “சமூக மாற்றத்திற்கான கூர்ப்புள்ள கருவி மேடை நாடகங்கள்”, விடாது தொடருங்கள் எனப் புத்துணர்ச்சியளித்துத் தொடரச் செய்தனர்.</span></b><br />
<br />
<b> அந்தத் தெம்பினில் 1987ல் இரு முறையும், 1990ல் இருமுறையும் சிறப்பாக அரங்கேறிய சமூக நாடகம்தான் “ தனிக்குடித்தனம்”</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-WZrksNfLwBg/WS_p-LmZtWI/AAAAAAAAB3I/6RPeQjb0-U8qdyHUTK0ZlSaeVK9XGe23gCLcB/s1600/IMG_6790.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1043" data-original-width="1600" height="260" src="https://2.bp.blogspot.com/-WZrksNfLwBg/WS_p-LmZtWI/AAAAAAAAB3I/6RPeQjb0-U8qdyHUTK0ZlSaeVK9XGe23gCLcB/s400/IMG_6790.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b> இந்த நாடகக் கதையும் ஒரு பெண்ணின் சீர்மைச் செயலை உட்கருவாகக் கொண்டதுதான்.</b><br />
<br />
<b><span style="color: cyan;">ஒரு குடும்பத்தில் தலைமகனாய்ப் பிறந்தவன்தான் அந்தக் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் வாழ்நாள் முழுதும் சுமக்கவேண்டுமா? அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகளுக்குத்தான் அத்தனை சுமைகளுமா? என்ற கேள்விகளுக்கு , அந்த தலைமகனுக்கு மனைவியாய் வந்த பெண் மூலம் விடை தேடுவதாய் அமைந்தது இந்நாடகம்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> படிப்பு, பருவம், உடல்திறன் அனைத்தும் இருந்தும் அண்ணன் வருவாயில் ஆடம்பரமாய் வாழ நினைத்த தனது கணவனின் தம்பி, தங்கை ஆகியோர்க்கு குடும்பப் பொறுப்பை உணர்த்த முயல்கிறாள் தலைமகனின் மனைவி பரிமளம். உடன் பிறந்த தங்களைவிட இடையில் வந்தவளுக்கு என்ன உரிமை என,</span></b><br />
<b><span style="color: cyan;">தங்கள் சுகபோகத்திற்குத் தடையாய் இருப்பதாய் அ ண்ணியின் அறிவுரையை அலட்சியம் செய்கின்றனர் தலைவனின் உடன் பிறப்புகள்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> அவர்களுக்குப் பணத்தின் அருமையை உணர்த்தவும், வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் , தான் ஒரு எதிர்த் தலைவியாக மாறித் தனது கணவனோடு அந்த வளாகத்திலேயே ஒரு வீட்டிற்குத் தனிக்குடித்தனம் போகிறாள் கதைத் தலைவி பரிமளம்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தங்களைத் தவிக்கவிட்டுத் தங்கள் அண்ணனோடு தனிக்குடித்தனம் சென்ற பரிமளத்தை அவள் கொழுநனும், நாத்தியும் எதிரியாக நினைத்து வெறுக்கின்றனர்.</span></b><br />
<br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தனித்து விடப்பட்ட இருவரும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதிலும், அவர்களுக்கு வருமானத்திற்கான வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும் , மறைமுகமாக உதவுகிறாள் பரிமளம்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தனது அண்ணனைவிட அதிக வசதிகளை அடைய, குறுக்கு வழியில் பொருளீட்ட முனைத்த தம்பி முத்து, ஒரு மோசடிக் கும்பலில் சிக்கித் தவிக்கிறான். தனது அண்ணியைவிட மேலான நகை, புடவைகளுக்கு ஆசைப்பட்ட விசயா ஒரு ஆடம்பரப் பிரியனை நம்பி மோசம்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> அவர்களை அவர்களின் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி, இருவருக்கும் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வாழ்க்கை அனுபவங்களை உணர்த்துகிறாள் பரிமளம்.</span></b><br />
<b><span style="color: cyan;"> பரிமளத்தின் நல்லெண்ணச் செயல்களால் நாணப்பட்ட இருவரும் இறுதியில் கூட்டாகச் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தனியே இருக்கும் போதுதான் சொந்தக் காலில் நிற்கும் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பங்கள் பிரிந்து இருந்தாலும் பாசம் என்றைக்கும் சேர்ந்தே இருக்கும் என அறிவுறுத்தி அவர்களைத் தனிக்குடித்தனம் அமர்த்துகிறாள் பரிமளம். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> நகைச் சுவை, செட்டிங், இவற்றால் இந்நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<br />
<div style="text-align: center;">
<b>இந்த நாடகத்தில் இரண்டு புதிய முயற்சிகள். </b></div>
<br />
<b><span style="color: magenta;"> திரைகளைக் கொண்டு காட்சிப் பின்புலத்தை மாற்றுவதைத் தவிர்த்து, ஒரே அரங்க அமைப்பில், மாடிப்படியோடு கூடிய நான்கு குடியிருப்புகளைக் காட்டுவது. மூன்று நுழைவாயில் கொண்ட குடியிருப்புகள் கீழே. மாடியில் ஒரு குடும்பம் வசிப்பதாகக் காட்டுவது .</span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<b><span style="color: magenta;"> அதற்காக ஒரு மாதம் முயன்று செட்டிங் தயாரித்திருந்தேன். ஒவ்வொரு குடும்பத்தின் செயல் நடப்பை அந்த வீட்டின் விளக்கால் பிரித்து அடையாளப்படுத்தி யிருந்தேன்.</span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<b><span style="color: magenta;"> விளக்குகள் எரிய வேண்டிய குறிப்புகளை ஒளியமைப்பாளர் ஒரு காட்சியில் மாற்றி எரியவிட, குடியிருப்பு மாறிப்போன குழப்பம் ஓரிடத்தில்.</span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<b><span style="color: magenta;"> மேடை மாடிப்படியில் ஏறிப்போனவர்கள் இறங்க வழியின்றித் திண்டாடியதும், வெளியிலிருந்து காட்சிக்கு வரவேண்டியவர்கள் இறங்காமல் அங்கேயே நின்ற தால் அடுத்த காட்சிக்கு வெளியிலிருந்து வரமுடியாமல் தவித்த முரண்நகைச் சுவைகளும் நடந்தன.</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-ywcb39ze8ag/WS_81QaW-GI/AAAAAAAAB3k/95AbnzIf4-wBy8hysxVPVWenk0fsEMZzwCLcB/s1600/IMG_6861.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://4.bp.blogspot.com/-ywcb39ze8ag/WS_81QaW-GI/AAAAAAAAB3k/95AbnzIf4-wBy8hysxVPVWenk0fsEMZzwCLcB/s640/IMG_6861.jpg" width="480" /></a></div>
<br />
<br />
<b> நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தவர்களை கவனித்துவிட்டு நாடகத்தைத் தொடங்க மேடைக்கு நான் வந்தபோது...</b><br />
<b><br /></b>
<b> நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் “நடிக்க முடியாது” என்று மேடையிலேயே ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர். </b><br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-03GGQkIcMc4/WS__ln7QenI/AAAAAAAAB38/3nfB7-SH5M0yCpHJLz_Gq7frhqpsogyKwCLcB/s1600/IMG_6854.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://3.bp.blogspot.com/-03GGQkIcMc4/WS__ln7QenI/AAAAAAAAB38/3nfB7-SH5M0yCpHJLz_Gq7frhqpsogyKwCLcB/s400/IMG_6854.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b><span style="color: blue;">அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்?</span></b><br />
<br />
<b><i>--- அடுத்த தொடரில் </i></b><br />
<br />
<br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-45227054252997320112017-05-30T03:02:00.001-07:002017-05-30T03:02:58.755-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-25<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: cyan;"> </span><span style="color: yellow; font-size: large;"><i> பைத்தியமாய் ஒரு வைத்தியம் </i></span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> “நாட்டாமை தீர்ப்பை மாத்து” என்ற திரை வசனம் போல, செம்பறவை நாடகத்தைப் பார்த்த ஒரு பெண்ணிய வாதியிடமிருந்து வந்த கருத்து மடலில்</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> “ கெடுக்கப்பட்டவள் இறுதியில் சாகத்தான் வேண்டுமா?”</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">என்ற கேள்வி என்னை உலுக்கத்தான் செய்தது.. என்றாலும் ஒரு வன்முறையாளனைப் பழிவாங்க அவனது மனைவியை இரு முரடர்களை வைத்து வன்புணர்ச்சிக்குள்ளாக்கி ஒரு பெண்ணே கொன்றதும், இன்னொருவனைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதுமான குற்ற நடவடிக்கைகளை அவள் சந்திக்க வேண்டியதைத் தவிர்க்கவும், </span></b><b><span style="color: cyan;"> புகழ்பெற்ற மருத்துவரின் மகளாக சமுதாயத்தில் மதிப்பிலிருக்கும் ஒரு பெண்மருத்துவரின் தாய் ஒரு விலைமாது என்ற அவப்பெயரை தன்மகள் அறியாமலிருக்கவும், அந்தச் செம்பறவைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதாக அந்நாடகத்தின் முடிவை அமைத்திருந்தேன். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b> அந்தக் குறையினை 1988ல் அரங்கேற்றிய </b><br />
<b> “ கரையேறிய அலைகள்” என்ற நாடகத்தின் மூலம் போக்க முயற்சித்திருந்தேன்.</b><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-Fqr-rP705sw/WS0V1UtIMBI/AAAAAAAAB0s/cwbMiu99HtQPnahFCDjMzaYZ6-i07GGbACLcB/s1600/IMG_6793.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1068" data-original-width="1600" height="425" src="https://3.bp.blogspot.com/-Fqr-rP705sw/WS0V1UtIMBI/AAAAAAAAB0s/cwbMiu99HtQPnahFCDjMzaYZ6-i07GGbACLcB/s640/IMG_6793.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b><span style="color: yellow;"> மணக்கொடை என்னும் வரதட்சணை மறுத்தும், சீர் பொருள்கள் வெறுத்தும், ஆடம்பரமில்லாத திருமணத்தை விரும்பும் ஒரு வரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார் ஒரு மதுரை செல்வந்தர்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> மருமகனை நம்பி திருவனந்தபுரத்திலிருக்கும் தனது தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்க ஒரு பெருந்தொகையைக் கொடுத்து அனுப்புகிறார் அந்த செல்வந்தர்..</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> இருசக்கர உந்தூர்தியில் மலைப்பாதை வழியே தனது நண்பனுடன் சென்ற அவன், ஒரு விபத்தில் மலை உச்சியிலிருந்து வண்டியோடு விழுந்து எரிந்து இறந்து போகிறான். மருமகன் இறந்த செய்தி கேட்ட செல்வந்தர் மாரடைப்பால் இறக்கிறார்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> கணவனையும் தந்தையையும் இழந்த துக்கம் தாழாத மல்லிகா ( செல்வந்தரின் மகள் ) வைகை நீர்த்தேக்கத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருளாந்து, அவளைக் காப்பாற்றி மனவளர்ச்சி குன்றிய தன் பருவ வயது மகள் சித்ராவுக்குத் துணையாக இருக்கட்டும் என்று மல்லிகாவைத் தன்னுடன் சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் செல்கிறார்.</span></b><br />
<br />
<b> அங்கு தனது தொழிற்சாலையின் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை மல்லிகாவுக்குக் கொடுக்கிறார்.</b><br />
<b><br /></b>
<b> ஆறுமாதங்கள் உருண்டோட, அந்தத் தொழிலதிபரின் மன வளர்ச்சி குன்றிய மகள் சித்ராவுக்கு வாழ்வளிக்க விரும்புவதாக ஒரு இரங்கூன் மருத்துவர் வருகிறார்.</b><br />
<b><br /></b>
<b> அந்த மருத்துவ மணமகனைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியடைகிறாள். இறந்து போனதாக தான் நம்பிக்கொண்டிருந்த தனது கணவன் விநோத் , இரங்கூன் டாக்டர் கிஷோராக அங்கே வந்திருப்பதை அறிகிறாள்.</b><br />
<br />
<b><span style="color: lime;"> தன்னை வளர்ப்பு மகளாகக் கருதும் தொழிலதிபர் அருளாந்திடம் மாப்பிள்ளையாக வந்திருப்பது தனது கணவன்தான் எனக் கூறுகிறாள்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> விபத்தில் இறந்ததாக அடையாளப் படுத்திவிட்டு, மெய்யப்பர்( மல்லிகாவின் தந்தை) கொடுத்த பெருந்தொகையோடு பெங்களுரில் தலைமறைவாக இருந்து வரும் விநோத், மல்லிகாவை அந்த வீட்டில் பார்த்து அதிர்ந்தாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல், மல்லிகாவைத் தனக்கு யாரென்றே தெரியாது என்று நடிக்கிறான். தான் இரங்கூனிலிருந்து வந்த டாக்டர் என்று போலிச் சான்றிதழ் காட்டி தனது கையாள்களை வைத்து தொழிலதிபரை நம்ப வைக்கிறான்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> மல்லிகா அவனிடம் தங்கள் பழைய நிகழ்வுகளை நினைவு படுத்த, அவன் மல்லிகாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என ஒரு போலி மனநல மருத்துவரை வைத்து அருளாந்தை நம்ப வைக்கிறான்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> காவல் நிலையத்தில் விநோத்தின் வஞ்சகச் செயல் பற்றிப் புகார் கொடுக்கச் செல்கிறாள் மல்லிகா. அவளிடம் விநோத் - மல்லிகா திருமணம் நடந்ததற்கான சான்றுகளை காவல்துறை அதிகாரி கேட்க, அழைப்பிதழோ, போட்டோவோ, திருமணப் பதிவோ திருமணம் நடந்ததை நிரூபிக்கும் சாட்சிகளோ அவளிடம் இல்லாமையால் அவள் புகார் புறக்கணிக்கப் படுகிறது. </span></b><br />
<br />
<b> மனநல வைத்தியருடன் மல்லிகாவைத் தேடி காவல் நிலையம் வந்த அருளாந்தும் அவளைப் பைத்தியம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்</b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-hkdZ3ayWv1c/WS02ap3TtsI/AAAAAAAAB1I/oWXAekJ82pAJjbpndBf6j3fwjqn48L0-ACLcB/s1600/IMG_6849.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://4.bp.blogspot.com/-hkdZ3ayWv1c/WS02ap3TtsI/AAAAAAAAB1I/oWXAekJ82pAJjbpndBf6j3fwjqn48L0-ACLcB/s640/IMG_6849.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b>மல்லிகாவினால் தனது திட்டம் பாழாகிவிடும் என அஞ்சிய விநோத், இரண்டு நாள்களில் சித்ராவைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய இதயநோய் மருத்துவமனை சித்ரா பெயரில் கட்ட கால்கோள் நடத்தச் செல்ல வேண்டுமென்று தொழிலதிபர் அருளாந்துக்கு நெருக்கடி கொடுக்கிறான், மல்லிகா அந்தத் திருமணம் நடைபெற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.</b><br />
<br />
<b><span style="color: magenta;"> மனநலம் குன்றிய தனது மகளின் திருமணத்திற்கு மல்லிகா தடையாக இருப்பதை விரும்பாத அருளாந்து அவளை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.</span></b><br />
<br />
<b><span style="color: magenta;"> விநோத்தின் விருப்பப்படியே மருத்துவமனை கட்ட மூன்று கோடி ரூபாயை அவனிடம் கொடுத்து , தனது மகளையும் அவன் குறித்த நாளிலேயே அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் தொழிலதிபர் அருளாந்து. </span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<b><span style="color: magenta;"> வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா ஒரு போக்கிலியைச் சந்தித்து, சித்ராவை எப்படியாவது கடத்தி அந்தத் திருமணம் நடக்கவிடாமல் செய்ய வேண்டுகிறாள்.</span></b><br />
<br />
<b><span style="color: magenta;"> அதற்குள் சித்ராவை கடத்தி அவளைக் கெடுத்து, அதன்மூலம் சித்ரா தன்னையேத் திருமணம் செய்து கொள்ளும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கிறான் விநோத்.</span></b><br />
<br />
<b> கடத்தப்பட்ட சித்ராவை விநோத்திடமிருந்து காப்பாற்ற முயல்கிறாள் மல்லிகா. மதுவெறியில் மிருகமாய் மாறி சித்ராவைக் கெடுக்க முற்பட்ட விநோத்தை உடைந்த மது பாட்டிலால் அவன் வயிற்றுப் பகுதியில் குத்த, இரத்த வெள்ளத்தில் இறக்கிறான் விநோத்.</b><br />
<br />
<b><span style="color: yellow;"> அங்கே வந்த போக்கிலி வேடத்திலிருந்த சி.பி.ஐ அதிகாரி ஆனந்தன், விநோத் ஒரு தேடப்படும் குற்றவாளி என்றும்</span></b><br />
<b><span style="color: yellow;">அவன் பம்பாய். கல்கத்தா, டெல்லி , நாக்புர் முதலான பெரு நகரங்களில் , செல்வந்தர் வீட்டுப் பெண்களை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து , அப்பெண்களின் பெற்றோரிடம் இதுபோல நிறுவனம் நடத்த வேண்டுமென்று பெருந்தொகை யினைப் பெற்றுக் கொண்டு , திருமணம் நடந்த தடயங்களே இல்லாமல், அந்தப் பெண்களுடன் தேனிலவு செல்வதாய் அவர்களைக் கொன்றுவிட்டு. அதை விபத்தாக்கி விட்டு தப்பிவிடுவதையும், தொழிலாய்க் கொண்டவன் என்றும் விவரிக்கிறான். </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அவனது கூட்டாளி ஒருவனை டெல்லியிலிருந்து பின் தொடர்ந்து தான் சென்னை வந்ததாகவும், ஆதாரங்களோடு அவனைக் கைது செய்ய, தான் போக்கிலி வேடத்தில் மல்லிகாவைச் சந்தித்ததாகவும். அதற்குள் மல்லிகா அவசரப்பட்டு அவனைக் கொன்று கொலைப்பழி யேற்கும் நிலைக்கு வந்ததையும் கூறி வருந்துகிறான்.</span></b><br />
<br />
“<b>பெண்களைப் பைத்தியங்களாக்கி சட்டத்தின் ஓட்டைகளின் வழியே தப்பிக்கும் சமூக விரோதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள்தான் சரியான தண்டனை கொடுக்க முடியும்” என்று கூறி கணவனானாலும் ஒரு கயவனைத் தண்டித்த மன நிறைவோடு, சிறை செல்கிறாள் பைத்தியக்கார பட்டம் சூட்டப்பட்ட மல்லிகா. </b><br />
<br />
<b> <span style="color: lime;">இந்த நாடகத்தை அரங்கேற்றும் போது எனக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்ன தெரியுமா?</span></b><br />
<b><br /></b>
<b> --- அடுத்த தொடரில்</b><br />
<br />
</div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-70442310909007059122017-05-26T01:17:00.003-07:002017-05-26T06:19:21.720-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-24<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;"> முடிவை மாற்று!!!</span></b></div>
<br />
<b>காய்கறி விற்றுக் கபடமில்லாத சிட்டாகத் துள்ளித் திரிந்த காவேரி, தன்னைக் கூட்டாக வன்புணர்வு செய்து தலைமறைவாய்ப் போன இரண்டு பேரைப் பழிவாங்க “கௌரி” என்ற பெயரில் செம்பறவையாய் ஊர் </b><b>ஊராய்த் </b><br />
<b>தேடித் </b><b>திரிகிறாள்.</b><br />
<b><br /></b>
<b> அவர்களைக் கண்டுபிடித்து அவளது சபதத்தை நிறைவேற்று வதாகச் சொன்ன சமூக விரோதி செங்கோடனின் உறுதிமொழியை நம்பி கூட்டு வன்புணர்ச்சியால் கருவுற்றுத் தனக்குப் பிறந்த ஆறுமாதக் கைக்குழந்தையையும், தனது தம்பியையும் செங்கோடனிடம் ஒப்படைக்கிறாள். அவன் அவர்களை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கௌரியை ஆந்திராப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவளை வைத்து விபச்சாரத் தொழில் நடத்திப் பணம் ஈட்டுகிறான்.</b><br />
<b><br /></b>
<b> பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது உதவியாள் இராசாளி மூலம் அங்கிருந்து தப்பி, தமிழ்நாடு வந்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரது இருப்பிடங்களையும் கண்டு பிடிக்கிறாள்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: #38761d;"> </span><span style="color: lime;">தான் தேடிய இருவரில் தியாகு என்ற ஒருவன் திருச்சியில் வழக்குரைஞராக இருப்பதைத் தனது உதவியாள் மூலம் அறிகிறாள். அவன் மனைவியை தனது உதவியாள் மூலம் கடத்திவந்து, </span></b><span style="color: lime;"><b>அவளை மீட்க , </b><b>அந்த வழக்குரைஞரை வரவழைக்கிறாள்.</b></span><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> தனது மனைவியை மீட்க வந்த வக்கீலிடம் , </span></b><br />
<b><span style="color: lime;">18 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறாள். அவன் அதற்கு வருத்தம் தெரிவித்து, தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறான். தான் பட்டபாட்டை அவனுக்கு உணர்த்த அவன் கண்முன்னே </span></b><br />
<b><span style="color: lime;">அவனது மனைவியை இரண்டு முரடர்களைக் கொண்டு </span></b><br />
<b><span style="color: lime;">வன்புணர்ச்சி செய்யச் சொல்கிறாள். அந்தக் கொடுமையில் வழக்குரைஞர் மனைவி மூச்சுத் திணறி இறக்க, அதைப் பார்த்த வக்கீல் தியாகு பைத்தியக்காரனாகி அலைகிறான்.</span></b><br />
<b><br /></b>
<b> இன்னொருவன் ஜார்ஜ், கோவையில் மருத்துவராக பெரும் புகழோடும் செல்வச் செழிப்போடும் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறாள். அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்து அப்போதுதான் தந்தை வீடு வந்த டாக்டர் ஜார்ஜின் மகள் வித்யாவை தனது கையாள்களை வைத்து ஏமாற்றி அழைத்து வந்து இரகசிய இடத்தில் அடை த்து வைக்கிறாள். </b><br />
<b><br /></b>
<b> மகளைத் தேடிவந்த டாக்டர் ஜார்ஜிடம் தான் யாரென்பதை நினைவு படுத்துகிறாள் கௌரியாக இருக்கும் காவேரி. வாலிப வயதில் தான் செய்த தவறுக்கு இழப்பீடாக இலட்சங்களை அள்ளித் தருவதாகக் கூறுகிறான் மருத்தவர் ஜார்ஜ். அவனது வன்செயலால் திசைமாறி, விலைமாதாய் நிற்கும் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாள். சமுதாயத்தில் புகழோடு இருக்கும் அவன் அவளின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறான்.</b><br />
<b><br /></b>
<b> அப்படியானால் அவன் மகளை இரு முரடர்களை வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகக் கூறுகிறாள். </b><br />
<b><br /></b>
<b> அப்போது. தனது மனைவி முதல் பிரசவத்தின்போது இறந்து போனதையும், வித்யாவை “சுந்தரேசன் அனாதை இல்லத்திலிருந்து” தத்து எடுத்துத் தன் மகளாய் வளர்ப்பதையும் கூறுகிறான் ஜார்ஜ்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: cyan;">சுந்தரேசன் அனாதை இல்லத்தில் செங்கோடனால் ஒப்படைக்கப்பட்ட தனது ஆறுமாதக் கைக்குழந்தைதான் டாக்டரின் மகளாக வளர்ந்துள்ள வித்யா என்பது காவேரிக்குத் தெரிய வருகிறது. மனதில் இரக்கம் கசிகிறது. </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தன்மகளான வி த்யாவைச் சீரளிக்க விரும்பாமல், டாக்டரிடம் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ள மீண்டும் </span></b><br />
<b><span style="color: cyan;">வற்புறுத்துகிறாள். இரண்டு நாள்களில் தன் முடிவைச் சொல்வதாக காவேரியிடம் சொல்லிவிட்டு வித்யாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் டாக்டர் ஜார்ஜ்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> புகழ்பெற்ற மருத்துவராய் விளங்கும் தான், ஊரறிந்த ஒரு விலைமாதை தன் மனைவியாய் ஏற்றுக் கொள்ள முடியாமலும், காவேரிதான் தனது தாய் என்பதை வித்யா அறியாமலிருக்கவும் , தனக்குத் தானே விச ஊசி போட்டுக் கொண்டு இறந்து விடுகிறான் அந்த டாக்டர்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> செங்கோடன், வெலிங்டன் இராணுவ முகாமிலிருந்து இந்திய இராணுவ இரகசியங்களைத் திருடி பாகிஸ்தானுக்கு விற்க முயற்சிக்கையில் பாதுகாப்புப் படை அதிகாரி மணிவண்ணனால் சுடப்பட்டு, தப்பித்துக் கோவை வித்யா மருத்துவ மனைக்கு வருகிறான். இராசாளி மூலம் செங்கோடனின் தேசத் துரோகச் செயலை அறிகிறாள் காவேரி. </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தன்னை விபச்சாரத் தொழிலில் தள்ளியதோடு, தாய் நாட்டுப் பாதுகாப்பையும் சீரழிக்கச் சதி செய்த செங்கோடனுக்குச் சிகிச்சை அளிக்க விடாமல் வித்யாவைத் தடுத்து விடுகிறாள் காவேரி. மேலும் செங்கோடன் இருக்குமிடத்தையும் இராணுவ முகாமுக்குத் தெரிவிக்கிறாள்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> தப்பியோடியவ னைத் தேடி வந்த மணிவண்ணன், செங்கோடனிடமிருந்த இராணு இரகசியங்களைக் கைப் பற்றுகிறான். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமையால் செங்கோடனும் இறக்கிறான். </span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<span style="color: cyan;"><b> கோவை வித்யா மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வந்திருந்த சுந்தரேசன் மூலம், இராணுவ அதிகாரியாய் இருக்கும் மணிவண்ணன் 18 ஆண்டுகளுக்கு முன் அனாதை இல்லத்தில் விடப்பட்ட தனது தம்பிதான் என்பதை அறிந்து கொள்கிறாள் </b><b>காவேரி.</b></span><br />
<b><br /></b>
<b> மணிவண்ணன் வித்யாவை விரும்புவதையறிந்த காவேரி, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அனாதை இல்ல சுந்தரேசனிடம் வேண்டுகிறாள்.</b><br />
<b><br /></b>
<b> ஊரறிந்த விலைமகளான ஒருத்தி, மணிவண்ணனின் அக்கா என்பதோ, வித்யாவின் அம்மா என்பதோ வெளியுலகுக்குத் தெரிந்தால் உயர்ந்த நிலையிலிருக்கும் அவர்களின் கவுரவம் கெட்டுவிடும் என்றெண்ணிய காவேரி . தான் தேடிய பணம், பொருள் அனைத்தையும் சுந்தரேசனுடைய அனாதை இல்லத்திற்கு எழுதி சுந்தரேசனிடம் ஒப்படைத்து விட்டு, விசமருந்தித் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.</b><br />
<b><br /></b>
<b> ஒரு தேசத்துரோகியின் இருப்பிடத்தை அடையாளம் காட்டியமைக்காக காவேரியைப் பாராட்ட அவளைத் தேடிவந்த மணிவண்ணனும் , அவளுக்கு வாழ்வழிக்க உடனிருந்து உதவிய இராசாளியும் விசமருந்தி </b><b>மரணத்தின் விளிம்பிலிருக்கும் காவேரியைக் காப்பாற்ற முயன்றும் அந்த செம்பறவை தன் சிறகுகளைத் தானே உதிர்த்துக் கொண்டது.</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-WAC_lMttNxM/WSfYfSgoubI/AAAAAAAAB0Q/Jw1m4hX3saslVStX3myjpN7ET2OoXhlSACLcB/s1600/IMG_6863.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://2.bp.blogspot.com/-WAC_lMttNxM/WSfYfSgoubI/AAAAAAAAB0Q/Jw1m4hX3saslVStX3myjpN7ET2OoXhlSACLcB/s640/IMG_6863.jpg" width="640" /></a></div>
<br />
<b> <span style="color: orange;">இந்த நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.</span></b><br />
<b><span style="color: orange;">21.03.1987ல் மீண்டும் புதுக்கோட்டை லாரி உரிமையாளர், ஓட்டுநர், கிளீனர்கள் சங்க ஆண்டு விழாவில் நகரின் முக்கிய இடத்தில் ( அண்ணா சிலை அருகே) நடத்தப்பட்டு செம்பறவையாக நடித்த நடிகைக்கு “குணச்சித்திர நடிகை” என்ற பட்டமும் சங்கத் தலைவரால் வழங்கப்பட்டது. </span></b><br />
<b><br /></b>
<b> மூன்று நாள்கள் கழித்து எனது முகவரிக்கு ஒரு உள்நாட்டு அஞ்சல் வந்தது. அதில் <span style="color: lime;"> <span style="color: purple;">“ கெடுக்கப்பட்டவள் சாகத்தான் வேண்டுமா? முடிவை மாற்றுங்கள்”</span></span><span style="color: purple;"> </span>என்று ஒரு பெண்ணிய வாதி சாட்டையைச் சுழற்றியிருந்தார். </b><br />
<b><br /></b>
<br />
<div style="text-align: center;">
<b>உங்கள் பார்வை என்ன? </b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<b> --- அடுத்த தொடரில் “கரையேறிய அலைகள்” </b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-47751811149813801532017-05-24T09:48:00.002-07:002017-05-24T09:48:59.275-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 23<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b><br /></b>
<div style="text-align: center;">
<span style="color: lime; font-size: large;"><b>செம்பறவையான சிட்டு</b></span></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<b><br /></b><b> பட்டி மன்றம் முடிந்தது வீட்டில் வழக்காடு மன்றம் என்ற அன்மைக் கால சொலவடை போல, மேடை நாடகம் சுந்தர காண்டமாக முடிந்து, வீட்டில் யுத்த காண்டம் தொடரப் போவதை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தார்கள் என் மனைவியைப் பகடிபேசிய உறவுகள். </b><br />
<b><br /></b><b> <span style="color: yellow;">பழியஞ்சி கிராமத்தில் நடந்த “</span></b><b><span style="color: yellow;">அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தில் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவன், அவளை நாகரீகமாக சேலை உடுத்தக் கற்றுக் கொடுக்கும் காட்சியில் நடித்த நான், நாடக மனைவிக்கு இப்படித்தான் சேலை கட்ட வேண்டும் என்று சேலையை பிளிட் வைத்து இடுப்பில் சொறுகி விட்டபோது, மேடையின் முன் பார்வையாளர் பகுதியில் இருந்த என் மனைவியை ” ஏன்டி மரகதம், ஓம் புருசன் ஒருநாளாவது இப்டி ஒனக்குக் கட்டி விட்ருப்பானா?“ என நாடகம் பார்த்துக் கொண்டிருந்த உறவுகள் சீண்டியதன் விளைவு வீட்டில் ஒரு யுத்த காண்டம் நடக்கப் போகிறது என்றுதான் எல்லோருக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு. </span></b><br />
<b><br /></b><b> நாடகம் முடிஞ்சதும் ஒப்பனை களைச்சு,. கலைஞர்களுக்கு சம்பளமெல்லாம் கொடுத்துட்டு </b><b> என் மனைவியைச் சந்திக்க </b><b>அவளைத் தேடுனா ஆளைக் காணோம். </b><br />
<b><br /></b>
<b>“ அண்ணே, அக்கா அவங்க சித்திகூட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க” ன்னு ஒரு பையன் தகவல் சொன்னான். </b><br />
<b><br /></b>
<b>இதையெல்லாம் பார்த்தவர்கள் </b><b>நா அப்படி நடிச்சது பிடிக்காமதான் என் மனைவி கோவிச்சுக்கிட்டு போயிட்டான்னு நெனைச்சு,</b><br />
<b><br /></b>
<b> “ வீட்டுக்குப் போனதும் இருக்கு வாத்தியாருக்கு செமத்தியா மொத்து” ன்னு முனுமுனுத்ததும் என் காதுல விழுந்தது.</b><br />
<b><br /></b>
<b><span style="color: cyan;">வீட்ல என்ன நடக்குமுன்னு அவங்களோட கற்பனை இது.</span></b><br />
<span style="color: cyan;"><b><br /></b>
<b>” ஏங்க, அத்தனை பேருக்கு முன்னால அவளுக்கு சேலையைக் கட்டி விடுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை?” ன்னு அவ கேப்பா</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b>” வெறும் நடிப்புக்குத்தானே அப்டிச் செஞ்சேன்” ன்னு அவன் சொல்லுவான்</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b>” பிளிட் மடிச்சு அவ கையில கொடுத்து சொறுகிக்கச் சொல்ல வேண்டியதுதானே, அதென்ன நீங்களே கொண்டுபோய் சொறுகிவிட்டு.... அதுவும் தொப்புள்க்குக் கீழே” ன்னு அவ கொமுட்டுல இடிப்பா</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b>” அது லோகிப் சேலை அப்படித்தான்டி கட்டணும்”ன்னு அவன் வழிவான்</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b>” ஓகோ, அப்படியே சன்னல் வச்ச ஜாக்கெட் ஊக்கையும் மாட்டிவிட வேண்டியதுதானே”ன்னு அவ மொகரையக் காட்டுவா</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b>“ இல்லேப்பா, ஒரு பட்டிக்காட்டு வெகுளிப்பொண்ணுக்கு நாகரீகமா இருக்கது எப்படிங்கிறதுக்காக...” ன்னு அவன் இழுக்குறதுக்குள்ள </b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b>
<b>“ நீங்க அந்த தளுக்குக் காரியோட வீட்டுல போயி வேணுன்னாலும் அதையெல்லாம் செய்யுங்க, நா எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்னுட்டு அவ ஓடப்போறாப் பாரு”</b></span><br />
<b><br /></b><b> இப்படியெல்லாம் கற்பனை செஞ்சு பாத்தவங்களுக்குத் தெரியுமா </b><b>அன்னக்கிப் பகல் பயிற்சியின்போது வீட்ல </b><b>அப்படி பிளிட் வச்சு சேலை கட்டிவிட எனக்குக் கத்துக் கொடுத்ததே என் மனைவிதான்னு. </b><br />
<b><br /></b><b> ஆமாம். 1964ல் இருந்து மேடை நாடகத்தில் ஈடுபட்டிருந்த எனது நடிவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்து, 1971ல்என்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டவள் என் மனைவி. உள்ளுர்வாசி.</b><br />
<b><br /></b><b> மேலும் எனது நாடகத்தில் நடிக்கவரும் நடிகையர் முதல்நாள் ஒத்திகைக்கு வரும்போதெல்லாம், எனது வீட்டில்தான் தங்குவார்கள். அவர்களிடம் இணக்கமாக, நல்ல நட்புடன் பழகுவதுடன் அவர்கள் விரும்பும் சுவையான உணவைச் சமைத்து வழங்குவதும் எனது மனைவியே.</b><br />
<b><br /></b><b> இன்னும் ஒருபடிமேலே சொல்லணுமுன்ன, நாடகத்தில் வரும் காதல்காட்சிகளை எனது வீட்டில் வைத்துதான் நாயகன் நாயகிக்குப் பயிற்சி யளிப்பேன். அதனால் எள்ளளவும் எனது நடத்தை மீது சந்தேகப் படமாட்டாள் என் துணைவி.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: cyan;"> எனது மேடை நாடகத்திற்கான பல கதைகளின் மையக் கருத்துகள் அவள் எனக்குத் தந்தவை என்பதைச் சொல்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.</span></b><br />
<span style="color: cyan;"><b><br /></b><b> சுருங்கச் சொன்னால் நான் ஐம்பதாண்டுகளாய் சமூக மேம்பாட்டிற்கான கலை இலக்கியத் துறையில் களமாட உற்ற துணையாய் இருந்தவள் என் இணையாள் என்பது மிகையில்லை. </b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b> மலரினும் மென்மையாக இருக்கும் மகளிர் எரிமலையாய் மாறுவதற்கும், எரிந்து சாம்பலாவதற்கும் ஆணாதிக்க வன்மங்களே காரணம் என்பதை தடம் மாறிப்போன அவள் தோழியின் வாழ்வியல் சம்பவத்தை அடிக்கடிச் சொல்லி ஆதங்கப்படுவாள் என் இணையாள்.</b></span><br />
<span style="color: cyan;"><b><br /></b><b> அப்படி அவள் தந்த ஒரு கதைக்கருதான் “ செம்பறவை” என்னும் பெயரில் மேடை நாடகமாக 1983ல் அரங்கேறியது.</b></span><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-vEMflNVrdOo/WSWqqgasTfI/AAAAAAAABzY/U1F--3DV--4bLNwRMawQpjruJpaipQZ9ACLcB/s1600/IMG_6783.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1121" data-original-width="1600" height="448" src="https://1.bp.blogspot.com/-vEMflNVrdOo/WSWqqgasTfI/AAAAAAAABzY/U1F--3DV--4bLNwRMawQpjruJpaipQZ9ACLcB/s640/IMG_6783.jpg" width="640" /></a></div>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> காய்கறி விற்க வந்த காவேரி என்ற பெண்ணை ஒரே அறையில் தங்கிப்படித்த இரு கல்லூரி மாணவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் .</span></b><br />
<b><span style="color: yellow;">அதன்விளைவாகக் கருவுற்ற அவள் அவர்களிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறாள். அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி ஏமாற்றிவிட்டு தேர்வு முடிந்ததும் வெவ்வேறு திசைகளுக்கு இடமாறிச் சென்று விடுகின்றனர்.</span></b><br />
<span style="color: yellow;"><b><br /></b>
<b> திருமணமாகாமல் கர்ப்பிணியான அவளை ஊர் தூற்றுகிறது. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய இருவரில் ஒருவனாவது தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில், தனது 4 வயதுத் தம்பியுடன் ஊரைவிட்டு வெளியேறி அவர்கள் தந்த முகவரிக்கு </b><b>அவர்களைத் தேடிச் செல்கிறாள். முகவரி பொய்யென அறிந்து புலம்பிய அவளுக்கு ஒரு </b><b> மூதாட்டி உதவிட அவளுக்கு ஒரு பெண்மகவு பிறக்கிறது.</b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> நான்கு வயது தம்பியுடனும் ஆறுமாதக் கைக்குழந்தையுடனும் ஆதரவற்ற நிலையிலிருந்த அவளுக்கு வாழ்வளிக்க முன்வருகிறான் செங்கோடன் என்னும் அன்முறையாளன். </b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> அவளின் தம்பியையும் கைக்குழந்தையையும் சுந்தரேசன் என்பவர் நடத்தும் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து விட்டு</b><b> அவளை ஆந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறான் செங்கோடன் . அங்கு அவளை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துகிறான். </b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> மென்மையான மலர் மனம் படைத்த அவள் தன்னை வஞ்சித்த இருவரையும் தேடிப் பழிவாங்க வன்மையான செம்பறவையாக மாறுகிறாள். </b><b>அவளை ஏமாற்றிய இருவரையும் தேடிப் பழிவாங்க ஒவ்வொரு ஊராக அவளை அழைத்துச் சென்று கேளிக்கை விடுதிகளில் விலைமாதாக ஆக்கிப் பணம் சம்பாதிக்கிறான். </b></span><br />
<span style="color: yellow;"><b><br /></b><b> 18 ஆண்டுகளுக்குப் பின் தன்னை வன்புணர்ச்சி செய்தவர்களில் ஒருவன் திருச்சியில் </b><b>வழக்குரைஞராகவும், இன்னொருவன் கோவையில் மருத்துவராகவும் இருப்பதை அறிந்து அவர்களைப் பழிவாங்க முனைகிறாள்.</b></span><br />
<b><br /></b>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-XzBTq8FAg1M/WSW2GTlXbQI/AAAAAAAABz0/i5afozyUBjU2clycnR3hkfJW7EnNo72uQCLcB/s1600/IMG_6862.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://3.bp.blogspot.com/-XzBTq8FAg1M/WSW2GTlXbQI/AAAAAAAABz0/i5afozyUBjU2clycnR3hkfJW7EnNo72uQCLcB/s400/IMG_6862.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b> <span style="color: magenta;"> அவளின் முயற்சியில் வெற்றி பெற்றாளா? </span></b><br />
<b><span style="color: magenta;"><br /></span></b>
<b><span style="color: magenta;"> ---அடுத்த தொடரில் </span></b><br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-61598067302489872652017-05-21T06:43:00.002-07:002017-05-21T06:43:54.943-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-22<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> </b><br />
<b><span style="font-size: large;">மனைவி முன்னிலையில் நடிப்பது தப்பா?</span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;"> கோதண்டராமபுரம் பஞ்சாயத்துத் தலைவரின் அன்பான வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், 1979 ல் நடத்தி பெயர்பெற்ற சமூகவியல் நாடகமான “ அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தை 1985 ல் பழியஞ்சி ஊர்த் திருவிழாவில் நடத்த ஒத்துக் கொண்டேன். </span></b><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> முன்பு நடித்த கதாநாயகனோடு புதிய நடிகையரை வைத்து பயிற்சியும் அளித்து நாடகத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> பஞ்சாயத்தைச் சேர்ந்த 18 பட்டிகளிலும் நாடகம் பற்றிய துண்டறிக்கை விளம்பரங்கள் தடபுடல் செய்யப் பட்டிருந்தது. நாடகம் மூன்று நாள்கள் இருந்த வேளையில் கதாநாயக நடிகருக்கு பணி பதவி உயர்வு வந்து, உடனடியாக சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு நாள்களுக்குள் எப்படி ஒரு புதியவரை மூன்றுமணிநேர நாடகத்திற்குத் தயாரிக்க முடியும்?</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> வேறு வழியின்றி நானே அந்நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்குவது என முடிவு செய்தேன். மேடை நாடக இயக்குநராக, அந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்குமான வசனங்களைச் சொல்லிக் கொடுத்திருந்ததால் கதா நாயகனின் வசனங்கள் </b></span><br />
<b><span style="color: lime;"> மனப்பாடம் ஆகியிருந்தது. அந்தத் துணிச்சலில் நானே கதாநாயக அவதாரம் எடுத்தேன்.</span></b><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> இதில் மறக்க முடியாத பல புதிய அனுபவங்களைச் சந்திக்க வேண்டியதிருந்தது. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> நாடகத்தன்று காலையே நடிகையரை எனது வீட்டிற்கு வரச் செய்து ஒரு இறுதி ஒத்திகை பார்த்துக் கொண்டு, மாலை 5.00 மணிக்கு அந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> எங்களுடைய பொல்லாத நேரம் அன்று அரசியல் காரணமாக பொது வேலை நிறுத்தம் .</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<b><span style="color: lime;"> எல்லாப் போக்குவரத்துகளும் நின்று போயிருந்தன. வேறு வழியின்றி நாடகம் நடக்கும் 5 கல் தொலைவிலிருந்த அந்த கிராமத்துக்கு நடிகையரை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு </span></b><br />
<b><span style="color: lime;">சென்றோம். (அப்போது எங்கள் குழுவில் யாரிடமும் உந்தூர்தி இல்லை.) இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக் கருவிகளுடன் அவர்களுடைய மிதி வண்டியிலேயே அந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். அது ஒரு வித்தியாசமான அனுபவம்</span></b><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> அந்தக் கிராமத்துக்குச் சென்று நாடகக் கொட்டகையைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி. வழக்கமாக அந்த ஊர்த்திரு விழாவில் மண்மேடையின் மீது ஒரு சரிவான கீற்றுக் கொட்டகை போட்டு, கதம்ப நிகழ்ச்சிதான் கலைநிகழ்ச்சியாக நடத்துவார்களாம். முன்புறம் சற்று உயர்ந்தும் பின்புறம் சரிவாகவும் உள்ள கீற்று க் கொட்டகையில் எப்படித் திரைச் சீலைகள் கட்ட முடியும். செலவு சிக்கனம் என்பதால் திரை அமைப்பாளரை அழைத்துச் செல்லாமல் நாங்களே மூன்று திரைச் சீலைகளை நடிகர் சங்கத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்தோம். அதை எப்படி அந்த சரிவான கொட்டகையில் கட்டுவது?</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> அழைத்திருந்த பஞ்சாயத்துத் தலைவரைத் தேடினேன். அவர் ஊருக்கு புறத்தே உள்ள கோயிலுக்கு கிடாவெட்டுப் பூசைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எங்களைக் கவனிக்க வைத்திருந்த ஆளிடம் இந்தக் கொட்டகையில் நாடகம் நடத்த முடியாது என்று சொன்னதும், அவர் அங்கிருந்த கொட்டகை வேலை தெரிந்த இரண்டு பேரை அழைத்து வந்து பின்புறம் சரிந்திருந்த கொட்டகையை ஒரேமட்டத்துக்கு உயர்த்திக் கட்டித் தந்தார். “மேடைக்கு ஏதாவது பெஞ்சுகள் கிடைக்குமா” எனக் கேட்டேன். அரை மணி நேரத்திற்குப் பின் நான்கு பெஞ்சுகளைக் கொண்டு வந்தார்கள் . அதைவைத்து மேடை அமைக்க முடியுமா? பேசாம மண்மேடையிலேயே நடிப்பது என்று முடிவுக்கு வந்தோம். நல்லவேளையாக நெல்களத்தை மூடும் தார்ப்பாய் ஒன்று கொண்டு வந்து அந்த மண்மேடையில் விரித்துத் தந்தார்கள்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> நீளமும் அ கலமும் குறைவான அந்தக் கொட்டகையில் சுருக்கமும், இழுபடுவதுமாய் எங்கள் மன்ற நண்பர்கள் திரைகளைக் கட்டி முடித்தார்கள்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> 500 ரூபாய்க்குள் ஒரு அமெர்ச்சூர் நாடகத்தை நடத்த வேண்டிய நெருக்கடியால், ஒப்பனைக் கலைஞரை ஒப்பந்தம் செய்து அழைத்துச் செல்லாமல் ஒப்பனைப் பொருள்களை வாங்கி நாமே ஒப்பனை செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன். அங்கு ஒப்பனை செய்யத் தனியான இடம் கேட்டபோது கதவு சன்னல்கள் பொருத்தப் படாது ஒரு ஓட்டு வீட்டைக் காட்டினார்கள். அந்த வீட்டில், ஒரு போர்வையை திரைபோட்டு நடிகையரை ஒப்பனை செய்யச் சொல்லி, நடிகர்களுக்கு நான் ஒப்பனை செய்யத் தொடங்கினேன். </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> இரவு 8.00 மணிக்கு கிடாய் வெட்டு முடிந்து மக்கள் கூத்துப் பொட்டலில் கூடத் தொடங்கி விட்டனர். நடிகையர் தேநீர் கேட்க, அன்று கடையடைப்பு என்பதால் ஒரு வீட்டில் வரக்காப்பி போட்டுக் கொடுத்து விட்டார்கள். வேறு வழியின்றி அதைக் குடித்தோம். </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> ஏற்பாடு செய்த தலைவர் </b><b> அப்போதுதான் </b><b>ஒப்பனை செய்து கொண்டிருந்த என்னிடம் வ ந்து ” என்னப்பா ஆரம்பிக்கலாமா?“ ன்னு கேட்டார். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு , இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கலாம் என்றேன். </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> “ஒருவழியா சாப்பிட்டுட்டு ஆரம்பி ங்களே” ன்னாரு. பசியிலிருந்த </b><b>உறுப்பினர்களும்</b><b> “சரி” ன்னு சொல்ல எல்லாருக்கு தையிலையில் சாப்பாடு வந்தது . அவர்கள் சாப்பிடும் நேரத்தில் நானும் கொஞ்சம் அரிதாரத்தைத் தடவிக் கொண்டேன்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> மேடையில் இடமில்லாததால் இசைக்குழு ஹென்றி, ஜோசப் குழுவினர் இரண்டு பெஞ்சுகளில் மேடையின் முன்னால் அமர்ந்தனர்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> நான் கதாநாயகனாய் நடிக்க வேண்டியிருந்ததால் நாடக ஸ்கிரிப்ட் பார்க்க அங்கு வந்திருந்த கோயில்பட்டி பாரதி மன்ற அன்பு சிதம்பரம் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அப்படி இப்படின்னு தட்டிக் கொட்டி நாடகத்தை தொடங்கும்போது மணி பதினொன்னு.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> அரங்க அமைப்பு, ஒப்பனை. இசை எப்படி இருந்தாலும் நடித்தவர்கள் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடித்தனர்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> உறவு விட்டுப் போகாமல் இருக்க, அப்பாவின் கட்டாயத்தால், பட்டிக்காட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்ட பட்டணத்தில் பணிபுரியும் நாயகன், தன் மனைவியை நவநாகரீக மங்கையாக மாற்ற முயலும் கதை அது. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> அதில் ஒரு காட்சியில் பின் கொசுவம் வைத்து மட்டும் சேலை கட்டத் தெரிந்த கிராமத்து மனைவிக்கு கணவன் வெளிநாட்டு சார்செட் புடவை வாங்கிக் கொடுத்து நவ நாகரீகமாக பிளிட் </b><b>( முன் பிரில் ) வைத்துச் சேலைகட்டக் கற்றுக் கொடுக்கும் காட்சி. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> வழுவழுப்பாக நழுவி விழும் அந்தப் புடவையைக் கட்டமுடியாமல் மனைவி தடுமாறும் போது கணவன் தானே பிளிட் மடித்து அவள் இடுப்பில் சொறுகி விடுகிறான். கணவனாக நடிக்கும் நான் அப்படிச் செய்தபோது, எதிரே இருந்த பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பொலி. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> கூடவே </b><b> ” ஏன்டி மரகதம் ஓன் புருசன் ஒரு நாளாவது ஒனக்கு இப்டி சேலை கட்டி விட்ருப்பானா?” ங்கிற கமெண்ட் வந்தது. </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> விமர்சனம் வந்த பக்கம் அப்போதான் பார்த்தேன் மேடைக்கு முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்க்க வந்த என் மனைவியைச் சுற்றி இருந்த சொந்தங்கள் அவளை அவ்வாறு சொல்லிக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> மேடை நாடகம் என்னவோ அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள். </b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b> மறுநாள் வீட்டில்...</b></span><br />
<span style="color: lime;"><b><br /></b>
<b>--- என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.</b></span></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-29181206459576921602017-05-18T02:47:00.001-07:002017-05-18T02:47:53.625-07:00எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-21<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;">ஆளுக்கு ஒரு நீதியா?</span></b></div>
<br />
<b> <span style="color: lime;"> சின்னக் குழந்தை பாத்திரங்களை வைத்து நாடகம் போடுவதில் ஏற்பட்ட சிரமத்தால் இனி குழந்தை பாத்திரங்களே இல்லாத கதைகளை எழுதுவது என்ற முடிவில் உறுதியாகவே இருந்தேன்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அதேபோல பொது வெளியில் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை, 20க்கு 16 பலகை அடித்த மேடைகளில், நான் ஆசைப்பட்ட பின்புலக் காட்சிகளை அமைப்பதில் எதிர்பாராமல் நடந்த சிக்கல்களால் இனி அமெர்ச்சூர் மேடைகளுக்கு அடங்காத செட்டிங்களைப் போடக்கூடாது என்ற முடிவோடு வெறும் திரைச்சீலைகளை மாற்றும் காட்சிகளை வைத்து ஒரு நாடகத்தை எழுத முனைந்தேன்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அப்படி பெண்களின் பிரச்சனையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டு 1979ல் அரங்கேற்றிய நாடகம்தான்</span></b><br />
<b><span style="color: lime;"> “ அவளுக்கு ஒரு நீதி”</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-udSVuJ0P10I/WR0tv_7raKI/AAAAAAAABwg/zpx26MahVO86_pvQwn1sNuwaxBz1Sjp-ACLcB/s1600/IMG_6779.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://4.bp.blogspot.com/-udSVuJ0P10I/WR0tv_7raKI/AAAAAAAABwg/zpx26MahVO86_pvQwn1sNuwaxBz1Sjp-ACLcB/s640/IMG_6779.jpg" width="640" /></a></div>
<br />
<span style="color: yellow;"> <b>அதிக படிப்பறிவில்லாது , கிராமத்து பழக்க வழக்கங்களில் ஊறிப்போன ஒரு கிராமத்துப் பெண்ணை, சென்னையில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு கிராமத்து இளைஞன் உறவுமுறை விட்டுப் போகாமலிருக்கப் பெற்றோர் செய்த ஏற்பாட்டின்படி திருமணம் செய்து கொள்கிறான்.</b></span><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அந்த இளைஞனின் கிராமத்துத் திருவிழாவினைக் கண்டுகளிக்கச் சென்னை நிறுவன நண்பர்கள் வருகின்றனர். பின் கொசுவம் வைத்துக் கட்டிய கண்டாங்கிச் சேலையுடனும், நெற்றியில் காசளவு குங்குமப் பொட்டுடனும், அள்ளிச் செறுகிய கொண்டையுடனும் வெகுளியாய் வரவேற்ற தங்கள் நிறுவன உதவி மேலாளரின் மனைவியின் கோலத்தைப் பார்த்த அந்த நண்பர்கள் பகடி பேசுகின்றனர்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> தன் மச்சினன் ஊரில் நடக்கும் முதல் திருவிழா தேவைக்கு, உச்சிக்குடுமியோடு அவளது அண்ணன், ஆட்டுக்குட்டி, சேவல், அச்சுவெல்லம், பச்சரிசி, காய்கறி இலைக்கட்டு முதலான சீர்கள் கொண்டு வருகிறான். இவற்றைப் பார்த்த நாகரீக மோக நகரத்து நண்பர்கள் கதைத் தலைவனைக் கேலி செய்கின்றனர்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> ஒரு வெளிநாட்டுக்கு அழகுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உதவி மேலாளர் தனது தகுதிக்கேற்ப அவரின் மனைவியை மாற்ற வேண்டுமென்று நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> கிராமத்துக் கலாச்சார நடை உடை பழக்க வழக்கங்களை மாற்ற முனையும் கதைத்தலைவனை அவனது அப்பா கிராமத்துக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மறுக்கிறார். </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அவளை நாகரீக மங்கையாக மாற்ற சென்னைக்கே அழைத்துச் செல்கிறான் அவளின் கணவன். அங்கு அவளை மாற்ற அவன்படும் பாட்டை நகைச்சுவையாய்ச் சொல்லியிருந்தேன்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> மேலாளர் பதவி உயர்வு பெற்றமைக்காக அவன் நண்பர்களுக்கு ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து கொடுக்கிறான். விருந்துக்கு வந்த கிராமத்து மச்சினன், அங்கு நடந்து கொண்டிருந்த மேற்கத்திய இசை நடனத்திற்கிடையே, நாட்டுப்புறப் பாட்டுப்பாடி ஆட, அவனுடன் கதைத் தலைவியும் சேர்ந்து ஆடுகிறாள். அதைக் கண்ட அவனது நண்பர்கள் செய்த கேலிகளால், கதைத் தலைவன் அவமானப்பட்டு, அவளைக் கிராமத்துக்கே திரும்ப அனுப்புகிறான். மேலும் அவளை விவாகரத்து செய்யவும் தன் தந்தையிடம் வற்புறுத்துகிறான். ஊர்கூடி பஞ்சாயத்து நடக்கிறது.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-h_5aeV2NyrE/WR1hUmHLu2I/AAAAAAAAByM/eOU3aIHGzZgQtyjIXgpvO1-bwmmkKDTogCLcB/s1600/IMG_6859.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://3.bp.blogspot.com/-h_5aeV2NyrE/WR1hUmHLu2I/AAAAAAAAByM/eOU3aIHGzZgQtyjIXgpvO1-bwmmkKDTogCLcB/s400/IMG_6859.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<b><span style="color: cyan;">வாழ்க்கையை இழக்க விரும்பாத கதைத்தலைவி,</span></b><br />
<b><span style="color: cyan;"> தன் கணவன் விருப்பப்படியே இனி நடந்து கொள்வதாய் பஞ்சாயத்தாரிடம் சொல்லி, பட்டணத்திற்குச் சென்று கணவனுடன் சேர்கிறாள்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> “முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்” என்று முடிவெடுக்கிறாள். தன் கணவன் விரும்பும்படி நடை, உடை பழக்கங்களை மாற்றிக் கொள்கிறாள். இன்னும் ஒருபடி மேலே போய் அவனுடைய நண்பர்களுடன் மிக நெருக்கமாகப் பழகவும், கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லவும் தொடங்குகிறாள்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> ஒரு கட்டத்தில், கேளிக்கை விடுதியில் தன் கணவனின் நண்பனுடன் மது அருந்தி, ஆட்டம் போடுவதாகவும் நடிக்கிறாள்.</span></b><br />
<b><span style="color: cyan;">நாகரீகம் என்ற பெயரில் தன் மனைவி அளவுமீறி அயலானுடன் பழகுவதையும். ஆடம்பர மோகம் கொண்டு அலைவதையும் கண்டு மனம் புழுங்குகிறான் கதைத் தலைவன். தன்மான இழப்பைத் தாங்க முடியாது தற்கொலை முயற்சிக்குச் சென்ற கணவனைத் தக்க சமயத்தில் காப்பாற்றி, அவனை பண்பாட்டுச் சீரழிவை உணரச் செய்கிறாள்.</span></b><br />
<br />
<b><span style="color: #ffd966;"> இந்த நாடகம் சுற்று வட்டாரக் கிராமப்புற மக்களால் பெரிதும் பாராட்டப் பட்டது. அதன் விளைவாக எனது உறவினரும் கோதண்ட ராமபுரம் பஞ்சாயத்துத் தலைவருமாயிருந்த திருமலை அவர்கள், அவர்கள் ஊர்த் திருவிழாவில் அந்த நாடகத்தை 1985ல்நடத்த வேண்டுமென்றார். ஆனால் அவர் மிகக் குறைவான செலவில் நடத்தித்தர வற்புறுத்தினார் . ஆசைப்படுகிறாரே என நானும் ஒத்துக் கொண்டேன். முன்னர் நடித்த நடிகையர்அ ந்த தேதியில் வேறு நாடகத்தில் ஒப்பந்தமாகி இருந்தமையால் திருச்சியிலிருந்து கதாநாயகி நடிகையையும் புதுக்கோட்டை நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை நடிகையும் ஒப்பந்தம் செய்தேன்.</span></b><br />
<b><span style="color: #ffd966;"><br /></span></b>
<b><span style="color: #ffd966;"> பழைய கதாநாயகனை வைத்து புதிய நடிகைகளோடு இரண்டு மூன்று பயிற்சியும் நடந்தது. பதினெட்டுப் பட்டி கிராமத்திலும் எங்கள் நாடகம் நடப்பது பற்றி துண்டறிக்கை விளம்பரம் செய்யப்பட்டது.</span></b><br />
<b><span style="color: #ffd966;"><br /></span></b>
<b><span style="color: #ffd966;"> நாடகம் நடக்க மூன்று நாட்களே இருந்த நிலையில் , கதாநாயகனாக நடித்தவருக்கு ( கல்வித் துறையில் பணிபுரிந்தவர்) திடீரென சென்னைக்கு பணி உயர்வு ஆணை வந்தது.</span></b><b><span style="color: #ffd966;">அவர் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து விடுபட்டுச் </span></b><br />
<b><span style="color: #ffd966;">சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய நிலை.</span></b><br />
<b><span style="color: #ffd966;"><br /></span></b>
<b><span style="color: #ffd966;"> அவருக்கு பணிமுக்கியம். எனக்கு நாடகத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். மூன்று நாள்களுக்குள் ஒரு புதியவரை அந்தப் பாத்திரத்திற்குத் தயாரிப்பது அத்தனை எளிதான செயலா?</span></b><br />
.<br />
அந்த நிலையில் என்ன செய்வது?<br />
<br />
-<span style="color: magenta;">-- அடுத்த தொடரில்</span><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-62528920979488063822017-05-16T02:40:00.001-07:002017-05-16T02:40:12.126-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 20<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> </b><br />
<b><br /></b>
<div style="text-align: center;">
<b><span style="color: lime;"><span style="font-size: large;">வலிகளோடும் வழிகள் தேடி...</span> </span></b></div>
<b><br /></b>
<b> நாடும் வீடும் மேடை நாடகத்தில், வஞ்சகன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட பெண் மனமொடிந்து தன்னை மாய்த்துக் கொள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடுகிறாள். அங்கே மரம்வெட்டும் தொழிலாளி ஒருவன், வெட்டி விழுந்த மரத்தினடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அதனைக் கண்ட அப்பெண் அவனைக் காப்பாற்ற முயல்கிறாள். அவன் மீது விழுந்திருந்த மரத்தை ( அரங்கத்திற்கேற்ப கிளைகள் வெட்டப்பட்ட உண்மையான உதியமரம் ) அகற்ற முனைகிறாள். ( ஒத்திகையில் அட்டை மரத்தைப் புரட்டிப் பயிற்சியெடுத்த அந்த நடிகை உண்மையான மரத்தைப் புரட்டச் சிரமப்படுகிறாள். ஒருவழியாக அந்த மரத்தைப் புரட்டி நிமிர்த்தி வைத்துவிட்டு, மரத்துக்கு அடியில் மயக்கமுற்றுக் கிடக்கும் விறகுவெட்டிக்கு முதலுதவி செய்ய அவனை நோக்கிக் குனிந்த போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது.</b><br />
<b><br /></b>
<b> நிமிர்த்திய மரம் மீண்டும் கீழே விழாமலிருக்க அரங்கத்தின் மேல் கூரையிலிருந்து ஒரு கனமான கொக்கியைத் தொங்க விட்டிருந்தோம். மரத்தை நிமிர்த்தியதும் அதன் கவைப் பகுதியை அந்தக் கொக்கியில் மாட்டிவிட அந்த நடிகை மறந்துவிட்டார். விளைவு, நிமிர்த்திவைத்த அந்த மரம் அந்த நடிகையின் மேல் விழ, அதன் அழுத்தம் தாங்காமல் நடிகை கீழேகிடந்த விறகு வெட்டிமேல் குப்புற விழ,இருவரும் மரத்தினடியில் ஒருவர்மேல் ஒருவர் கிடக்க ... காட்சி அப்படித்தான்போல என நினைத்த பார்வையாளர் பகுதி இளைஞர்களின் விசிலும் கைதட்டலுமாகிய ஆரவாரம் கிளம்பியது . அரங்கப் பொறுப்பிலிருந்த எங்களுக்கோ என்ன செய்வது என்ற பரபரப்பு தொற்றியது . காட்சிக்குள் நுழையவும் முடியாமல் , நிறுத்தவும் முடியாமல் அப்போது பட்டபாடு அப்பப்பா.... இதுதான் மேடை நாடகம் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களே . திரைப் படப்பிடிப்பானால் தவறாய்ப்போன காட்சியை நீக்கிவிட்டு அடுத்த டேக் போய் விடலாம். மேடையில் என்ன செய்ய முடியும் ? கல்லில் விழுந்த கண்ணாடிதான்.</b><br />
<b><br /></b>
<b> திரையை மூடிவிட்டு மரத்தைப் புரட்ட, விளக்கணைக்கும் பொத்தானை அழுத்தினால் ஒளியமைப்பாளரும் அந்த நெருக்கடிக் காட்சியில் ஒன்றிப்போய் சிவப்பு விளக்கு எரிவதைக் கவனித்து மேடை விளக்கை அணைக்காமல் விட்டுவிட்டார். </b><br />
<b><br /></b>
<b> அந்த நெருக்கடியில், அந்த நாடகத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் டீ க்கடை காயாம்பு வாக நடித்த </b><b>( தடித்த ) </b><b>நடிகை</b><b> </b><br />
<b> ( கதாநாயகி நடிகையின் உடன்பிறந்த சகோதரிதான் ) காட்சிக்குள் நுழைந்து அந்த மரத்தைப் புரட்டிப்போட்டு, தன் தங்கையைத் தூக்கி விட்டார். ( இரத்த பாசமல்லவா ) அதன்பின் திரையிறக்க ப்பட்டது. நல்ல வேளையாக விபரீதமாக எதுவும் நடக்க வில்லை. நகைச்சுவை நடிகைதான் கொஞ்சம் சீரியசாகிவிட்டார். தங்கைக்கு ஏற்பட்ட துன்பத்தால். கதாநாயகி தனது தவறுதான் என்று சொன்னபின் சமாதானமானார். நடிகையை ஆசுவாசப் படுத்தி நாடகத்தைத் தொடர்ந்தோம். இடைப்பட்ட நேரத்தில் வெண்திரையில் சிலைடு போட்டுச் சமாளித்தோம்.</b><br />
<b><br /></b>
<b> புதுமையாக உண்மையான பின்புலத்தை அமைக்க வேண்டுமென்ற எனது ஆர்வக்கோளாறு காரணமாக, உண்மையான மரத்தை வைத்து வெட்டச் செய்ததோடு, அந்த நாடகத்தில் வரும் டீக்கடை காட்சிகளில் தேநீர் தயாரிக்கும் வேம்பாவுடனான டீஸ்டாலை அரங்கத்தில் அமைத்திருந்தேன். 16 அடி அகல மேடைக்குள் அதை நிறுவுவதிலும், அகற்றுவதிலும் ஏற்பட்ட சிரமங்களை அப்புறம்தான் உணர்ந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> அந்த டீக்கடை வேம்பாவால் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது. </b><b>அந்த நாடகத்தில் மனைவியை இழந்த ஒரு செல்வந்தரின் மூன்று வயதுக் குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டிய நிர்பந்தம் விறகுவெட்டியின் காதலிக்கு வருகிறது. அந்தக் குழந்தை பாத்திரத்தில் எனது மூன்று வயது மகனை நடிக்க வைத்திருந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> அவனை எனது அப்பா தன் பொறுப்பில் மேடையின் மறை பகுதியில் வைத்துக் கொண்டிருந்தார். அரங்கப் பொருள்கள் மாற்றத்தால் காட்சிக்குக் காட்சி இடைவெளி அதிகமாகிப் போனதால் நாடகம் சற்று காலம் நீண்டே நடந்தது. </b><br />
<b><br /></b>
<b> அடுத்து அந்தக் குழந்தை பாத்திரம் தனது அம்மாவோடு வீட்டுக்குள் சிரித்து விளையாடும் காட்சி நடக்கவேண்டும். நேரமோ இரவு 1.00 மணி.. குழந்தையாக நடித்த எனது மகன் அவனது தாத்தா மடியில் படுத்துத் தூங்கிவிட்டான். தூங்கிவிட்ட குழந்தையை விழிக்க வைக்க, அவனை வைத்திருந்த எனது அப்பா காட்சிக்காக வைத்திருந்த வேம்பாவில் இருந்த பழைய தேநீரை அவனுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த குழந்தை வாந்தியெடுத்திருக்கிறான். பயந்துபோன என் அப்பா, எனது மனைவியை அழைத்துக் கொண்டு குழந்தையைப் பக்கத்திலிருந்த மருத்துவரிடம் காட்ட கொண்டு போய் விட்டனர்.</b><br />
<b><br /></b>
<b> நாடகக் காட்சிகளை நகர்த்தும் மும்முரத்திலிருந்த எனக்கு, காட்சிக்கான குழந்தையைத் தேடும்போதுதான் அரங்கப் பொறுப்பிலிருந்த உதவி இயக்குநர் நடப்பினைச் சொல்கிறார்.</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b> இப்போது நான் குழந்தைக்கு அப்பாவாக மருத்துவம் பார்க்கச் செல்வதா? நாடக இயக்குநராய் நாடகத்தைத் தொடர்வதா? பாதியில் நாடகத்தை நிறுத்துவதா? குழப்பத்தில் இருந்த நான் ஒரு முடிவுக்கு வந்தேன். குழந்தையை எனது மனைவியும் எனது அப்பாவும் மருத்துவரிடம் காட்டிக் கவனித்துக் கொள்வார்கள். நாடகத்தை என்னைத் தவிர யாராலும் தொடர முடியாது. எனவே நாடகத்தைத் தொடர முடிவு செய்தேன். </b><br />
<b><br /></b>
<b>இப்போது நாடகத்தில் அம்மாவோடு விளையாடும் குழந்தைக்கு என்ன செய்வது? என்ற நெருக்கடி. </b><b>அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு “தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையோடு நான் போய் விளையாடிவிட்டு வருகிறேன் ” என்று குழந்தையின் அப்பாவாக நடிப்பவரிடம் சொல்லும்படி உடனடியாக உரையாடலை மாற்றி நிலைமையைச் சமாளித்தேன். அடுத்தடுத்து குழந்தை பாத்திரம் பங்கேற்கும் காட்சிக்கு என்ன மாற்று செய்வது என்ற குழப்பத்தோடு காட்சிகளை நகர்த்திக் கொண்டு இருந்த நிலையில், என் அப்பா எனது மகனோடு மேடைக்கு வந்து “வாந்தி நின்னுடுச்சுப்பா” ன்னாரு. சோர்வாக இருந்த என் குழந்தை மீண்டும் மேடைக்கு வந்த புத்துணர்ச்சியில் அவனுக்கான உரையாடல்களை உடன் நடிப்பவர்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஒருவாறு நாடகத்தை முடித்தேன். </b><br />
<b><br /></b>
<b> அந்த நாடகத்தில் பெற்ற கசப்பான பட்டறிவால் </b><br />
<b> “ இனிமே குழந்தை பாத்திரங்களை வைத்து நாடகம் எழுதவே கூடாது”</b><br />
<b>” புதுமைங்கிற பேர்ல மேடைக்கு அடங்காத செட்டிங்களை அமைக்கவே கூடாது” ங்கிற இரண்டு உறுதிகளை எனக்குள்ளே எடுத்துக்கிட்டேன். </b><br />
<b><br /></b>
<br />
<b> சமூக மாற்றம் காண விழையும் படைப்பாளிகளின் மனம் கிளை தாவும் குரங்குகள்தானோ? அவை ஓரிடத்தில் கட்டுப்பட்டு நிற்குமா? </b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b>எடுத்த முடிவுகளில் நான் உறுதியாக நின்றேனா? </b><br />
<b><br /></b>
<b> --- அடுத்த தொடரில் சொல்கிறேன்.</b><br />
<div>
<b><br /></b></div>
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-62306018972013081262017-05-12T02:26:00.000-07:002017-05-12T02:26:03.427-07:00எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-19<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: large;"><b>அவனைக் காப்பாற்றப் போய் அவள்...?</b></span><br />
<br />
<b> </b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;">செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்</span></b><br />
<b><span style="color: lime;">அறிவும் அருமையும் பெண்பாலான - எனப் பெண்டிரின் இலக்கணமுரைக்கிறது தொல்காப்பியம். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">பெண்ணின் பெருந்தக்க யாவுள என்கிறார் திருவள்ளுவர். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">பெண்டிரும் உண்டியும் இல்லெனின் மக்கட்கு </span></b><br />
<b><span style="color: lime;">உண்டோ ஞாலத்து உறுபயன்? என்கிறது மணிமேகலை.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் </span></b><br />
<b><span style="color: lime;">அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் - என்கிறார் முண்டாசுக்கவி.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - என்றார் கவிமணி.</span></b><br />
<div>
<b><br /></b></div>
<b><br /></b>
<b> இத்தகு பெருமைக்குரிய பெண்ணினம் காலப் போக்கில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு முள்வேலிச் சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதுதான் வேதனைக்குரியது.</b><br />
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>பெண்டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்,</b></div>
<div style="text-align: center;">
<b>குலமகளுக்கழகு கொழுநனைப் பேணுதல்</b></div>
<b><br /></b>
<b>என்னும் இற்றுப்போன சொலவடைகளால் தன்மை </b><br />
<b>அற்றுப் போகச் செய்தனர் பெண்டிரை.. </b><br />
<b><br /></b>
<b> அடுப்பூ தும் பெண்களுக்குப் படிப்பெதற்கு எனக் கல்வி மறுக்கப்பட்டு, ஆணுக்குரிய போகப் பொருளாய், வெறும் பிள்ளை பெறுகின்ற எந்திரங்களாய் ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்தது., </b><br />
<b><br /></b>
<b> </b><br />
<b> <span style="color: yellow;">பெண்கள் உயர்வு பெறாமல் ஒரு சமூகம் மேம்படாது.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">ஒரு பெண் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார் பெரியார் </span></b><br />
<br />
<b><span style="color: yellow;">பாட்டைத் திறப்பது பண்ணாலே,-இன்ப </span></b><br />
<b><span style="color: yellow;">வீட்டைத் திறப்பது பெண்ணாலே</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் </span></b><br />
<b><span style="color: yellow;">பேதமை அற்றிடும் காணீர்</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் </span></b><br />
<b><span style="color: yellow;">பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">என்று பாரதியும்</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">கல்வியில்லை, உரிமையில்லை பெண்களுக்குக் </span></b><br />
<b><span style="color: yellow;">கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள் </span></b><br />
<div>
<b><span style="color: yellow;"><br /></span></b></div>
<b><span style="color: yellow;">பெண்ஆண் என்ற இரண்டுருளை யால் நடக்கும் இன்பவாழ்க்கை</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு </span></b><br />
<b><span style="color: yellow;">மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">என்று பாரதிதாசனும் தங்கள் கவிச் சாட்டைகளைச் </span></b><br />
<b><span style="color: yellow;">சுழற்றிய பின்னரே </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">எட்டுமறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று பெண்கள் கல்வியில், வேலைவாய்ப்புகளில் விளையாட்டுத் துறையில், விண்வெளியில் வியப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர் .</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">அவர்கள் கவிதைகளின் தாக்கம்தான் என்னை பெண்ணியம் பற்றிய கருப்பொருள் கொண்ட நாடகங்களை எழுதத் தூண்டியது .</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">இன்றும் கிராமப் புறப் பெண்கள் பண்பாடு கட்டுப்பாடு என்ற பெயரில் விலங்கிடப் பட்ட நிலையிலிருந்து மீள முடியாத நிலை இன்னும் தொடர்வது வேதனைக் குரியதே.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">கொடுத்த வாக்குறுதி, குடும்பச் சொத்துகளைக் காப்பாற்றல் , கொத்தடிமை முறை என்னும் நெருக்கடிகளால் பல இளம் பெண்கள் முதிய ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், அம்முதிய கணவர்கள் இறந்தாலும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளாமல் விதவையாகவே இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாடு இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது.</span></b><br />
<b><br /></b>
<b>“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்</b><br />
<b>மணவாளன் இறந்தபின் மணத்தல் தீதோ? என்ற பாவேந்தரின் வரிகள் தான் விதவைத் திருமணத்தை வலியுறுத்தி 1972ல் நான் படைத்த “ பட்ட மரம்” என்ற நாடகம்.</b><br />
<b><br /></b>
<b>பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் </b><br />
<b>பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம் </b><br />
<b><br /></b>
<b>என்ற வரிகளைக் கருப்பொருளாய்க் கொண்டு 1976ல் </b><br />
<b>உ ருவானதே ” நாடும் வீடும் ” என்னும் எனது சமூக நாடகம்.</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-MZ43ignUxsg/WRVzZsS45vI/AAAAAAAABvQ/Ab_Dceq0YnI1fpLXdSr6gcjw0ef_e4TCQCLcB/s1600/IMG_6776.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://1.bp.blogspot.com/-MZ43ignUxsg/WRVzZsS45vI/AAAAAAAABvQ/Ab_Dceq0YnI1fpLXdSr6gcjw0ef_e4TCQCLcB/s640/IMG_6776.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b> வஞ்சகன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட படித்த பெண் ஒருத்தி, தற்கொலை செய்து கொள்ளக் காட்டுக்குள் செல்கிறாள். அங்கு வெட்டி விழுந்த மரத்துக்கடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு விறகுவெட்டியைக் காப்பாற்றுகிறாள், அவனது நேர்மையாலும் உழைப்பாலும் அவனையே விரும்பித் திருமணம் செய்துகொள்கிறாள் . அவனுடைய தொழிலை மதிப்புக் கூட்டிச் சந்தைப் படுத்தி அவனைப் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையச் செய்கிறாள். </b><br />
<b><br /></b>
<b> கெடுவாய்ப்பாக அவளை முன்னர் வஞ்சித்த அந்தக் கெடுமதியாளன் அந்தக் காட்டுக்குள் தன் கூட்டாளிகளோடு மறைந்து வாழ்ந்து இந்நாட்டு இராணுவ இரகசியங்களை அந்நிய முகாமிற்கு விற்றுப் பொருளீட்ட முயல்கிறான். அவனைச் சட்டத்தின் கையில் பிடித்துக் கொடுத்து ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றுகிறாள்.அந்த முயற்சியில் அந்தப் பெண் சந்திக்கும் சவால்களை எப்படிச் சமாளித்து நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுகிறாள் என்பதே மேடை நாடகக் கதையோட்டம்.</b><br />
<b><br /></b>
<b>இந்நாடகத்தில் இரண்டு உத்திகளை மேடையில் காட்சிப் படுத்த திட்டமிட்டிருந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: cyan;">விறகு வெட்டி மரத்தை வெட்டும் காட்சியில் ஒரு உண்மையான மரத்தை நிறுத்தி ( மேடையின் உயர்த்திற்கேற்ப கிளைகளைக் குறைத்து ) கதைத் தலைவனை வெட்டச் செய்து அது அவன் மீது விழும்போது எப்படித் தாங்கிக் குப்புறச் சாய வேண்டும் என்று பயிற்சி யளித்திருந்தேன். அவரும் அப்படியே விழுந்தார். காட்சிப்படி தற்கொலை செய்து கொள்ள வந்த பெண் அதைப் பார்த்து, அங்கு வந்து மரத்தைப் புரட்டி அவனைக் காப்பாற்ற வேண்டும்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">முதல்நாள் ஒத்திகையின்போது அட்டை மரத்தைத் தூக்கிய அந்த நடிகையால் கனமான உண்மையான மரத்தைத் தூக்க முடியாமல் திணறினார். ஒருவழியாக அந்த மரத்தை நிமிர்த்தியவர் கீழே மயங்கிக் கிடந்தவரைத் தூக்கக் குனிந்தபோது யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நடந்தது... </span></b><br />
<b><br /></b>
<b> ----நடந்தது என்ன? அடுத்த தொடரில்...</b><br />
<b><br /></b>
<b><br /></b>
<br />
</div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-61958044063084208892017-05-08T07:43:00.001-07:002017-05-08T07:43:22.906-07:00எனது மேடை நாடக அனுபவங்கள்-தொடர்ச்சி 18<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: yellow; font-size: large;"><b>தேவைகளும் தேடல்களும்.</b></span></div>
<br />
<b> </b><br />
<b> <span style="color: cyan;"> தோல்விகளிலிருந்துதான் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த அனுபவங்களே என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றன.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> ஆம் தொடக்கக் காலத்தில் மேடை நாடகங்களை அரங்கேற்றுவதில் எனக்கு ஏற்பட்ட தடைகள்தான் என்னைத் தகர்ச்சிக்கு சிலிர்த்தெழ வைத்தன.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> 70 களில் தனிநபர் பிரச்சனைகளை மையப்படுத்தி பொழுது போக்கு நாடகங்களைப் படைத்து அரங்கேற்றிய என்னைச் சீண்டிவிட்டவை சமூக அவலங்கள்தான்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> அந்த அடிப்படையில்தான் விதவைகள் மறுமணத்தை வலியுறுத்தும் “ பட்ட மரம் ” நாடகம் உருவானது. பழமை விரும்பிகள் “கட்டி அறுத்தவளுகளுக்கு கல்யாணமா?” என்று முகம் சுழித்தார்கள். ஆனாலும் அதையே உந்துதலாக எடுத்துக் கொண்டு அதே நாடகத்தை பலமுறை அரங்கேற்றினேன்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும் பக்தி என்னும் போர்வையில் பாழ்படும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 1974ல் நான் அரங்கேற்றிய “ நிலைக்கண்ணாடி” நாடகத்திற்கு ஆன்மீக வாதிகள் ஏற்படுத்திய இடையுறு களைத்தான் முந்தையத் தொடரில் எழுதியிருந்தேன்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> மத்தவன் சொல்லி நாம என்ன கேக்குறது?ன்னு அங்கலாய்ப்பவர்கள் தலைவலியும் காய்ச்சலும் தங்களுக்கு வர்றப்பதான் “ஆமாய்யா அவன் சொன்னதிலேயும் தப்பில்லே”ன்னு ஒத்துக்கிற நிலைக்கு வர்றாங்க. </span></b><br />
<b><br /></b>
<b> அப்படித்தான் சாதகம், சோதிடம், கைரேகை, குடுகுடுப்பை, கோணங்கி, பில்லி, சூன்யம் எல்லாம் ஏமாற்று வேலைகள், பால்குடம், காவடி, அலகு குத்தல், தீயிலிறங்கி நடத்தல், மதலை சுமத்தல், தோலாண்டி என்பவையெல்லாம் தேவையற்ற வேண்டுதல்கள், மாயம், மந்திரமெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் செயல்கள் என்னும் கசப்புகளை எனது “நிலைக் கண்ணாடி” நாடகத்தில் கலை வடிவில் தேன்தடவிக் கொடுத்தபோது ஏற்றுக் கொள்ளாமல் எதிர்வாதம் செய்தவர்களில் பலர் பக்தி மார்க்கத்தினாலேயே பாதிக்கப்பட்டபோதுதான் உண்மையை உணர்ந்தார்கள்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: blue;">அப்படி அந்த நாடகத்திற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களில் ஒரு சில இங்கே...</span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;">நான் முன்பு வசித்த பகுதியில்</span> <span style="color: lime;"> எனது பக்கத்துவீட்டுக்காரர் ஒரு சாமியாடி. அவர் வீட்டுக் கொல்லைப்புறக் கொட்டகையில் எப்போதும் கோணங்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். குடும்பக் கோளாறுகள், நோய் நொடி களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் நாளைக்கு நாலுபேர் வருவார்கள். அவர்களுக்கு முத்துப் போட்டுப் பார்த்து நிவர்த்திக்கு ஏதாவது சொல்லி அனுப்புவார்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அவருடைய மனைவிக்கு வயிற்றில் கட்டிவந்து துன்பப்பட்டபோதும் வெறும் சாம்பலை மந்திரித்துத் தடவுவதும், காளிக்கு முடிகாணிக்கை செலுத்துவதுமாக இருந்து,கடைசியில் நோய் முற்றிய நிலையில் மரணமடைந்தார். அதேபோல் அந்த சாமியாடியும் தனது நரம்புத் தளர்ச்சி நோய்க்கு மருத்துவத்தை நாடாமல் மாந்தரீகத்தை நாடி இறுதியில் வாதநோய் பாதித்து இறந்தார். அவரது மாந்தரீகத்தை நம்பிய மக்கள் அப்போதுதான் கொஞ்சம்சிந்திக்கத் தொடங்கினார்கள் .</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> பில்லி சூன்யம் வைப்பது, செய்வினை செய்வது, போன்றவற்றில் பேர் வாங்கிய எனது உறவினர் ஒருவர், எனது அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, என் தாயாரிடம் </span></b><br />
<b><span style="color: lime;"> “ பய துக்கிரித்தனமாப் பண்றான், சாமிக்குத்தமாயிடும், கண்டிச்சு வை” ன்னு அறிவுரை சொன்னார்.</span></b><br />
<b><span style="color: lime;">அவர் தனக்கு வந்த நோயைத் தீர்க்க வழிதெரியாமல் சிரமப்பட்டு நோய் முற்றிய நிலையில் அரிமழம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்ற முடியாமல் </span></b><br />
<b><span style="color: lime;">இற ந்தே போனார். அவருடைய வாரிசுகள் அப்போதுதான்</span></b><br />
<b><span style="color: lime;"> எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> நான் வசித்த பகுதியில் ஐந்து பெண்குழந்தைகளின் தாயார் ஒருவர், போதிய வருமானமற்ற கணவர், குடும்பப் பிரச்சனை இவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஆன்மீகத்தில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்த அவர் கணவர் ( எனது நாடகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தவர்) ஒரு மாந்தரீகரைக் கொண்டு வந்து தன் மனைவியின் மனநோய்க்கு தீர்வுகாண முயன்றார். ஒரு மாதம் இரவு தோறும் வீ ட்டுக்குள்ளேயே ஏதேதோ மந்திரங்கள் செய்வதாகப் பணத்தைக் கறந்து அவர்களைக் கடனாளியாக்கி, அந்தப் பெண்மணியைப் பைத்தியமாக்கி வி ட்டு தலைமறைவாகிவிட்டார். அவரே ஒருநாள் என்னிடம் வந்து நீ நாடகத்துல சொன்னது சரிதாம்பா. அயோக்கியப் பய என் குடியைக் கெடுத்துட்டான்னு புலம்புனார். பாவம் அந்தக் கவலையே அவருக்கு இறுதியாகி விட்டது. </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> எனது நாடகத்திற்கு முட்டுக் கட்டைகள் போட்ட, எங்கள் பகுதிக் கோயில் பூசாரியாக இருந்த ஒருவர், கோயில் பொருள்களை அபகரித்ததும், அவரை ஊரார் புறக்கணித்ததும் எனது நாடகக் கருத்துகளின் மீது பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாக அமைந்தது.</span></b><br />
<b><br /></b>
<b> எனது கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்கள் எங்கள் மணிமன்றத்தில் புதிய வரவுகளாக, மீண்டும் அந்த நாடகம் அதே பகுதியில் 1982 ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தேறியது முன்னிலும் சிறப்பான வரவேற்புடன்.</b><br />
<br />
<br />
<b> 1991 அறிவொளி இயக்க ஈடுபாட்டினை அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயல் பட்டுப் பட்டி தொட்டிகளிலெல்லாம் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த காலம்.</b><br />
<b><br /></b>
<b> குறிப்பாக அற்புதங்களை விளக்குதல் என்னும் தலைப்பில் மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெறும் கையில் விபுதி வரவழைப்பது, தங்கச் சங்கிலி வரவழைப்பது, தேங்காய்க்குள் மலர்ந்த மலர்கள், எலுமிச்சம் பழத்தினுள் இரத்தம் வரவழைப்பது, தலையில் தேநீர் தயாரிப்பது, தீ தேய்த்தல், சூடம் விழுங்குதல், தீப்படுகையில் நடத்தல், குழிக்குள் மனிதரைப் புதைத்து உயிருடன் மீட்டல் முதலானவை அறிவியல் வழிப்பட்டவை என்பதை செயல்வழி நடத்திக் கொண்டிருந்தோம். இதற்காக பாண்டிச்சேரி, நாகை முதலிய இடங்களில் பயிற்சியும் பெற்றிருந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> அந்த சமயத்தில்தான் ஆன்மீகப் போர்வையில் அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த பாத்திமாநகர் பிரேமானந்தா சாமியாரின் அன்முறைச் செயல்கள் கசிந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஒவ்வொரு சிவன் ராத்திரியிலும் அவர் வயிற்றுக்குள்ளிருந்து லிங்கம் எடுக்கும் அற்புதங்கள் நிகழ்த்துவதும், அதன்பால் ஈர்க்கப்பட்ட பல அரசியல் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல முக்கிய புள்ளிகள் அங்கு சென்று ஆசீர்வாதம் பெறுவதுமான செயல்கள் நடந்து கொண்டிருந்தது.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<span style="color: yellow;"><b> ஊடகங்கள் முன்னிலையில் அரசு அலுவலர்கள் பார்வையில் லிங்கம் எடுப்பது அற்புதமல்ல </b><b>அது அறிவியல் வழிப் பயிற்சி என்பதைப் </b><b>பொதுமேடையில்</b><b> செய்து காட்டி நீதிமன்றத்திலும் நிரூபித்து அந்தப் போலிச் சாமியார் சிறைத் தண்டனைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் மக்களிடமிருந்த அத்தகு நம்பிக்கைகள் கொஞ்சம் </b></span><br />
<b><span style="color: yellow;"> மட்டுப்பட்டன. </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அத்தகு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட திருக்குறள் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் தங்கள் திங்கள் நிகழ்வுகளிலும், ஆண்டுவிழா நிகழ்வுகளிலும் முற்போக்குக் கருத்துள்ள கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த எங்கள் மன்றத்திற்கு அழைப்பு விடுத்தன. வாய்ப்புகளில் மகிழ்ந்தாலும், பல மாறுபட்ட பின்புலக் காட்சிகளை வைத்து அரங்குகளில் நாடகம் நடத்திய எனக்கு ஒற்றைத் திரையிலேயே கதையையும் காட்சிகளையும் நகர்த்த வேண்டிய நெருக்கடி இருந்தது.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">ஆனாலும் கருத்துகள் பரவட்டும் என்ற நோக்கில் அந்த மேடைகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளை நாடகமாக்கி நடத்தினோம். அவற்றுள் நகர்மன்றத்தில் அரங்கேற்றிய ஆசிரம அக்கிரமங்களைத் தோலுரிக்கும் “நெருஞ்சிப் பூக்கள்” என்ற நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப் பட்டது.</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-KK3shXNwbbo/WRB3BLkhTII/AAAAAAAABto/ybYy0yWDIZkhHOuLWWST3hoPg1ISZpAgwCLcB/s1600/IMG_6870.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://1.bp.blogspot.com/-KK3shXNwbbo/WRB3BLkhTII/AAAAAAAABto/ybYy0yWDIZkhHOuLWWST3hoPg1ISZpAgwCLcB/s640/IMG_6870.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b> <span style="color: magenta;">இப்படி போலிச் சாமியார்களைப் பற்றியேதானா நாடகங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்றும் அவற்றின் தேவையுள்ளதால் இரண்டு தொடர்களும் அதற்கானதாகிவிட்டது.</span></b><br />
<br />
<b> அடுத்த பதிவில், பெண்ணுரிமை, பெண்சமத்துவம் ச மூக சமநீதி பற்றிய நாடகங்களின் சிறப்புகள் தொடரும்.</b><br />
<br />
<br />
<br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-78160152687591011102017-05-06T01:29:00.000-07:002017-05-06T01:29:26.717-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -17<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="font-size: large;"><b>தேன்தடவிய கசப்புகள் </b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<b> <span style="color: yellow;"> கற்பனைகளை விட நம்மைச் சுற்றி நிகழும் அறிவுக்கு ஒவ்வாத ந டப்புகளே ஒரு படைப்பாளியை சமூக மாற்றத்திற்கான படைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அந்த வகையில், நான் களமாடிய கிராமத்து மக்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் வாழ்வியல் இடர்ப்பாடுகளை மந்திரம் பில்லி, சூன்யம் முதலிய வற்றால் தீர்ப்பதாக ஆசைகாட்டி, நம்ப வைத்துத் தங்களின் பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொண்ட சில போலிச் சாமியார்களின் தில்லு முல்லுகளைப் பற்றிப் பாமர மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட </span></b><br />
<b><span style="color: yellow;"> “ நிலைக்கண்ணாடி” என்னும் நாடகத்தைப் படைத்தேன்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;">கதையின் சுருக்கம் இதுதான் </span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஒரு அரசு ஊழியரின் மனைவிக்கு, மாங்கல்ய தோசம் இருப்பதாக ஒரு சாதகக்காரன் சொன்னதை நம்பி, அதனை நிவர்த்தி செய்ய ஒரு சாமியாரை நாடுகின்றனர் அந்தக் குடும்பத் தலைவரும் அவருடைய மருமகளும்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> வசதியான இடம் என்பதை அறிந்த அந்தப் போலிச் சாமியாரும் அந்தப் பெண்ணின் மாங்கல்ய தோசம் நீக்க அவ்வீட்டுக்குச் சென்று வழிபாடு செய்யப் பெரும் பொருள் கேட்கின்றான். முற்போக்குச் சிந்தனையாளனான அப்பெண்ணின் கணவன் அதைத் தடுத்து அந்தப் போலிச்சாமியாரை வெளியேற்றுகிறான்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<b><span style="color: yellow;"> இதில் ஆத்திரமுற்ற அந்தப் போலிச் சாமியார், தன்னை அவமானப் படுத்திய அந்தக் குடும்பத்தைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னுடைய கையாள்களை, கைரேகை ஜோசியனாக, குடுகுடுப்பைக் காரனாக, அவ்வீட்டிற்கு அனுப்பி அந்தக் குடும்பத்திற்கு கேடுகாலம் நெருங்குவதாகக் குறி கூறச்செய்கிறான்.</span></b><br />
<b><span style="color: yellow;"><br /></span></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-2L0Y_hhM0p8/WQ1-Pvkp_vI/AAAAAAAABtM/-_DXVoo2UL4Q9Jt79ar67GV5AD_QIKLyQCLcB/s1600/IMG_6832.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://1.bp.blogspot.com/-2L0Y_hhM0p8/WQ1-Pvkp_vI/AAAAAAAABtM/-_DXVoo2UL4Q9Jt79ar67GV5AD_QIKLyQCLcB/s400/IMG_6832.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<b> <span style="color: lime;"> சென்னையில் பட்டப் படிப்பு முடித்து கிராமத்திற்குத் திரும்பும் அக்குடும்பத் தலைவனின் தங்கை, அந்தச் சாமியார் அனுப்பிய கைரேகை, குடுகுடுப்பை, ஆகியோரை அடித்து விரட்டுகிறாள்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> தன் ஆட்களை அவமதித்த அந்தத் துடுக்குக்காரியைப் பழிவாங்க அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாக தன் கையாளை கோணங்கிக்காரனாக அனுப்பிப் பேயோட்ட முயல்கிறான் அந்தப் போலிச் சாமியார். வந்த கோணங்கிக்காரனையும் எருக்க மிளாறால் அடித்து விரட்டுகிறாள் அப்புரட்சிப்பெண்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> தனதுமுறைப்பெண்ணாகிய அத்துடுக்குக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில், தனது அக்காளின் தோசம் தீர்க்க முன்வருகிறான் ஒரு வெகுளி இளைஞன். தன்கணவனுக்குத் தெரியாமல் தன்வெகுளித் தம்பியை அந்தச் சாமியாரிடம் அனுப்பி, தனது தாலிபாக்கியம் நிலைக்க பரிகாரம் கேட்கச் சொல்கிறாள் அவனது அக்கா. </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அவனை அம்மனுக்குப் பால்குடம் எடுக்கச் சொல்லி அவர்களைத் திசை திருப்பிவிட்டு , தன்னை அவமானப் படுத்திய அந்தத் துடுக்குக்காரப் பெண்ணைக் கடத்தி, வன்கொடுமை செய்யத் திட்டமிடுகிறான் போலிச் சாமியார். பால்குட நிகழ்வில்,தனக்கு அம்மன் அருள் வந்ததாக ஆடி அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, அந்தப் போலிச்சாமியார் கும்பலைப் போலீசில் பிடித்துக் கொடுப்பதாக அந்த நாடகத்தை முடித்திருந்தேன்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> ஒருமாத கால ஒத்திகையில், கதையின் உட்பொருளை மோப்பம் பிடித்த அந்தப் பகுதி கோயில் குருக்கள், பஞ்சாங்கம் பார்க்கும் பண்டாரம் இருவரும் சேர்ந்து முதலில் பகுத்தறிவு வாதியாக நடிக்க முன்வந்த எங்கள் மன்ற உறுப்பினரின் அப்பாவிடம் சொல்லி அவனை நடிக்க விடாமல் செய்தார்கள். அதற்கு வேறு நபரைத் தயாரித்து பயிற்சி கொடுத்து வந்தேன். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அடுத்து அந்தப் பகுதிப் பள்ளியில் நாடகப் பயிற்சி நடத்தவிடாமல் பள்ளித் தலைமை ஆசிரியருக்குப் புகாரளித்து இடையுறு செய்தனர். வேறு இடத்தில் பயிற்சியளித்து வந்தோம். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நடிகைக்கு மிரட்டல் கடிதம் போட்டனர். அவருக்கு தைரியம் சொல்லி முதல்நாளே முழு ஒத்திகைக்கு வரவழைத்தோம்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> அதையடுத்து, நிகழ்ச்சிக்கு மின் இணைப்பு வழங்கிய அந்த வீட்டு அம்மையார் பற்றி மின்வாரியத்தில் புகாரளித்தனர். உடனடியாக ஒரு மின்னாக்கி ( ஜெனரேட்டர் ) ஏற்பாடு செய்து கொண்டோம்.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> எல்லாத்தடைகளையும் மீறி நாடகம் நடந்து கொண்டிருந்த போது, சில சில்லறைச் சலசலப்புகளை அந்தப் பிற்போக்கு வாதிகளின் கைத்தடிகள் ஏற்படுத்திப் பார்த்தார்கள். பாதுகாப்புக் கு வந்திருந்த காவல் துறை யினரால் அந்த சலசலப்பு அடங்கியது.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> இறுதியாக பால்குடம் எடுக்கும் போது சட்டிப் பறை யடிக்க ஏற்பாடு செய்து அழைத்திருந்த தொழிலாளிக்கு மதுவை அளவுக்கு அதிகமாக வாங்கிக் கொடுத்து எழுந்து நிற்க முடியாத அளவுக்குச் சாய்த்து விட்டார்கள். அந்த வேடத்தையும் நானே ஏற்று நாடகத்தை வெற்றிகரமாக முடித்தோம். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<span style="color: lime;"><b>காலங்காலமாய் பீடித்திருந்த மூட நம்பிக்கை நோய். கசப்பான மருந்தை அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா?. அதனால்தான் நாடகக்கலையென்னும் தேனைத் தடவி அந்த மருந்தைப் புகட்டினேன்.</b><b> பாராட்டினார்கள் பலர். பகை கொண்டனர் சிலர்.</b></span><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> </span><span style="color: cyan;"> இரண்டு நாள்கள் கழித்து நகராட்சி ஆணையரிடமிருந்து விசாரணைக்கு வரச்சொல்லி எனக்கு அழைப்பாணை வந்தது.</span></b><br />
<b><span style="color: cyan;">( நான் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆசிரியராகப் பணிபுரிந்த காலம்) விசாரணைக்குச் சென்ற போது அந்த ஆணையர் </span></b><br />
<b><span style="color: cyan;">“ என்னய்யா அரசுப் பணியிலிருந்து கொண்டு அனுமதியில்லாமல் நாடகமெல்லாம் போடுகிறாயாமே?” எனக் கேட்டார். ” அனுமதி வாங்க வேண்டுமென்பது எனக்குத் தெரியாது” என விளக்கமெழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> ஆன்மீகப் போர்வையில் உழைக்காமல் பிழைக்கும் எத்தர்களின் வேலைதான் அந்தப் புகாரென்று பின்னர் தெரிந்தது.</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> ஆனால் அவர்களே ஒரு கட்டத்தில் இந்த நாடகத்தில் காட்டப்பட்டவையெல்லாம் உண்மையென்று உணர்ந்த காலம் வந்தது. எப்போது தெரியுமா?</span></b><br />
<b><br /></b>
<b> --- அடுத்த தொடரில் </b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-23474096482873876622017-04-28T09:17:00.000-07:002017-04-28T09:17:08.073-07:00எனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;">தடைக் கற்களே படிக்கற்களாக</span></b></div>
<br />
<br />
<b> <span style="color: lime;"> நீறு பூத்த நெருப்பு நாடகத்தில், சாதி ஆணவக் கொலையாக தாழ்ந்த சாதிப் பெண்ணைக் குத்துவிளக்கு பூசை என்ற பெயரில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் காட்சியில், அந்தப் பெண்ணுக்கு நஞ்சு கலந்த பாலைக் கொடுக்க, அதைக் குடித்த அப்பெண் குத்து விளக்குகளுக்கிடையே மயங்கிவிழ ,ஆதிக்கசாதி செல்வந்தர் தன் உதவியாளோடு அவள்மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைக்க அவள் எரிந்து சாவதாகக் காட்சி.</span></b><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b>பெட்ரோலுக்குப் பதிலாக டின்னிலிருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, குத்து விளக்கு அடுக்கியிருந்த பெஞ்சின் உள்புற விளிம்பில் பார்வையாளர்க்குத் தெரியாமல் பொருத்தியிருந்த தகரத் தோணியில் கழிவுஎண்ணையையும் சிறிது பெட்ரோலையும் ஊற்றி வைத்திருந்தோம். பெண் உடலில் பற்ற வைப்பது போல, அந்த உதவியாள் அந்தத் தோணியில் ஊற்றியுள்ள எரிபொருளில் தீயைப் பற்ற வைக்க வேண்டும். அது ஆறடி நீளமுள்ள அந்தத் தோணி முழுதும் பரவி எரியும். வெளியிலிருந்த பார்ப்பதற்கு படுத்திருக்கும் பெண்மீது நெருப்பு எரிவது போலத் தெரியும்.</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b> திட்டமிட்டபடி தகரத்தோணியின் ஒரு நுனியில் செல்வந்தரின் கையாள் பற்றவைத்த தீ பெஞ்ச் நீளத்திற்கும் பரவி எரிந்தது. ஆனால் நாங்கள் எதிர்பாராத விதமாக அந்தத் தகரத்தில் ஆணிஅடித்துக் கழற்றிய சிறிய ஓட்டை ஒன்று இருந்திருக்கிறது. அதை அடைக்க மறந்து விட்டோம். அதன் வழியாக எரியெண்ணைக் கசிந்து மேடையில் சொட்ட, சொட்டின் வழியே தீயும் மேடையில் விரித்திருந்த தார்பாயில் பிடிக்கத் தொடங்கியது.</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b> முன்னேற்பாடாக மேடையின் இரு பக்கத்திலும் ஈரச்சாக்குகளையும், எண்ணைத் தீயை அணைக்கக் கூடிய நுரைத் தீயணைப்பானை வாங்கித் தயாராக வைத்திருந்தோம். ( எங்கள் மன்ற உறுப்பினர் தீயணைப்புத் துறையில் அலுவலராக இருந்ததால்)</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b> தார்பாயில் பற்றிய தீ பரவி, மயங்கி விழுந்ததாகப் பெஞ்சுகளுக்கிடையே படுத்திருந்த அந்த நடிகையின் சேலை முந்தானை வரை சென்றுவிட்டது. விபரீதத்தை உணர்ந்த நான், முன்திரையை மூடச் செய்து, நடிகையை இழுத்து தீப்பற்றாதவாறு ஒப்பனை அறைக்கு அனுப்பிவிட்டேன். இருபுறமும் தயாராக வைத்திருந்த ஈரச் சாக்குகளைப் போட்டும் தீ அணையாத நிலையில் எனது மகன் உடனடியாக நுரைத் தீயணைப்பானைத் திறந்து இயக்கி நுரையைப் பீய்ச்சி தீயினை அணைத்து விட்டார் ( அவர் ஊர்க்காவல் படையில் தீயணைப்புப் பயிற்சி பெற்றிருந்தவர்)</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b> இதற்குள் திரையமைத்திருந்த கலியமூர்த்தி திரைச் சீலைகளைக் காப்பாற்ற, அவற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பார்வையாளர்கள் காட்சியின் மெய்மையை ரசித்துக் கைதட்டிக் கொண்டிருந்தனர். மேடையில் இருந்த இசைக் குழுவினர் இசைக் கருவிளோடு மேடையைவிட்டு இறங்க, ஒலி, ஒளி அமைப்பாளர் மின்சாரத்தைத் துண்டிக்கவும்தான் நடந்த விபரீதம் வெளியே தெரிந்து, சற்று நேரத்தில் ஒரே கலவரமாகிவிட்டது. </b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b>தகுந்த முன்னேற்பாடு இல்லாமலிருந்திருந்தால் நாடக அரங்கு, அதைச்சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம். பத்து நிமிட பதற்றத்திற்குப் பின், மீண்டும் நாடகக் காட்சிகள் தொடர்ந்து நடந்து முடிந்தது.</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b>எங்கள் மன்றக் கவுரவ உறுப்பினராக இருந்த நினைவில் வாழும் திரு சின்னையா அவர்கள், அவ்வாண்டு திருவப்பூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நடந்த அவர் குடும்பத்தாரின் மண்டகப்படி நாளன்று அதே நாடகத்தைப் போடக் கேட்டுக் கொண்டார்.</b></span><br />
<span style="color: lime;"><br /></span>
<span style="color: lime;"> <b>அங்கு மிக எச்சரிக்கையோடு இந்தக் காட்சியை அரங்கேற்றினோம். ஆனால் காட்சிஅரங்கேறிய சிறிது நேரத்தில் ஒரு தீயணைப்பு வண்டி அரங்கின் பின்புறம் வந்து நின்றது. வந்தவர்களிடம் விசாரித்தபோது யாரோ நாடகக் கொட்டகை தீப்பிடித்து எரிவதாகப் போன் வந்ததால் அவர்கள் வந்ததாகச் சொன்னார்கள். அது எங்களின் தந்திரக் காட்சி என்று சொன்னபின் அவர்கள் திரும்பிச் சென்றனர்.</b></span><br />
<br />
<b>இதுபோலத்தான் நான் பணிபுரிந்த இராசகோபாலபுரம் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி நாடகத்தில், கண்ணகி, பாண்டியன் அரண்மனைத் தூண்களில் எரிந்து கொண்டிருந்த தீவெட்டிகளை எடுத்து மதுரையை எரிப்பதாகக் காட்சியமைத்திருந்தேன். தலைமை ஆசிரியரும், ஆண்டுவிழாக் குழுவினரும் தீ எரிக்கும் காட்சி வேண்டாமே என்றனர். அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, மிகுந்த முன்னேற் பாடோடு </b><b>தந்திரக் காட்சியாக </b><b> நடத்தப் பட்டு பயந்தவர்களாலேயே பாராட்டப் பட்டது.</b><br />
<b><br /></b>
<b> அதே பள்ளியில் அடுத்த ஆண்டில் நடந்த ஆண்டுவிழாவில் </b><br />
<b>“கருகி மணத்த மலர் ”( ஜோன் ஆப் ஆர்க்) நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் ஜோன் ஆப் ஆர்க்கை கட்டிவைத்து தீவைக்கும் காட்சியிலும் இதேபோலத் தந்திரக்காட்சியை நடத்திக் கல்வி அலுவலர் பொதுமக்களின் பாராட்டினைப் பெற்றது அந்நாடகம்.</b><br />
<br />
<b>புதுக்கோட்டை சீதையம்மாள் அரங்கில் நடந்த இளங்கோவடிகள் மன்ற ஆண்டுவிழாவில் “சிலம்பின் சிலிர்ப்பு” நாடகத்தில் கண்ணகி மதுரையை எரிப்பதான காட்சியிலும் இதே தந்திர உத்தியால் அந்நாடகம் சிறப்புப் பெற்றது.</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-vg3KURyfmzc/WQNeAPTPSYI/AAAAAAAABrs/MKOkIO4TCKcQcqlsPS_BNB9V7jCBz1KUACLcB/s1600/IMG_6883.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://3.bp.blogspot.com/-vg3KURyfmzc/WQNeAPTPSYI/AAAAAAAABrs/MKOkIO4TCKcQcqlsPS_BNB9V7jCBz1KUACLcB/s400/IMG_6883.jpg" width="400" /></a></div>
<br />
<b> நாடகம் நடத்துவதற்கென வசதிகள் கொண்ட அமைப்பு ரீதியான அரங்குகள் புதுகை நகரில் இல்லாத நிலையில், தடைகளையும், அச்சமூட்டல்களையும் கடந்து, வலிந்து சில தந்திர உத்திகளை எனது நாடகங்களில் கையாண்டு வந்தேன்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்து கலைகள் வெறும் இன்புறலுக்காக மட்டுமே அமையலாகாது என்பது நாடகச் செம்மல் பம்மல் சம்பந்தம் அவர்களின் கருத்து. ஒரு கலை அல்லது படைப்பு பார்ப்பவர் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவே இருக்க வேண்டும். </span></b><br />
<span style="color: yellow;"><br /></span>
<span style="color: yellow;"> <b>அந்த எண்ணத்தில் பாமர மக்களிடம் அறியாமையால் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை மாற்றும் முயற்சியாக “ நிலைக் கண்ணாடி” என்னும் சமூக சீர்திருத்த நாடகத்தை ஆக்கி அரங்கேற்றினேன்.</b></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-Gz-frgk21NM/WQNhz1zSZvI/AAAAAAAABsE/dy91GMxC670K9XF-plSgcMrtqTObbKpeACLcB/s1600/IMG_6782.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="272" src="https://4.bp.blogspot.com/-Gz-frgk21NM/WQNhz1zSZvI/AAAAAAAABsE/dy91GMxC670K9XF-plSgcMrtqTObbKpeACLcB/s400/IMG_6782.jpg" width="400" /></a></div>
<br />
<b> </b><br />
<b> <span style="color: cyan;">இந்நாடகத்தில் போலிச் சாமியாரின் பித்தலாட்டங்கள், கைரேகை ஜோஸ்யம், குடுகுடுப்பை, கோணங்கி, பால்குடம், காவடி முதலான பக்தி முறைகளால் அமைதி குலைந்த ஒரு குடும்பத்தின் கதையை காட்சிப் படுத்த முனைந்திருந்தேன்.</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;">முப்பது நாள்கள் ஒத்திகை நடந்ததில் கதையின் மையப் பொருளால் தங்களின் மகிமை கெட்டுவிடும் என்றெண்ணிய சில ஆன்மீகவாதிகள் இந்த நாடகத்தை அரங்கேறவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தினர்.</span></b><br />
<b><br /></b>
<b> அவற்றில் மீண்டு அந்த நாடகம் அரங்கேறியதா? தடைப்பட்டதா?</b><br />
<br />
<b><i><span style="color: yellow;">-- அடுத்த தொடரில் பார்ப்போமே.</span></i></b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-26337243280611831972017-04-24T08:01:00.001-07:002017-04-24T08:01:58.800-07:00எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;">பட்டாலும் புத்தி வரலையே</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-size: large;"><br /></span></b></div>
<br />
<span style="color: lime;"> <b>கட்டுக் கட்டாக பணத்தாள்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து அந்தப் பெட்டியை ( சூட்கேஸை) ஆவலோடு திறந்த மாயாவியை பெட்டிக்குள் அங்கம்மா வைத்திருந்த கருநாகம் கடிக்கும். ஆத்திரமடைந்த மாயாவி அந்தப் பாம்பைக் கடித்து உதறி எறிந்து விட்டு மலைக்குகையில் அடைத்து வைத்திருக்கும் உண்மையான தந்தையிடம் ஓடி அவர் மகளைக் காப்பாற்றச் சொல்ல வேண்டும் என்பதுதான் காட்சி.</b></span><br />
<br />
<b> பயிற்சியில் பயன்படுத்திய சாரைப்பாம்பை வாயைத் தைத்துப் பெட்டிக்குள் வைத்திருந்தோம். மாயாவியாக நடித்தவர் பெட்டிக்குள் கையை விட்டதும் கடிக்க முடியாத அந்தப் பாம்பு அவர் கைகளில் சுற்றிக்கொண்டது. அவர் அந்தப் பாம்பை கடிப்பதுபோல் பாவித்துத் தூக்கி எறிய முயன்றார். அவர் கைகளில் இறுக்கமாகச் சுற்றிக் கொண்ட பாம்பு எவ்வளவு உதறியும் கையைவிட்டுப் பிரியவில்லை. இதை எதிர்பார்க்காத அவர் ஒருகையால் பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டு,மறு கையால் அதன் வால் பகுதியைப் பிரிக்க, அது முறுக்க, ஒரு இரண்டு நிமிடப் போராட்டத்திற்குப் பின் ஆவேசமாய் கையைச் சுற்றியிருந்த பாம்பைப் பிரித்து விட்டார். </b><b>பிரித்த பாம்பை அரங்கத்தின் பின்பக்கத்தில் வீச வேண்டிய அவர் பதற்றத்தில் முன்பக்கத்தில வீசி விட்டார். </b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;">அதுவரை கைதட்டி ஆரவாரமாய் ரசித்த பார்வையாளர்கள், தங்கள் மத்தியில் பாம்பு வந்து விழுந்ததும் அதிர்ச்சியில் கதறிக்கொண்டு களைந்து ஓடத் தொடங்கினர். பாம்பென்றால் படையும் நடுங்கத்தானே செய்யும். கூட்டத்திலிருந்த துணிச்சல்காரர் ஒருவர் அதை அடித்துக் கொன்றுவிட்டார். என்றாலும் , எதிர்பாராத இந்நிகழ்வால் தொழில் நுட்பக் கலைஞர், சக நடிகர்கள் எல்லோரும் கொஞ்சநேரம் வெலவெலத்துப் போனோம் . ஆனாலும் நாடகத்தைத் தொடர்ந்தாக வேண்டுமே. மாயாவியாக நடித்தவரைத் தேற்றி அடுத்த இறுதிக்கட்டக் காட்சிகளை நடத்தினோம். நாடகத்தின் இறுதிக் கட்டம் என்பதால் மக்கள் மீண்டும் அந்த இடத்தில் உட்கார அஞ்சி நின்று கொண்டே அடுத்தடுத்த காட்சிகளைப் பார்த்தனர். </span></b><br />
<br />
<b> இனிமே இதுபோல் விசப்பரிட்சையில் இறங்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு செஞ்சேன். ஆனாலும் அதுவும் பிரசவ வைராக்யம் போலத்தான் போயிற்று.</b><br />
<br />
<b><span style="color: magenta;"> 1986ல் அரங்கேற்றிய “நீறு பூத்த நெருப்பு” என்ற நாடகத்தில் ஒரு உணர்ச்சி மயமான காட்சி. </span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-za_3XREpmAQ/WP4HiDR6c3I/AAAAAAAABqA/bOmjM5EJsxIfaHVq0GdX8azHHlTxco6SACLcB/s1600/IMG_6787.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="412" src="https://4.bp.blogspot.com/-za_3XREpmAQ/WP4HiDR6c3I/AAAAAAAABqA/bOmjM5EJsxIfaHVq0GdX8azHHlTxco6SACLcB/s640/IMG_6787.jpg" width="640" /></a></div>
<br />
<b> <span style="color: cyan;">இந்நாடகக் கதையில், தந்தையின் கண்டிப்பை மீறி, தான் காதலித்த ஒரு பெண்ணை கதைத்தலைவன் மணந்து கொள்கிறான். தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கசாதி யைச் சேர்நத கதைத் தலைவனின் தந்தை, தன் மகனை ஒறுக்கவோ ஒதுக்கவோ முடியாத நிலையில் அந்தப் பெண்ணை நயவஞ்சகமாகக் கொல்ல முயலுகிறார். </span></b><br />
<br />
<b> அதன்படி அந்தப் பெண்ணின் சாதித் தோசம் நீங்க 108 குத்துவிளக்கு பூசை செய்யச் சொல்லி, அவளுக்கு பாலில் நஞ்சு கலந்து கொடுத்து விளக்கேற்றச் சொல்வார். விளக்கேற்றும் போது மயங்கி விழுந்த அந்தப் பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, குத்து விளக்குப் பூசை செய்யும் போது சேலையில் தீப்பற்றி எரிந்து இறந்து விட்டதாகத் தன் மகனையும், ஊரையும் நம்ப வைத்து நாடகமாடுவார்.</b><br />
<br />
<b> <span style="color: lime;"> இக்காட்சி பிரமிப்பாக அமைய வேண்டுமென்று இரண்டு பெஞ்சுகளில் குத்து விளக்குகளை ஏற்றி, அதற்கிடையில் அந்தப் பெண்ணை மயங்கி விழச்சொல்லி, அவள் மீது பெட்ரோல் போல் தண்ணீரை ஊற்றி, தந்திரமாக ஒரு தீப்படும் காட்சி வைத்திருந்தேன். </span></b><br />
<b><br /></b>
<b> அக்காட்சியில் நடிக்க வந்த நடிகை எலிசபெத், முதல்நாள் முழு ஒத்திகையின்போது பயந்து நடிக்கத் தயங்கினார். அந்தக் காட்சியில் நான் இரு பெஞ்சுகளுக்கிடையே படுத்து தீயின் வெப்பம் என்னைத் தாக்காதவாறு தீ எரித்துக் காட்டி தைரியமூட்டினேன். தயக்கத்தோடு பயிற்சி எடுத்தபின் மேடையில் அக்காட்சியை அப்படியே அரங்கேற்ற முடிவாயிற்று.</b><br />
<br />
<span style="color: yellow;"> <b>காட்சிப்படி, அந்தப் பெண்ணுக்குக் கதைத் தலைவனின் தந்தை வாழ்த்தி நஞ்சு கலந்த ( தேன்தான் ) பாலைக் கொடுத்தார். அந்தப் பெண் பெஞ்சுகளில் அடுக்கி வைத்திருந்த குத்து விளக்குகளை எரிய விட்டார். கடைசி விளக்கேற்றும்போது அவர் மயங்கிக் கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி, ஆதிக்க சாதிக்காரர் ஒரு போக்கிலி உதவியுடன் அவள் மீது பெட்ரோலை ஊற்றினார் ( தண்ணீர்தான் ).</b></span><br />
<b><span style="color: yellow;">எனது உத்தியின்படி தீப்பற்றி எரியத் தொடங்கியது. பார்வையாளர்கள் காட்சியின் தீவிரத்தில் உறைந்து போயிருந்தனர்.</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-H4Elajzm648/WP4Mfp8-HBI/AAAAAAAABqc/hTth874qvHsaRyJSqWU-CUwI0CIJwSMLwCLcB/s1600/IMG_6831.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://4.bp.blogspot.com/-H4Elajzm648/WP4Mfp8-HBI/AAAAAAAABqc/hTth874qvHsaRyJSqWU-CUwI0CIJwSMLwCLcB/s640/IMG_6831.jpg" width="640" /></a></div>
<br />
<b> அந்த வேளையில்தான் நாங்களே எதிர்பாராத, பதற வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. </b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;">--- பதற்றத்தை தணித்துக் கொண்டு தொடர்வோம்</span></b><br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-57625333609071632332017-04-21T01:33:00.000-07:002017-04-21T01:33:03.373-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="font-size: large;"><b> கழுதையும் கருநாகமும்..</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<b> டி.கே.எஸ. சகோதரர்களின் நாடகங்கள், ஆர்.எஸ் . மனோகரின் இலங்கேஸ்வரன், காடக முத்தரையன், சாணக்கிய சபதம், போன்ற நாடகங்களையும், பேரறிஞர் அண்ணாவின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்களையும், எம்.ஆர்.இராதாவின் இரத்தக் கண்ணீர் நாடகத்தையும்,எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் அட்வகேட் அமரன். எஸ்.வி.சேகர் அவர்களின் நகைச்சுவை நாடகங்களையும் ஆர்.ஆர். சபா நாடகங்களையும், திருச்சி, தேவர் அரங்கு,, காரைக்குடி, மதுரை ஆகிய ஊர்களுக்குத் தேடிச்சென்று பார்க்கும் ஆர்வம் எனது மாணவப் பருவத்திலிருந்தே தொடர்ந்தது. </b><br />
<br />
<b> <span style="color: blue;">அவர்கள் பயன்படுத்திய சிறப்புக் காட்சிகளைப் போல எனது மேடை நாடகங்களிலும் பயன் படுத்திப் பார்க்க விழைந்தேன்.</span></b><br />
<b><span style="color: blue;">அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை அரங்கேற்றும்போதுதான் என்னால் உணர முடிந்தது.</span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> நாடகம் நடத்துவதற்கென்று அமைக்கப்பட்ட அரங்குகள், ஒளி, ஒலி அமைப்பிற்கான சிறப்பான அமைப்புகள், அரங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம் கொண்டு பெரிய நாடகக் கம்பெனிகள் சாதித்தவற்றை, கீற்றுக் கொட்டகை, பலகை மேடை, ஒருமுக எழினி,</span></b><br />
<b><span style="color: yellow;">( இழுவைத் திரை) தொழில் முறையல்லாத கலைஞர்களை வைத்துச் சாதிக்க நினைத்தது, “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போல” என்ற முதுமொழியின் ஆழத்தை எனக்கு உணர்த்தியது. ஆனாலும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்னும் நம்பிக்கையோடு நான் எனது மேடை நாடகத்தில புகுத்திய சில புதுமைகளால் புதுக்கோட்டை அமெர்ச்சூர் குழுக்களில் மணிமன்றத்திற்கு ஒரு தனி முத்திரை கிடைத்ததைப் பல சான்றோர்களின் பாராட்டுகள் மூலம் உணர்ந்தேன்.</span></b><br />
<br />
<b>அப்படி, சாண்டோ சின்னப்பாத் தேவரைப் போல “நெனைச்சது ஒன்னு“ என்ற நாடகத்தில் விலங்குகளை நாடக மேடையேற்றும் முயற்சியில் நான் பட்டபாடு வேடிக்கையானது..</b><br />
<br />
<b>அந்த நாடகத்தில் ஒரு பாட்டுவாத்தியார் தனது மாணவர்களுக்கு கருநாடக சங்கீதம் கற்றுக் கொடுப்பதாகவும், அந்தக் குரலைக் கேட்டு ஒரு கழுதை அவர் வீட்டுக்குள் நுழைவதாகவும் ஒரு காட்சியை நகைச்சுவைக்காக அமைத்திருந்தேன்.</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-jYG34XWfigc/WPmvQejRiJI/AAAAAAAABpk/mmrRzcjoPdsyk9nl0bD5xnLchJe0K05sACLcB/s1600/IMG_6771.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://3.bp.blogspot.com/-jYG34XWfigc/WPmvQejRiJI/AAAAAAAABpk/mmrRzcjoPdsyk9nl0bD5xnLchJe0K05sACLcB/s400/IMG_6771.jpg" width="400" /></a></div>
<br />
<b><span style="color: magenta;">அதற்காகத் தெரிந்த சலவைத் தொழிலாளியிடம் ஒரு குட்டிக் கழுதையையும் கேட்டிருந்தேன். முதல்நாள் ஒத்திகையின் போது இரண்டு சிறிய படிக்கட்டுகளில் ஏறிக் காட்சிக்கு ஒத்துழைத்த அந்தக்குட்டிக் கழுதை, மறுநாள் நாடகத்தன்று, உயரமான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மரப் படியில் ஏறமுடியாமல் தவித்தது.</span></b><br />
<br />
<b>காட்சியில் பாகவதர் கழுதை வரும் வரை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே இருக்கிறார். கழுதையோ அரங்கேற முடியாமல் திணறுகிறது. பலத்த போராட்டத்திற்குப் பின் ,கழுதையின் உரிமையாளர் , எங்கள் மன்ற அரங்க உதவியாளர் துணையோடு கழுதையைத் தூக்கி மேடையில் ஏற்றிவிட்டார். மேடை விளக்குகளையும் இசை முழக்கத்தையும் பார்வையாளர் ஆரவாரத்தையும் கேட்ட கழுதை, மிரண்டு மேடையின் முன்வழியாகக் குதிக்க முயன்றது. மேடையில் அமைத்திருந்த விளக்குகளை காலால் உதைக்க, ஒளியமைத்த செல்வின் சார் பதறிப்போய் விளக்குகளை அணைத்துவிட்டார், நல்லவேளை முன்பக்கம் கழுதை மேடையிலிருந்து குதிப்பதற்குள் நானும் அரங்க உதவியாளர்களும் அதைப் பிடித்து பின்னால் இழுத்துவிட்டோம். ( ஒரு உதையை வாங்கிக் கொண்டுதான் ).</b><br />
<b> இந்தக் களேபரத்தில் கத்த வேண்டிய கழுதைக்கு இசைக்கலைஞர் பீட்டர் டப்பிங் குரல் கொடுத்துக் காட்சியை ஒப்பேத்தினோம்.</b><br />
<br />
<b><span style="color: lime;">அதே நாடகத்தில், தன் வளர்ப்பு மகளைத திரைப்பட நடிகையாக்க ஆசைப்படுவார் கதாநாயகியின் வளர்ப்புத தாயார் அங்கம்மா. உண்மை தெரிந்த, ஒரு சமூக விரோதி ( மாயாவி ) கதாநாயகியின் உண்மையான பெற்றோர் பற்றிய இரகசியத்தைச் சொல்லாமலிருக்கத் தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கேட்பான் அந்த வளர்ப்புத் தாயிடம் . உண்மையை மறைக்க அவன் கேட்ட பணத்தைத் தருவதாக ஒத்துக் கொண்ட அந்தப் பெண்மணி, மாயாவி அறியாதவாறு ஒரு பாம்புப் பிடாரன் துணையோடு ஒரு சூட்கேஸில் </span></b><br />
<b><span style="color: lime;"> ( பணப்பெட்டி) பணத்திற்குப பதிலாகக் கருநாகப் பாம்பை வைத்து மாயாவியி டம் கொடுத்து அனுப்புவாள். பணத்தாசையில் பெட்டியைத் திறந்து உள்ளே கைவிடும் மாயாவியை அந்தப் பாம்பு கொத்திவிடும். தன்னைக் கடித்த பாம்பினை எதிர்த் தலைவன் கடித்து வீசிவிட்டு கதாநாயகியின் அப்பாவிடம் உண்மையைச் சொல்ல ஓடுவதாகக் காட்சி.</span></b><br />
<br />
<b>இதற்கு ஒரு இரப்பர் பாம்பை ஒத்திகையில் பயன்படுத்தினோம். எதிர்த்தலைவனாக ( மாயாவியாக ) நடித்தவர், தான் ஒரு உண்மையான நஞ்சில்லாத கருஞ்சாரையைப் பயன் படுத்துகிறேன் என்று தைரியமாகச் சொன்னார். நாடகத்தன்று பகலில் எனது வீட்டிற்கு அந்தப் பாம்பைக் கொண்டுவந்து அதன் வாயைக் கட்டி பொய்க்கடியாகக் கடித்து வீசும் பயிற்சியையும் எடுத்துக் கொண்டார்.</b><br />
<br />
<b><span style="color: cyan;">நாடகக் காட்சியில் பாம்புப்பிடாரனாக நடித்த நான், வளர்ப்புத் தாயிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பாம்பை சூட்கேசில் வைத்து மூடிக் கொடுத்து விட்டேன். அவரும் ஒரு ஆள் மூலம் அந்தப் பெட்டியை எதிர்த் தலைவன் மாயாவியிடம் கொடுத்து அனுப்பினார். அடுத்த காட்சியில் பணப்பெட்டிக்குள் பணத்தை எடுக்க ஆவலாய்க் கைவிட்ட எதிர்த் தலைவன் தன்னைப் பாம்பு கடித்துவிட்டதாகக் கத்திவிட்டு பாம்பை வெளியே எடுத்துக் கடித்து வீச வேண்டும். பாம்பு கடிக்க முடியாதபடி வாய் கட்டப்பட்டிருந்தது.</span></b><br />
<b><span style="color: cyan;">ஆனால்....</span></b><br />
<b><span style="color: cyan;"><br /></span></b>
<b><span style="color: cyan;"> --- அடுத்த தொடரில் </span></b></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-11678859665538024592017-04-18T02:16:00.001-07:002017-04-18T02:16:20.134-07:00எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<b> </b><br />
<b><span style="color: yellow; font-size: large;">ஆட்டுவித்ததும் ஆடித் தீர்த்ததும்...</span></b><br />
<b><br /></b>
<b> எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது சமூக மேம்பாட்டிற்கான ஏதேனும் ஒரு சிறிய செய்தியையாவது உட்கருவாகக் கொண்டு படைக்கப்படவேண்டும் என நினைவில் வாழும் எனது ஆசிரியர் திரு கரு.செல்லமுத்து அவர்கள் நான் எட்டாம் வகுப்புப் பயிலும்போது சொன்னதை மறக்காமல் நான் எனது பாடல்கள், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் மூலம் செயலாக்கம் செய்து வந்துள்ளேன்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;">பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்லன விளைத்தற்கே என்று சங்கரதாசு அடிகள் கூறியுள்ளதும், கலைகள் வெறும் பொழுது போக்கிற்கானதாக மட்டும் அமைதல் கூடாது என்பதை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை உள்ளிறுத்தியே அமைதல் வேண்டும் என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். . அதிலும் நாடகம் என்பது நாட்டின் அக நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தி அதற்கான தீர்வைச் சொல்வதாக அமைதல் வேண்டும் என்பார் பம்மல் சம்பந்த முதலியார்.</span></b><br />
<b><br /></b>
<b><span style="color: yellow;">அந்த வகையில் மகளிரின் சமூகப் பிரச்சனையாக காலம் காலமாய் இருந்து வந்த விதவையர் மறுமணத்திற்கான எதிர்ப்பினையும் அத்தகு மணங்கள் நடைபெற வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக சமூக சீர்திருத்தவாதிகள் வலியுறுத்தி வந்துள்ளதையும் கதைக் கருவாகக் கொண்டு “ பட்டமரம்” என்னும் பெயரில் ஒரு சீர்திருத்த நாடகத்தை 1972ல் அரங்கேற்றினேன்.</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-9uqgUTHa_A0/WPWztzvvXJI/AAAAAAAABoQ/4_WoNw57caAWCQTSrsBzv32nJQEhFSpmACLcB/s1600/IMG_6770.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><b><img border="0" height="640" src="https://4.bp.blogspot.com/-9uqgUTHa_A0/WPWztzvvXJI/AAAAAAAABoQ/4_WoNw57caAWCQTSrsBzv32nJQEhFSpmACLcB/s640/IMG_6770.jpg" width="411" /></b></a></div>
<b><br /></b>
<b> கொத்தடிமையாக இருந்த ஒரு தாய், தான் பெற்ற கடனைத் தீர்க்க முடியாமல், இறக்கும் தருவாயில் கொடுத்த வாக்குறுதியால் அந்த வயோதிக செல்வந்தருக்குத் அவர் மகள் மணம் முடித்து வைக்கப்படுகிறாள். மணம் முடிந்த அன்றே அச்செல்வந்தர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இளம் பெண் விதவையாகிறாள். அப்பெண்ணை விரும்பும் கதைத் தலைவனின் தனயன், அப்பெண்ணின் சாதியைக் காரணம் காட்டி அவளைத் தன் தம்பி்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறான். அண்ணனை மீறவும் முடியாமல் விரும்பிய விதவையைத் திருமணம் செய்யவும் முடியாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் கதைத் தலைவன். </b><br />
<b><br /></b>
<b> <span style="color: cyan;"> தன் குலப்பெருமையையும், தம்பியையும் இழக்க விரும்பாத தனயன் அப்பெண்ணையும் அவளது தந்தையையும் ஆட்களை வைத்துக் கடத்தி, அவர்களுக்குப் பணத்தாசைகாட்டி ஊரைவிட்டு வெளியேற்ற முயல்கிறான். காவல் ஆய்வாளரான கதைத் தலைவனின் தம்பி தன் மூத்த சகோதரனின் சூழ்ச்சிகளை முறியடித்து கதைத் தலைவனான தன் இரண்டாவது சகோதரனுக்கு அவன் விரும்பிய விதவையையே திருமணம் செய்து வைப்பதுதான் கதை.</span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> இந்த மேடை நாடகத்தில் பல உத்திகளைக் கையண்டிருந்தேன். திருமண மேடை, தையல்கடை, மலைக்குகை, காவல்நிலையம், கேளிக்கை நடனவிடுதி, கனவுக்காட்சியில் பின்புல மாற்றங்கள் என்னும் பல அம்சங்களை இந்நாடகத்தில் காட்சிப் படுத்தி யிருந்தேன். அவற்றுக்காகப் பெரிய மேடை அமைக்க வழக்கமாக நாடகம் போடும் தொடர்வண்டி நிலைய சாலை ஓரம் இடம் போதாமையால் ஊருக்கு வடபுறம் ( புதுவயல் பகுதியில் விளையும் நெல் அடிக்கும் களம். தற்போது பெரியார் நகராக உள்ளது) மணல்மேடு என்னும் பெரிய திடலை ஒழுங்குபடுத்தி பெரியதான மேடை அமைத்திருந்தோம். </span></b><br />
<b><span style="color: yellow;">( இப்போது புதுக்கோட்டை வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் குடியிருப்பாக மாறியுள்ளது) மேலும் புதுக்கோட்டை நகர், மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து பாய், சாக்குகளோடு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருந்ததால் அந்தப் பெரிய திடலைத் தேர்வு செய்யவேண்டியதாயிற்று.</span></b><br />
<b><br /></b>
<b> மின்சாரத்திற்கு ஜெனரேட்டர் ( மின்னூக்கி ) ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. விரிவான செலவினங்களுக்கு, மன்ற நாடகத்தின் தன்மையால் நன்கொடையாளர்கள் உதவினார்கள். நன்கொடை பரிசுச் சீட்டு மூலம் ஓரளவு நிதி கிடைத்தது.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: blue;"> இந்நாடகத்தில் முதல்காட்சிக்கு அமைத்த திருமண அரங்கத்தைப் பிரித்து அடுத்த காட்சி தொடங்குவதற்குச் சற்றுத் தாழ்வு ஏற்பட்டது. அந்த இடைவேளையைப் பாடகி ஜானகி தன் இனிய பாடலால் நிரப்பி உதவினார்.</span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: magenta;"> ஒரு விதவையின் வேதனைக் கதையைச் சோர்வில்லாமல் நகர்த்த, நான்கு நகைச்சுவைப் பாத்திரங்கள் கைகொடுத்து உதவின. </span></b><br />
<b><span style="color: magenta;">ஒரு தையல் கலைஞன், அவனது காதலி, காசா எடுக்கும் உதவிப்பையன், கறிக்கடை பாய், பாகவதர், போலீசு என்ற பாத்திரங்கள் வழங்கிய நகைச்சுவை நடிப்பு நாடகத்தை விறுவிறுப்பாக்கியது . </span></b><br />
<br />
<b> இதில் குறிப்பிடத்தக்க சில புதிய உத்தி நுட்பங்களைச் சோதனை முயற்சியாகச் செய்திருந்தேன். சோகப்பாடல் காட்சியி்ல் கதைத்தலைவி வீட்டுப் பின்புலத்திலும், அவளின் தந்தை காட்டுப் பின்புலத்திலும் வேதனைப் படுவதாக , ஒரே மேடையை இருபிரிவாக்கி காட்சிப் படுத்தியிருந்தேன். ஒளிப்பதிவு நுட்பத்தால் செல்வின் பின்புலங்களை வேறுபடுத்திக்காட்டியது சிறப்பாக அமைந்த ஒன்று.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;"> அதேபோல கதாநாயகன் கதாநாயகியோடு மகிழ்ந்து ஆடிப்பாடுவதான காதல்காட்சியில், தண்ணீரில் மிதக்கும் தாமரை செட்டிங்கில் காதலர், வான் நட்சத்திரங்கள்,மேகக்கூட்டத்திலிருக்கும் பிறைநிலவில் காதலர், பெய்யும் மழையில் நனைந்தபடி காதலர் என மூன்று பின்புலங்களை பாடல் இடையிசைக்குள் மாற்றிக் காட்டிக் காட்சியமைத்திருந்தேன். பாடலின் மூன்று சரணங்களுக்கும் காதலர் இருவரும் வெவ்வேறு உடை மாற்றத்தோடு வரச் செய்திருந்தேன். </span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;">இந்தக் காட்சி பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது. மழைக்காட்சியில் பி.வி.சி. குழாயில் துளைகளிட்டு அதன்வழியே பம்ப் மூலம் தண்ணீர் பீய்ச்ச, மழை பெய்வது இயல்பானதாக அமைந்தது. என்ன ஒரு சிக்கல், மேடையில் விரித்திருந்த தார்ப்பாயில் பெய்ய வைத்த செயற்கை மழைநீர் தேங்கியதில், கதாநாயகன் நடனமாடும் போது வழுக்கிவிழ, கதாநாயகி அவனைத் தாங்கிப் பிடித்தது காட்சியை உணர்ச்சிமயமாக்கியது. </span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: magenta;">அடுத்து கதாநாயகியையும் அவளது தந்தையையும் அடைத்து வைத்த மலைக்குகையை விட்டு மூன்று பாறைத் திறப்புகள் வழியே வெவ்வேறு வண்ண ஒளியில் ஒரு மர்ம உருவம் வெளிவருவதான காட்சியை அமைத்திருந்தேன் . ஒளிப்பதிவாளர் செல்வின் அவர்களின் சீரிய முயற்சியால் அந்தக் காட்சி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றதை மறக்கவே முடியாது.</span></b><br />
<b><br /></b>
<b> இந்நாடகத்தில் ஒரு கேளிக்கை விடுதி நடன மங்கையுடன் மேற்கத்திய நடனமாட வேண்டிய நடிகர் திடீரென வராமையால், மேலாளர் பாத்திரத்தில் நடித்த நான், அந்த நடனத்தை ஆட வேண்டியதாயிற்று. </b><br />
<b><br /></b>
<b>இதைவிட இன்னொரு நெருக்கடியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;">சுடுகாட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த மலைக்குகையில் அடைத்து வைத்துள்ள கதாநாயகி மற்றும் அவரது அப்பாவைக் கண்டுபிடிக்க தையல்கடை வீரமுத்து கசாப்புக் கடை பாய், போலீசு 123 ஆகியோர் போவார்கள். காட்டுப் பகுதியிலிருக்கும் அந்த இடத்திற்கு வழி தெரியாமல் அவர்கள் தவிக்கும்போது, சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டுத் திரும்பும் ஊழியர் இருவரிடம் , சுடுகாடுவரை வந்து குகையைக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்க, அவர்கள் பிணமில்லாமல் சுடுகாட்டுக்குவரமாட்டோம் என்பார்கள். உடனே டைலர் வீரமுத்து அந்தப் பகுதியில் கிடந்த பாடை ஒன்றை எடுத்துவந்து அதில் தானே பிணமாகப் படுத்துக் கொண்டு சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லச் சொல்வான். </span></b><br />
<b><br /></b>
<b> அந்தக் காட்சிக்குப் பறைமுழக்க, தொழில்முறை ஊழியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். காட்சிக்கு அவரைத் தேட , அவர் மதுபோதையில் அரங்குக்கு பின்பகுதியில் நிதானமில்லாமல் சாய்ந்து கிடந்தார். எவ்வளவு உசுப்பேற்றியும் அவரைத் தெளிய வைகக முடியாததால் நானே சட்டை பேண்டைக் கழற்றிவிட்டு வேட்டி துண்டுக்கு மாறி, பறையை அடித்துக் கொண்டு செல்லவேண்டிய தாயிற்று . பாடமேற்பார்வை ( பிராம்ப்ட்) பார்த்துக் கொண்டே கவுரவத் தோற்றத்தில் இப்படிப்பட்ட நெருக்கடிகளையும் ஆட்டுவிக்கும் நாடக இயக்குநர் ஆடிச்சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மேடை நாடகத்தில் பலப்பல. </b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;"> ---அவை பற்றி அடுத்த தொடரில் </span></b><br />
<b><br /></b>
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-76765489188756798332017-04-15T00:59:00.000-07:002017-04-15T00:59:30.175-07:00எனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b> </b><br />
<b><br /></b>
<div style="text-align: center;">
<b><span style="color: cyan; font-size: large;">முள்களைந்து சுவைத்த சுளை</span></b></div>
<b><br /></b>
<b> நாடகத்தின் முதல் காட்சியை திகிலோடு ஆரம்பிக்க நினைத்த நான், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நடிகர் கயிறு உறுவி நடிகை மீது விழுந்ததில், அப்படியே திகைத்துப் போய் நின்றேன். முன்திரையை மூடிவிட்டு முதலில் அந்த பெண்ணிற்கு ஏதும் பாதிப்புள்ளதா எனத்தான் பார்த்தேன். நல்லவேளை தூக்கில் தொங்கிய நடிகர் ( காளிமுத்து ) மெலிந்த உடலும் குறைந்த எடையும் உள்ளவராய் இருந்ததாலும், விழுந்ததில் நடிகைக்கோ அவருக்கோ பெரிய பாதிப்பு எதுவுமில்லாமல் போயிற்று.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;">இத்தனைக்கும் மேடைத் தளப்பொறுப்புக்கு இருவர், அரங்கப் பொருள்கள் வைத்து அகற்ற இருவர், அடுத்தடுத்த காட்சிகளில் நடிக்க வேண்டியவர்களைத் தயார்படுத்த ஒருவர், ஒப்பனைகளில் மாற்றமிருந்தால் உடனுக்குடன் செய்ய ஒப்பனையாளருடன் உறுப்பினர் ஒருவர், வசனத்தை மறந்து விடாமல எடுத்துக் கொடுக்க ஒருவர் என நாடகத்தில் நடிப்பவர்களை விட அரங்க நிர்வாகப் பணிக்கு மேடை நாடகத்தைப் பொறுத்தவரை அதிக ஆள்களையே அமர்த்தியிருந்தேன். </span></b><br />
<b><br /></b>
<b> இதல்லாமல், இசை அமைப்பாளர்க்கு, காட்சி உரையாடல் களுக்கேற்ற சிறப்பு ஒலிகள் பற்றிய ஒரு குறிப்பு, ஒளியமைப்பாளர்க்கு அதேபோல் காட்சிக்கேற்ற வண்ணஒளி பற்றிய குறிப்பு , திரை இயக்குபவரிடம் காட்சி எண், அதற்குரிய திரை பற்றிய குறிப்பு, ஒலி அமைப்பாளரிடம் பாடல்கள் பதிவு செய்த ஒலிநாடாவை எந்தெந்த காட்சிகளில் இயக்க வேண்டும் ஆகிய குறிப்புகளையெல்லாம் எழுதி முதல்நாள் முழு ஒத்திகையின் போதே கொடுத்து ,அதன்படி அவர்கள் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தேன். இப்படி என்னதான் முன் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் எதிர்பாராமல் மேடையில் ஏற்படும் குளறுபடிகளையும் கடந்துதான் மேடை நாடகத்தை நடத்தி வெற்றி காண முடியும்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: lime;">தொங்கவிட்டிருந்த கயிறு உறுவி தன் மீது அப்பா நடிகர் விழுந்ததால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், உணர்ச்சி வேகத்தால் தன்னால் ஏற்பட்ட தவறு என்பதை உணர்ந்த அந்த நடிகை பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே “ சாரி சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார். “கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கம்மா” </span></b><b><span style="color: lime;">ன்னு சொல்லிட்டு நான்காவது காட்சியை அடுத்து போடவேண்டிய சிலைடு (நாடகம், நடிப்பவர், தொழில்நுட்பாளர் பற்றிய விளம்பரம்) நிகழ்ச்சியை உரிய தொழில் நுட்பாளர்களிடம் அறிவுறுத்தி வெண்திரையில் ஒளிப்படக் காட்சியாக ஓடவிட்டேன். இந்த திடீர் மாற்றத்தால் இடைவெளி நேரம் கொஞ்சம் அதிகமானாலும், அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நடந்தன.</span></b><br />
<br />
<b> இந்த நாடகத்தில் இன்னொரு நகைச்சுவையான நிகழ்வும் எதிர்பாராமல் நடந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். துப்பறியும் இந்த மர்ம நாடகத்தில் ஒரு துப்பறி நிபுணர்( சி.ஐ.டி சிங்காரம் ) மாறு வேடத்தில் ( கைரேகை சோதிடர் கைலாசமாக ) இடையிடையே நகைச்சுவை பாத்திரமாக வந்து கொண்டே இருப்பார். அந்த வேடத்தை பொன்.பாலசுப்பிரமணியன் ( இன்றுவரை மணிமன்றத் தலைவராக இருப்பவர்) ஏற்று சிறப்பாக செய்து பார்வையாளர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டே வந்தார்.</b><br />
<b><br /></b>
<b> <span style="color: blue;"> நாடகத்தின் உச்சகட்டக் காட்சி. கதைஎதிர்த் தலைவன் ( வில்லன் ) தான் செய்த கொலையை நேரில் பார்த்த முதியவர் ஒருவரை ஒரு மலைக் குகைக்குள் ஒரு பாறைக் கல்லோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருப்பான். அந்த இடத்தைத் துப்பறிந்து அங்கு கைரேகை சோதிடர் வேடத்தில் வருவார் துப்பறியும சிங்காரம் </span></b><br />
<b><br /></b>
<b> காவலுக்கு இருந்தவர்களிடம் ஓரிடத்தில் புதையல் இருப்பதாகப் போக்குக் காட்டி வெளியே அனுப்பிவிட்டு, கட்டிக்கிடந்த கிழவன் உடைகளைத் தான் மாற்றி அணிந்து கொண்டு , கிழவனைக் கட்டி இருந்த பாறையில் தன்னைப் பொய்க்கட்டு கட்டிப் போடச் சொல்லி, அந்தக் கிழவனை விடுவித்து போலீசை அழைத்துவர அனுப்பிவிடுவான் சி.ஐ.டி. கிழவன் சென்ற சற்று நேரத்தில் வில்லன் அங்கு வந்து கட்டிக் கிடந்த கிழவனை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொல்லப் போவதாய்க் கொக்கரித்துக் கொண்டு மண்ணெண்ணை டின்னோடு கிழவனை நெருங்குவான். </b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;"> கதைப்படி அந்தக் கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி தனது பொய்க் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தான் அணிந்திருந்த ஜிப்பாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வில்லனின் கையில் சுட வேண்டும். பிறகு காவல்படை வந்து வில்லனைக் கைது செய்யும்.</span></b><br />
<br />
<b> <span style="color: lime;">காட்சியில் வில்லன் மண்ணெண்ணை டின்னை த் திறந்து கொண்டு கிழவனை நெருங்குகிறான். கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி சிங்காரமாக நடித்தவர் போலிக் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார். அதிர்ச்சியடைந்த வில்லன் எண்ணை டின்னை வீசிவிட்டுத் தன் இடையில் சொருகியிருந்த கத்தியை எடுக்கிறான். சி.ஐ.டி தனது ஜிப்பாவின் சைடு பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துப்பாக்கியை எடுக்க முயல்கிறார்</span></b><br />
<b><span style="color: lime;"><br /></span></b>
<b><span style="color: lime;"> துப்பாக்கியின் விசை பாக்கெட்டில் இருந்த பிசிர் நூலில் மாட்டிக் கொண்டு வெளியே எடுக்க வரவில்லை. ( நாடகத்திற்காக அவசர அவசரமாகத் தைத்த புது ஜிப்பா பிசிர் நூல்களைக் கத்தரிக்க தையல்காரர் மறந்து விட்டார்.) </span></b><br />
<b><br /></b>
<b> <span style="color: yellow;">துப்பாக்கியை எடுத்து நீட்டட்டும் என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளப்ப வேண்டியவர் காத்திருக்கிறார். பரபரப்பு இசை ஒலிக்க ஆர்மோனியம் ஹென்றி சாரும் தயாராக இருக்கிறார்.( மின்னணு கீ போர்டெல்லாம் அப்போதில்லை ) வில்லன் நடிகரும் சூடுபட்ட இடத்தில் இரத்தத்தை வழியவிட சிவப்புச் சாயத்தை இடது கையில் எடுத்துத் தயாராகி விட்டார். ஒளியமைப்பாளரும் சிவப்பு ஒளி பாய்ச்ச துப்பாக்கி வெளிவரும் அந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கிறார். சி.ஐ.டி.யாக நடித்தவர் துப்பாக்கியை இரண்டு முறை இழுத்துப் பார்க்கிறார் . நூலில் வசமாய்ச் சிக்கிக் கொண்ட துப்பாக்கி பையைவிட்டு வர மறுக்கவே, பைக்குள் கையைவிட்டவாறே துப்பாக்கியை சட்டையோடு தூக்கி வில்லனுக்கு நேரே நீட்டி “டொப்” என்று சுடும் சத்தத்தையும் தானே வாயொலியில் கொடுத்து விட்டார். வில்லனாக நடித்தவரும் அதற்கேற்ப கத்தியைக் கீழே போட்டுவிட்டு இரத்த நிற சாயத்தை வலது மணிக்கட்டில் தடவிக்கொண்டு அலற, அதற்கடுத்து உண்மையான துப்பாக்கிச் சூடு சத்தமும், ஒளி,இசை அதைத் தொடர பார்வையாளர் பகுதியில் ஒரே ஆரவாரம். பாராட்டியா? பகடி செய்தா? தெரியவில்லை. ஆனால் நாடக இயக்குநர் மனசு பட்ட பாட்டை மேடை நாடகம் நடத்தி அனுபவித்தவர்களே உணர்வர். தொடர்ந்து காவல் துறை வந்து வில்லனைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்படுத்துவதாகக் காட்சி.</span></b><br />
<b><br /></b>
<b> நீதிமன்ற அரங்க அமைப்பும் வழக்காடு நிரலும் நாடகத்தின் சில்லறைச் சிக்கல்களை மறக்கடித்து அனைவர் பாராட்டுகளையும் பெற்று வெற்றியாக அமைந்தது. முட்களாய் இருக்கும் தோலைக் களைந்துதானே பலாச்சுளையின் இனிமையைச் சுவைக்க முடியும். அப்படித்தான் அமைந்தது முத்தமிழ்விழா.</b><br />
<b><br /></b>
<b> ---- இன்னும் பல சுவையாய் வரும்.</b><br />
<b><br /></b>
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5540442597228968711.post-3537262003703286032017-04-13T04:01:00.000-07:002017-04-13T04:01:49.172-07:00எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<span style="color: lime; font-size: large;">எதையும் எதிர்கொள்... எல்லாம் எளிதாகும் .</span><br />
<br />
<b> புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல அன்றைய மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களைப் பார்த்ததன் விளைவு பல உத்திகளை நாடகத்தில் கையாள வேண்டும் என்று என்னை உந்தித் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.</b><br />
<br />
<b> <span style="color: #ead1dc;">விரலுக்குத் தகுந்த வீக்கமென்றால் சரி. திரைப்பட நுட்பங்களை மேடை நாடகத்தில் அரங்கேற்றுவதில் அத்தனை எளிதானதல்ல என்பது இந்த நாடகத்தில் பட்ட பிறகுதான் உரைத்தது.</span></b><br />
<br />
<b>துப்பாக்கி சுடும் ஒலி இயல்பாக இருக்க வேண்டும். அதையும் முன்னர் வெளிப்படுத்தாமல் நிறை ஒத்திகை( grand reharsal ) அன்று செய்து காட்டி அசத்தலாம் என்று நான் நினைத்ததன் விளைவு அப்படி ஒரு சிக்கலை உருவாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.</b><br />
<br />
<b><span style="color: yellow;">வேட்டைத் துப்பாக்கியில் ரவைகள் போடாமல் வெறும் கருமருந்தைப் போட்டு வெளிப்பக்கமாக வெடிக்கச் செய்யப் போவதை காட்சியில் நடிக்கும் நடிகையிடமாவது முன்னரே நான் கூறியிருக்க வேண்டும். அதிலும் வேட்டைக்காரர் இரட்டைக்குழல் துப்பாக்கியின் இரண்டு விசைகளையும் தவறுதலாக அழுத்த இரண்டு குழாய்களிலும் நிரப்பியிருந்த மருந்து ஒரே நேரத்தில் வெடித்த சத்தம் அந்த பயிற்சி அறைக்குள் இருந்த அத்தனை பேரையும் அதிரத்தான் வைத்தது.</span></b><br />
<br />
<b>அதிலும் கதாநாயகி நடிகை அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியபடி விழவும் எல்லோரும் கொஞ்ச நேரம் உறைந்துதான் போனோம். முதலில் ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் பயந்து விட்டார். கொஞ்சம் தண்ணீர் முகத்தில் தெளித்து, தேநீர் கொடுத்தால் சரியாகிவிடும் என்று நடிகையை ஏற்பாடு செய்து அழைத்து வந்த நண்பர் சொல்ல, அப்படிச் செய்த பின்னரும் வலி தாளாமல் நடிகை சுருண்டு படுத்து அரற்றியதும் எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.</b><br />
<br />
<b><span style="color: cyan;">உடன் வந்த அவருடைய இளைய சகோதரி( அவரும் அந்த நாடகத்தில் நகைச்சுவை பாத்திரமேற்று நடிப்பவர் ) வலியால் துடித்த நடிகையிடம் தனியாக ஏதோ கேட்டுவிட்டு “ உடனடியாக ஒரு மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்ல வேண்டும்” என்றார். இரவு மணி 1.30.அந்த நேரத்தில் எந்த மருத்துவரைத் தேட முடியும்? அந்தப் பகுதியில் அப்போது இரவி என்ற மருத்துவர் ஒருவர்தான் குடியிருந்தார். அவரிடம் அழைத்துப் போகலாமா என்று கேட்டதற்கு அவரின் இளைய சகோதரி. “இல்லை ஒரு பெண் மருத்துவரிடம்தான் உடனடியாகக் காட்ட வேண்டும்” என்று பரபத்தா</span></b><span style="color: cyan;">ர்.</span><br />
<br />
<b>இப்போதென்றால் பெரியார்நகர், கம்பன் நகரில 7,8 பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்போது அது புதுவயல் என்ற பெயரில் வெறும் வயல்வெளியாகத்தான் இருந்தது. எப்படியும் 2 கி.மீ க்கு அப்பாலுள்ள நகருக்குள்தான் கொண்டு சென்றாக வேண்டும். இப்போது போல ஆட்டோ, டாக்சிகள் அந்தப் பகுதியில் அதிகமில்லை. மன்ற உறுப்பினர் நாக.செயராமன் மட்டும் ஒரு லூனா வண்டி வைத்திருந்தார். அதில் அந்த நடிகையைக் கொண்டு செல்ல முடியாது என்று இளைய சகோதரி சொல்ல. இரயில் பயணிகளை நம்பி தகரக் கொட்டகை ஒன்றில் ஒரு வில்வண்டி ( மாட்டு வண்டிதான்) வைத்திருந்த வால்பூசாரி என்பவரை அமர்த்தினோம்.</b><br />
<br />
<b><span style="color: magenta;"> அப்போதுதான் தொடங்கியிருந்த மகளிர்க்கு ஒரு தனியார் மருத்துவமனை. ( பெயர் வேண்டாம். இப்போது அவர்கள் மகளிர் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது.) அந்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றோம். நன்றிக்குரிய அப்பெண் மருத்துவர் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லை. ஒருநாள் உள்நோயாளியாக இருக்க வேண்டுமென்றார். மறுநாள் நாடகம் . இரயில்வே ஸ்டேசன் சாலையை முக்கால் பகுதி ஆக்கிரமித்து மேடை அரங்கம் அன்று மாலையே போட்டாகிவிட்டது. ஒரு இரவுமட்டும் தொடர்வண்டி நிலையம் செல்லும் நகரப் பேருந்தை முன்னதாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட வேண்டிக் கொண்டிருந்தோம். மறுநாள் 15.01.1969 காலை கொட்டகை பிரித்தாக வேண்டும். பட்டிமன்றப் பேச்சாளர்கள் வேறு மறுநாள் திருவள்ளுவர் நாளன்று வேறு இடங்களில் பேச தேதி வாங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கதாநாயகி மருத்துவ சிகிச்சையில். என்ன செய்வது? வேறு நடிகையை ஏற்பாடு செய்து ஒரு பகலுக்குள் பயிற்சியளித்து நடிக்க வைக்க முடியுமா? நாடகத்தை தள்ளி வைப்பதா? தள்ளி வைத்தால் மீண்டும் எடுத்தக் கூட்டி நடத்த ஏற்படும் கூடுதல் பொருளாதாரத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வது?</span></b><br />
<br />
<b> இப்படியான எங்களுடைய இக்கட்டான நிலையை ,அந்தப் பெண் மருத்துவரிடம் தயங்கித் தயங்கி எங்கள் மன்ற உறுப்பினர் நாக.செயராமன் சொல்ல, மருத்துவரும் நடிகைக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சிநோய்க்கு ஓய்வுதேவை. நாளை மதியம் வரை பார்க்கலாம், தளர்ச்சி நீங்கி இயல்புநிலைக்கு திரும்பிட்டா அதிக அலட்டல் இல்லாமல் அவர் நடிக்கலாம். என ஆறுதலான வார்த்தைகள் சொன்னார். “எந்த அளவுக்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்யுங்கள் செலவைப் பத்திக் கவலை வேண்டாம்” என்ற வேண்டு கோளோடு அவருடைய சகோதரியையும் செயராமனையும் உடனிருக்கச் சொல்லிவிட்டு நான் திரும்பிவிட்டேன் குழப்பத்திலிருக்கும் உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல. </b><br />
<br />
<b><span style="color: blue;"> மறுநாள் முத்தமிழ்விழா நடத்துவதா தள்ளிவைப்பதா? என ஒரு முடிவுக்கு வரஇயலாமல் விடியும்வரை குழம்பிய மன்ற உறுப்பினர்களிடம் “எது நடந்தாலும் சமாளிப்போம். நாளை நல்ல பொழுதாய் விடியட்டும் நமக்கு” என்று கூறிவிட்டு மீண்டும் மருத்துவமனை சென்றேன். </span></b><br />
<br />
<b>குளுகோஸ் ஏறியவாறு தூங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை காலை 7 மணிக்கு கண் விழித்த போதுதான் எனக்கு நல்ல மூச்சு வந்தது. “எப்படிம்மா இருக்கு இப்ப?” எனக் கம்மிய குரலில் கேட்ட எனக்கு அந்தப்பெண்</b><br />
<b> “ ஒன்னுமில்லை சார். மத்தியானம் வரைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டா நார்மலாயிடுவேன். திட்டமிட்டபடி நாடகத்தை நடத்திடலாம்” ன்னு தைரியம் சொன்னபோது என் கண்கள் என்னையறியாமல் பனித்தன.</b><br />
<br />
<b><span style="color: yellow;">அவருடைய சகோதரியும் அதையே வழிமொழிய, உடல் நலம் பாதித்த நிலையிலும் தமிழர் திருநாளில் ஏற்பாடு செய்த ஒரு பொது நிகழ்ச்சி தங்களால் தடைப்பட்டுவிடக் கூடாது எனத் தன் வலியையும் பொறுத்துக் கொண்டு “நடத்திடலாம்“ என்று ஊக்கமளித்த அந்த இலங்கைச் சகோதரிகளின் மனித நேயப் பண்பாட்டை நினைக்கும் போது இன்றும் ஈழ மகளிரின் இனமான மனிதநேயத்தை எண்ணி வியக்காமல் என்னால் இருக்க முடியாது.</span></b><br />
<br />
<b><span style="color: cyan;"> புதிய உற்சாகத்தோடு திரும்பி மன்ற உறுப்பினர்களைக் கூட்டி இலங்கைச் சகோதரிகளின் உறுதிப்பாட்டைச் சொல்லி, திட்டமிட்டபடி முத்தமிழ் விழாப் பணிகளைத் தொடர முனைந்தோம். கதாநாயகனும் காமெடியனும் தங்களுடனான டூயட் காட்சிகளுக்கான பயிற்சி முழுமை பெறாமலிருப்பதைத் தயக்கத்துடன் சொன்னார்கள். இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து விடலாமா என நான் கேட்க, அவர்கள் பெண்ணோடு ஆடிப்பாடும் வாய்ப்புப் பறிபோகிறதே எனத் தயங்க “ சரி உங்களுக்கு எப்படி ஆட வருதோ அப்படி ஆடுங்கள். கதாநாயகிக்கு மட்டும் அதிகம் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று உரிமையளித்தேன்.</span></b><br />
<br />
<b> காலை 11.00 மணிக்குத் திட்டமிட்டபடி நன்கொடை பரிசுச் சீட்டுக் குலுக்கலை நிதிக்குழு நடத்தியது. அரங்க அமைப்பு , ஒலி ஒளி , சிலைடு, ஒப்பனையாளர்களுக்கான வழிகாட்டலைச் செய்து கொண்டிருந்தாலும் நடிகையர் மாலை 6 மணியாகியும் வராதது மனதுக்குள் கம்பளிப் பூச்சியாய் அரிக்கத் தொடங்கியது. </b><br />
<br />
<b><span style="color: lime;">இன்னிசை நிகழ்ச்சியைத் தொடங்கும் நேரமும் கடந்து கொண்டிருந்தது. இசைக்குழு பாடகி பாடகர் தயாராக இருந்தனர். பட்டிமன்றப் பேச்சாளர்களும் வந்துவிட்டனர். பட்டிமன்ற நடுவர் “இன்னும் கச்சேரியே ஆரம்பிக்கலையா? எப்ப கச்சேரி முடிச்சு எப்ப நாங்க பட்டிமன்றம் பேசுறது?” ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். மருத்துவமனையிலிருந்து இன்னும் நடிகைகள் வரலியேன்னு தவிச்சுக்கிட்டிருந்த நான் அவரோட கேள்வியையும் அலட்சிப் படுத்த முடியாம இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கச் சொல்லிட்டு பக்கத்துப் பிசிஓ மூலம் அந்த மருத்துவ மனைக்குத் தொடர்பு கொள்ள ஓடுனேன். ( அப்ப ஏது செல்போனெல்லாம்) அந்த நேரத்தில் ஒரு வாடகைக் காரில் நடிகையர் இருவருடன் வந்திறங்கினார் ஒருங்கிணைப்பாளர் நாக.செயராமன்.</span></b><br />
<br />
ம<b>னசு நிம்மதியோட அவங்களை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் காபி கொடுத்து கொஞ்சநேரம் ஓய்வெடுக்கச் சொல்லிட்டு மீண்டும் மேடைக்கு வந்தப்ப, இன்னிசை நிகழ்ச்சி அருமையா நடந்துக்கிட்டிருந்துச்சு. பட்டி மன்ற நடுவர் என்னைக் கூப்பிட்டு “கச்சேரியை முடிக்கச் சொல்லுப்பா. பட்டிமன்றம் தொடங்கணும்” ன்னார். திருச்சியிலேருந்து பணம் கொடுத்துக் கூட்டிவந்த பிச்சை குழுவினரை ஒரு மணிநேரத்துக்குள்ளே முடிக்கச் சொல்லி மேடையிலேறிக் காதைக் கடிக்க , மனசில்லாம அவரும் அடுத்த பாட்டோட கச்சேரிியை முடிச்சார்.</b><br />
<br />
<b><span style="color: magenta;">அடுத்து பட்டி மன்ற நடுவர், பேச்சாளர்கள் பற்றிய அறிமுகம் செய்ய மேடைக்குப் போன என்னை ஒப்பனையாளர் மறிச்சு “ எப்ப ஒப்பனை ஆரம்பி்க்கிறது? ன்னு ஒரு கொக்கியைப் போட்டார். மரபுப்படி இயக்குநரை வச்சுத்தான் ஒப்பனையை வழிபாட்டோடு தொடங்குறதுன்னு அவர் அடம்பிடிக்க, பட்டிமன்றப் பேச்சாளர் அறிமுகத்தை முடிச்சிட்டு, ஒப்பனை அறைக்குள்ளே நுழைஞ்சு நடிகர்கள் ஒப்பனையை ஆரம்பிக்கச் சொன்னேன். .</span></b><br />
<br />
<b><span style="color: magenta;">நடிகையர் தனியா ( ஒரு போர்வை மறைப்புதான்) ஒரு இடத்துல ஒப்பனையை முடிக்க , பட்டிமன்றம் முடிஞ்சது பத்தரைக்கு.</span></b><br />
<br />
<b> நாடகத்துல முதல் காட்சி ஒரு செல்வந்தர் தன் வீட்டில் தூக்கில் தொங்குறதாகவும், அவரைத் தேடிவர்ற அவரோட மகள் தலையில், தொங்குகிறவர் கால்கள் இடிக்க நிமிர்ந்த பார்த்து ,மகள் அலறி மயங்கி விழுவதாகவும் அமைச்சிருந்தேன்.</b><br />
<br />
<b> <span style="color: lime;"> அதிர்ச்சிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ள பெண்ணுக்கு இந்த அதிர்ச்சியான காட்சியை வைப்பதா, நீக்கிடலாமா ? ன்னு நடிகையிடம் கேட்ட போது கதையோட சஸ்பென்சே அந்த முதல் காட்சிதான். அதை நீக்குனா கதை புரியாது, நாடகத் தொடர்ச்சியும் இருக்காதுசார். இருக்கட்டும் நா நடிக்கிறேன்னுச்சு.</span></b><br />
<br />
<b>உள்ளுக்குள்ளே எனக்கு உதறல் . இருந்தாலும் இவர் எப்படிச் செத்தார் ன்னு துப்பறியும் கதை என்பதால் காட்சியை வெட்டாமல் நடத்த ஏற்பாடு செஞ்சு தூக்குக்கயிறை கொட்டகையின் மூங்கிலில் மாட்டி, தூக்கில் தொங்குறவர்க்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிச்சுகள் போட்டு கழுத்தில் கயிற்றை மாட்டி தொங்கவிட்டாச்சு. திரை விலகியதும் தொங்கும் கால்களில் மட்டும் வெளிச்சம் பாய்ச்ச ஒளியமைப்பாளர்க்கு அறிவிப்பு கொடுத்திருந்தேன். </b><br />
<b>திரையை விலக்கும் முன் ஒளியமைப்பாளர் செல்வின் வந்து “தெரு முச்சந்தியில் எரிந்து கொண்டிருக்கும் மெர்குரி விளக்கை அணைச்சாதான் கால்மட்டும் தெரியுறமாதிரி லைட் அடிக்க முடியும் . இல்லேன்ன மேடை முழுதுக்கும் அந்த வெளிச்சம் வரும்.”</b><b>ன்னாரு</b><br />
<b>அந்தப் பகுதிக்கே அந்த ஒரு பச்சை விளக்குதான் பரவலான வெளிச்சம் தர்ற்து. அதை தெரு விளக்குப் போடுற நகராட்சிப் பணியாள் வந்தாத்தான் போடவோ, நிறுத்தவோ முடியும். இதை யோசிக்காம விட்டுட்டோம்.</b><br />
<b>தயக்கத்தைப் பார்த்த எங்கள் மன்ற உறுப்பினர் ( மின் நுட்பாளர்தான்) விறுவிறுன்னு மின் கம்பத்துல ஏறி ப்யூஸ் கட்டையைக் கழட்டிட்டு வந்துட்டான். இப்ப அரங்கமும் பார்வையாளர்களும் இருளில் .</b><br />
<br />
<b> <span style="color: yellow;"> ஒருவழியா திரை விலகியது. தொங்கும் கால்கள் மட்டும் தெரிவதுபோல் ஒளி பாய்ச்சப்பட்டது. அங்கு வந்த மகள் தலையில் கால்கள் தட்டுகிறது. மகள் கால்களைப் பிடித்துக் கதறி மயங்கி விழவேண்டும் . உணர்ச்சி வசப்பட்ட நடிகை தொங்கிய அப்பா நடிகரின் கால்களை இறுகப்பற்றி இழுத்ததில் கொட்டகை பந்தலில் உறுவாஞ்சுறுக்கு போட்டிருந்த கயிறு உறுவத் தொங்கிக் கொண்டிருந்தவர் அப்படியே நடிகைமீது சரிந்து விழுகிறார். பார்வையாளர்களுக்கு இது பிரமிப்பான காட்சி. ஆனால் எங்களுக்கு?</span></b><br />
<br />
<b>--- தொடரும்.</b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
மணிச்சுடர்http://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com2