Sunday, April 7, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
               07.04.2013 ஞாயிறு மாலை புதுக்கோட்டை பாரதி பாலபவனத்தில் புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் “ஆனந்தசோதி“ திங்களிதழின் ஆசிரியர் கவிஞர் மீரா.சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் வீ,கே.கஸ்தூரிநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

               பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் “ மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க?“ எனும் பாடலுடன் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
                                                                பாடல்
மாறுமுன்னு சொன்னாகளே மண்ணெல்லாம் பொன்னாக
மணக்க வாக்குத் தந்தாகளே மல்லிகைப்பு செண்டாக
மறக்கணுன்னு நெனைச்சோமே மண்டியிட்டுக் கேட்டதெல்லாம்
மறக்க முடியலையே மண்ணும் பொன்னா மாறலையே

மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க? -எல்லாம் 
மாறிப்போச்சு  மேலும் கீழும் தானுங்க
மணக்கலேன்னு சொன்னதிங்கே யாருங்க? -ஊழல்
மலிஞ்சுபோயி மணக்கு தெங்கும் தானுங்க                    -- மாறலைன்னு

பாலும்    தேனும்    இங்கேஆறா    ஓடணுன்னு                                                                                                  பாடுபட்டக்        காலம்மாறிப்     போச்சுது
பாட்டாளி       தாகத்துக்கும்     பச்சத்தண்ணி      கூடஇப்ப                                                                             பன்னாட்டு     மூலதனம்       ஆச்சுது
சேத்துல      வெளைஞ்சதைச்    சோத்துக்கு   மாத்துகிற                                                                        பாத்தியமும் அந்நியருக்     காச்சுது
ஏத்துன    வெலவாசி   எறங்குமா என்பதெல்லாம் 
காத்துல    பறந்தபஞ்சு      ஆச்சுது                                           -- மாறலைன்னு

மதுக்குடிச்சா   மதியழிஞ்சு    மானங்கெட்டுப்     போகுமுன்னு
மதுஒழிக்கப்    போராடுன     நெலைஒன்னு
மானங்கெட்ட   வருமானத்தால்   மதுக்கடைங்க   பெருகவச்சு
மாணவனும்    கெட்டுப்போன        விளைவென்ன?
வெள்ளரிக்கா  வித்தகாசும்    வெளிநாடு      போச்சுதுன்ன
வீக்கம்வரும்     பணத்துக்குன்னு     சொன்னாங்க
வெளிநாட்டு     வங்கிகளில்     நம்நாட்டுக்   கொள்ளைப் பணம்
கறுப்புவெள்ளையா  மாறிக்கெடக்கு   பாருங்க              --- மாறலைன்னு

கார்கில்லு     சவப்பெட்டி    காமன்வெல்த்    ஆதர்சு
ஸ்பெக்ட்ரம்  நிலக்கரின்னு   ஊழல்கள்
கெணறுவெட்டக்   கிளம்பிவந்த      புதம்விட்ட   காத்தைப்போல
கிரானைட்   ஹெலிகாப்டர்ஊழல்  ரொம்ப நாறுது
வாய்மையே   வெல்லுமென்னும்   வாசகத்தின்   கீழிருந்து
ஆளுவோர்கள்   அறவழி்க்கு   மாறணும்
வாழும்மக்கள்    வறுமைதீர    வாய்ப்பான   செயலாற்றி
வளமாக     நாட்டைமுன்        னேற்றணும்

மாறிப்போகும்   எல்லாம்அப்பத்     தானுங்க - மக்கள் 
மனசுவச்சா          மாற்றம்          உருவாகுங்க 

பாடலைத் தொடர்ந்து கவிஞர்கள் பலரின் கவிதை ஊர்வலம் அரங்கேறியது.
கவிஞர் மன்றத்திற்கென வலைப் பக்கம் தொடங்க முடிவாற்றப் பட்டது.
முனைவர் சு.மாதவன் அவர்கள் நன்றி கூற கவிதை ஊர்வலம் நிறைவுற்றது.

Sunday, March 24, 2013

கலிலியோ துளிர் இல்ல நிகழ்வு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                             23.03.2013 அன்று புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் உலக சிட்டுக்குருவிகள் நாள், உலக வன நாள், உலக நீர் வள நாள் ஆகிய மூன்று சிறப்பான நாள்கள் பற்றிய கருத்துப் பகி்ர்வு நிகழ்த்தப்பட்டது.
                            துளிர் இல்லச் செயலாளர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உலக நீர் வள நாள் பற்றிய கருத்துரையினைத் துளிர் இல்லத்தாருக்கு வழங்கினார்.
                          அவர் தனது உரையில் இன்றைய நிலையில் நீர் வளப் பாதிப்பு, அதற்கான காரணங்கள், நீர் மாசு மற்றும் பற்றாக்குறை நோய் பாதிப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளைப் பாதுகாத்தலின் அவசியம், பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர் வழங்குவதில் அரசின் கடமை பற்றிய கருத்துகள் பற்றி துளிர்களோடு விவாதித்தார்.
                        நிறைவாக பிறந்தநாள், குடும்ப சிறப்பு விழா நாள்களில் மரக்கன்றுகள் நட்டுப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

                         அதனைத் தொடர்ந்து. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்   திரு கா.செயபாலன் வனப் பாதுகாப்பு பற்றியும், நகரத் துளிர் இல்ல அமைப்பாளர்                   திரு ஆர்.சுப்பிரமணியன்  சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றியும் கருத்துரை வழங்கினர்.

                        தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் காணொளிக் காட்சி மூலம்  புவியின் நீர் வளம் பற்றிய கருத்துகளை வழங்கினார். துளிர் இல்ல உறுப்பினர்களின் துடிப்பான ஈடுபாட்டுடன் விவாதம் நடைபெற்றது.
                        நிறைவாக துளிர் இல்லப்  பொருளாளர் நன்றி கூறினார்.

Friday, March 22, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
          அனைத்துலக தண்ணீர் நாளை(22.03.2013 ) யொட்டி புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா உரையாற்றியபோது.. உடன் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி சித்ராதேவி, உதவியாசிரியர் செல்வநாயகி.

அனைத்துலகத் தண்ணீர் நாள்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

                     22.03.2013 அனைத்துலகத் தண்ணீர் நாள்.  இந்நாளினையொட்டி  அறந்தாங்கிக் கல்வி மாவட்டம், அரிமளம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தியது.
               
                 இக்கூ்ட்டத்திற்குப் பள்ளிக் கல்வியாளர் திரு ஆவுடை முத்து தலைமையேற்றார்.  ஆசிரியர் திருமதி பெ.சித்ராதேவி வரவேற்புரை யாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா                         “ நீரின்றி“......என்னும் தலைப்பில் பாடல் கதைகளுடன் தொடக்க உரையாற்றினார். 
              
                அருகி வரும் தண்ணீர் பிரச்சனைகள், தண்ணீர் பற்றாக்குறைக்கான சமூகக் காரணிகள், இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியம், தண்ணீர் மாசுபாடுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் பற்றியும் தனது உரையில் மாணவர்களுக்கு உணர்த்தினார்.

              அடுத்து, காணொளிப் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு தண்ணீரின் இன்றியமையாமை, தண்ணீர் வறட்சி நோய்கள், தண்ணீர் பற்றிய அரசின் கொள்கை பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். 

               மாவட்ட அறிவியல் இயக்கச் செயலாளர் திரு கா.செயபாலன், துளிர் இல்ல நகர அமைப்பாளர் திரு ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். 

             பள்ளி மாணவர்கள் தண்ணீர் பற்றிய பாடல், ஆடல், பேச்சு, நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் செல்வநாயகி தயாரித்திருந்தமை பாராட்டிற்குரியது. 

            இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு மு.சரவணன், சத்துணவு அமைப்பாளர் திருமதி பிரேமா, பெற்றோர் அருணாசலம், முதலியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதிபெ.சித்ராதேவி நிகழ்ச்சியின் சிறப்பினைச் சொல்லி நன்றி கூறினார்.


Tuesday, March 12, 2013

                 9.03.2013 அன்று பிற்பகல் 4.00 மணிமுதல் 6.00 மணிவரை, புதுக்கோட்டை டி.வி.எஸ் குடியிருப்புப் பகுதி கலிலியோ துளிர் இல்லக் கூட்டம் , தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு செயபாலன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையேற்றார். துளிர் இல்லத் தலைவர் வரவேற்றார்.
                 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள், துளிர் இல்ல உறுப்பினர்களுக்கு எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்து காட்டி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, படைப்பாற்றல் திறன் வளர்க்கும் வழிமுறைகளை விளக்கினார்.
                   மாணவர்கள் செலவில்லாத எளிய அறிவியல் ஆய்வுகளையும், குறைந்த செலவில் செய்து பார்க்கக்கூடிய ஆய்வுகளையும் செய்து பார்த்து மகிழ்ந்தனர். அனைத்துத் துளிர்களும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
                 திரு சுப்பிரமணியன் அவர்கள் “துளிர்“ அறிவியல் திங்களிதழ் பற்றியும் அவ்விதழில் மாணவர் பங்கு பற்றியும் உரையாற்றினார்.
                 துளிர் இல்லச் செயலாளர் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிந்தது.

Friday, March 8, 2013

அனைத்துலக மகளிர் நாள்

                                      08.03.2013 அன்,று புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்வியியல் கல்லூரியில் ,புதுக்கோட்டை சங்கமம் ஜேஸீஸ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து அனைத்துலக மகளிர் நாள் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடியது.
                                      விழாவிற்கு புதுக்கோட்டை சங்கமம் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தலைவர் திரு. வே.குமாரவடிவேலு தலைமையேற்றார். கீரை தமிழ்ச்செல்வன் கல்விக்குழுமச் செயலாளர் திரு எஸ். பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் திரு வீரமுத்து வரவேற்புரையாற்றினார்.

                                     கல்வியல் கல்லூரி மாணவியரின் கவிதைப் போட்டி நடைபெற்றது. பெண்ணியம் பற்றிய கவிதைகள் தேர்வு செய்யப் பட்டன. மகளிர் பங்கேற்ற கோலப் போட்டியும் நடைபெற்றது. 
                                    கல்வியல் கல்லூரி பயிற்சி மாணவியர் பங்கேற்ற “பண்பாட்டு மேம்பாட்டில்  பெண்க ளின் பலமா? பலவீனமா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் உள்ளிட்ட அணியினர் சிறப்பாக வாதிட்டனர்.

                                   லேணா தமிழ்வாணன் அவர்களின் வருகையும் உரையும் எதிர்பாராத சிறப்பாக அமைந்திருந்தது. 
                                 அதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் திரு.நாராயணன், திரு மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா பட்டி மன்றம், கவிதைப் போட்டிகளில் பங்கேற்றவர்களைப் பாராட்டியும், ஏன் மகளிர் நாள் கொண்டாடப் படுகிறது என்பதன் விளக்கத்தையும், சாதனை மகளிர் சந்தித்த சோதனைகளும் இன்றைய மகளிர் படும் வேதனைகள் பற்றியும் “ பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ என்னும் பாடலுடன் உரையாற்றினார்.
                                கவிதை, கோலப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவியர்க்கும் செயலாளர் பீட்டர் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிறைவாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கிய கல்வியல் கல்லூரி முதல்வர் திரு கேசவன் அவர்கள் நன்றியுரையாற்றிட நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிந்தது., 

Monday, March 4, 2013

வழிகாட்டி சமூகப் பணி மன்ற விழா

                               03.03.2013 முற்பகல் புதுக்கோட்டை கோயில்பட்டி சமுதாயக் கூடத்தில், கோயில்பட்டி “வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் இரண்டாம் ஆண்டு கல்வி ஊக்குவிப்புப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                        விழாவிற்கு அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் திரு.ரெ.முத்துச்சாமி அவர்கள் தலைமைதாங்கினார். ஊர்த்தலைவர் க.சுப்பையா அம்பலம் அவர்கள் முன்னிலையேற்றார். வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் தலைவர் , தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திரு எஸ்.ரெங்கராசு அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
                                     வழக்குரைஞர் செல்வக்குமார், தலைமையாசிரியர் பெட்லாராணி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.அடைக்கலம், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் பி.கருப்பையா, தி.க.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
                                     கடந்த ஆண்டு 10,12, வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், 80 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் , கோயில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பு வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், மணிமன்றம் மரகதவள்ளி அறக்கட்டளையின்  நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நல்கினார்.




                                   அவர் தனது உரையில்  மதிப்பெண்கள் பெறுவது மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமூக மேம்பாட்டிற்கான திறன் பெறும் வாய்ப்புகளும் மாணவர்களுக்க உருவாக்கிக் கொடுக்கப் படவேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இணைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். விழா நிறைவில் மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு கே.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.