Friday, October 7, 2011

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

                    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் திருவப்புர் பகுதியில் 3.10.2011 முதல் நடைபெற்று வருகிறது. அம்முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் முகமையர்க்கு ”மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விழி்ப்புணர்வு  நிகழ்ச்சியினை நடத்தினார்.
              அவர் தனது உரையில் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகள் பாமர மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவற்றை நீக்க அறிவியல் சிந்தனைகளை சமுதாயத்தில் பரப்ப வேண்டிய அவசியம பற்றி வலியுறுத்தினார்

     நிகழ்ச்சியில் வெற்றுக் கையில் தங்கச் சங்கிலி, விபுதி, குங்குமம்  வர வழைத்தல், தேங்காய்க்குள் மலர் வரவழைத்தல், எலுமிச்சை பழத்துள் இரத்தம் வரவழைத்தல், தண்ணீரால் தேங்காயை தீப்பற்றி எரிய வைத்தல், தீப்பந்தங்களை உடல், நாக்கில் தேய்த்தல், கோப்பில் உள்ள படங்களை மறைய வைத்தல், சீட்டுகள் வண்ணம் மாற்றுதல், உள்ளங்கையில் சூடம் ஏற்றி அதை வாயில் போட்டு விழுங்குதல், இறுக்கியும் இறுகாத கயிறு. ஆகிய தந்திரக் காட்சிகளை அவர் செய்த போது முகமை மாணவர்களும் பகுதி மக்களும் வியந்து மகிழ்ந்தனர். அனைத்தும் மந்திரமல்ல... தந்திரமும் அறிவியலும்தான் என்பதை நிகழ்ச்சி நடத்திய பொன்.க. அவர்கள் விளக்கினார்.

        நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறைவில் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் திரு பாபு அவர்கள் நன்றியுரையாற்றினார்

No comments:

Post a Comment