Monday, December 21, 2015

வீதி கலை இலக்கியக் களம், புதுக்கோட்டை. நிகழ்வு-22

கலை இலக்கியச் சுவை பருக வருக.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்துள் அமைந்துள்ள ஆக்ஸபோர்டு சமையற்கலைக் கல்லூரியில்....
27.12.2015 ஞாயிறு காலை 10.00 மணிக்கு....

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள...வீதிகலை இலக்கியக் களத்தின் 22ஆவது நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம்.

களத்தில் .....

கவிஞர்கள் மீரா.செல்வக்குமார், பவல்ராஜ், ரேவதி ஆகியோர் கவிதை வழங்கிட..

திருமிகு மூட்டாம்பட்டி ராஜு அவர்கள் சிறுகதை படைத்திட...

திருமிகு சுப்பிரமணியன் அவர்கள் ஓவியக்கட்டுரை கட்டுரைக்க...

முனைவர் துரைக்குமரன் ( நசிகேதன்) அவர்கள் “உப்புவேலி” என்னும் நூலை அறிமுகம் செய்ய..

திருமிகு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் ” தாமஸ்ஹார்டி” எனும் இலக்கியவாதி பற்றி அறிமுகம் செய்ய... 

யு.கே. இன்போ இணையம்-  கார்த்தி அவர்கள் வெள்ள நிவாரண களப்பணி  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள...

அண்மையில் வெளியான தாரைதப்பட்டை, கொம்பன் திரைப்படங்களின் பாடலாசிரியர் புதுகை 
கவிஞர் இரா. தனிக்கொடி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க....
சிறப்பாக நடந்தேற உள்ள இலக்கிய விருந்தினைச் சுவைத்திட மகிழ்வுடன் அழைக்கிறோம்.


அழைப்பின் மகிழ்வில்...பாவலர்.பொன்.கருப்பையா.    
கவிஞர் மா.நாகநாதன்.      

    

Wednesday, November 25, 2015

இன்னுமா தணியவில்லை சீற்றம் ?

மழைத்தாயே...மன்னிப்பாயே.

மண்ணுலகைக் காக்கும் ஏ...மழைத்தாயே - உந்தன்  
கண்ணீரின்  சீற்றம் தனைத் தணிப்பாயே

வான்மழையே உன்னைநம்பி கால்பகுதி நிலமதிலே 
வாழும் மக்கள் வாழ்வ தனைச் சிதைக்காதே - வெள்ளம்
வந்ததெல்லாம் போதும் இன்னும் வதைக்காதே  

காடுகளை அழிச்சு அங்கே  ஆலைகளை அமைச்ச தப்பு
வீடுகளில் ஏசிசெஞ்சு வெளிக்காத்தைக் கெடுத்த தப்பு
சூடுஏத்தி  ஓசோன் குடையைச் சுக்குசசுக்காக்  கிழிச்ச தப்பு
பாடுபட்டப் பயிர்களையே பறிகொடுத்துத் தவிக்கிறோ மிப்ப   - மண்

நீர்வடியும் பாதையெல்லாம்  நிரவிவீடு  கட்டுன குத்தம்
தூர்வாராக் கம்மாயெல்லாம் தொழிற்பேட்டை யாக்குன குத்தம்
ஊர்முழுதும் குப்பையைக்கொட்டி உன்வழியைத் தடுத்த குத்தம்
சோர்ந்தபின்னே  உண ர்ந்துட்டோமே சோதிக்காம காத்திடு நித்தம்- மண்



Friday, November 13, 2015

புண்ணுக்குப் புனுகு

 புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு தடவி என்ன செய்ய?

என்னாத்தா புள்ளைக்கு சாயங்காலத்துலேருந்துஒடம்பு காயுது. 
 தலை நட்டம வச்சுக்க முடியாம பாய விட்டு எந்திரிக்காம படுத்தே கெடக்குறான் ”
- விளக்கை ஏத்தி வச்சிக்கிட்டே வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்து வேலாயி பாட்டியிடம் கேட்டாள் வீராயி.

“ கொல்லை வேலியில இருக்க அந்த ஆடாதோடை எலையில அஞ்சாறு இனுக்கும் ,அஞ்சலை நொச்சி எலையில கைப்பிடியும் ஆஞ்சாந்து  அந்தக் கரிச்சட்டியில ஒழக்குத் தண்ணியில போட்டு கொதிக்க வச்சு எறக்கி எளஞ்சூட்டுல அரைக் கொவளை அவ வாயில ஊத்து. காச்ச காணாமப் போயிரும்.   ஏலே ராமக்கட்டி இருக்கா? 
“ இல்லையேத்தா”
“வேப்பமரத்து வீட்டு செம்புகம் பச்சப்புள்ளக்காரி. ஒரு எட்டுப் போயி அரைச்சங்கு புள்ளப்பாலு வாங்கியாந்து  வெள்ளத்துணியில நனச்சு ஒம்மவ நெத்தியில ஒட்டு. வெக்கை வெலகிப்போகும்”- என்றாள் பாட்டி

“செம்புகம் அவுக ஆத்தா ஊட்டுக்குப் போனவ இன்னம் வல்லையேத்தா”

“இல்லாட்டிப் போவுது  தாவாரத்துல சொருகியிருக்க சீமை ஓட்டை ஒரைச்சு நெத்தியில பத்து்ப்போடு தலைப்பாரம் தன்னால போயிடும்” 

பாட்டியின் பக்குவப்படி பண்டுவம் செய்தாள் வீராயி.
காலையில் கலகலப்பாய் பள்ளிக்கூடம் போனாள் வீராயியின் மகள் வெள்ளையம்மாள்.

          ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் இப்படிப் பத்தியமில்லாப் பாட்டி வைத்தியத்தில் ஒரே நாளில் காணாமல்போன காய்ச்சல்,  ஏன் இன்று எந்த மருந்து மாத்திரை ஊசிகளுக்கும் கட்டுப்படாமல் அடம் பிடிக்கிறது?  

“அது சாதாரணக் காய்ச்சல், இப்ப வர்றது பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், எலிக்காய்ச்சல். சப்பானியக் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல்” என்று காய்ச்சலின் பரிணாம வளர்ச்சியைப் பட்டியலிட்டுப் பயமுறுத்தி பணம் பண்ணும் போக்குதான்  நீண்டு கொண்டே போகிறது.   காய்ச்சலால் நிகழும் மரணங்களும்தான்.

       அன்றும் கொசு, எலி, பறவை, கிருமிகள் இருக்கத்தான் செய்தன.  மனிதரைக் கடிக்கத்தான் செய்தன.ஆனால் அதன் பாதிப்பால் மனித உயிர்கள் போனதில்லை. ஏனென்றால் அந்தப் பாதிப்புகளை எதிர் கொள்ளும் நோய்எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருந்தது. உணவு, உறைவிடம் வாழ்க்கைமுறையும்  அப்படி

அறிவியலில் அபரிமிதமான வளர்ச்சி கண்ட இன்றோ, கருவாகும் காலம் தொட்டே அந்நிய நாடுகளில் தடை செய்யப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலேயே வளர்கிறது மனித உடல். நவீன சாகுபடி , அதிக உற்பத்தி என்னும் பெயரில் விளைபொருள்களில் நச்சேற்றம். கழிவுகளுக்கிடையேயான உறைவிடங்கள்

உற்பத்திப் பெருக்கம் என்னும் நோக்கில் விளைநிலங்கள் தொழிற் பேட்டைகளாகி அவை உமிழும் நச்சுக் கழிவுகள் நிலத்தையும் நீரையும் காற்றையும் வெளியையும் மாசாக்கிக் கொண்டே இருக்கிறது. 

உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் உள்ளிழுக்கும் காற்றும் நஞ்சு கலந்ததாகி விட்டது.

மனிதன் தன்னலப்பேணியாகி இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான்.

பொது சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் நிதியும் திட்டங்களும்   பல்கிப்பெருகிவரும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த ப் போதுமானதாக இல்லை. புரையோடிய புண்ணுக்குப் புனுகு தடவிப் பயனில்லை.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்  

என்னும் குறள்வரிகளை எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டியது இன்றையத் தேவை.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு மனிதவளப் பெருக்கத்தைச் சார்ந்தது. 
மனிதவளம்  உடல் நலத்தைச் சார்ந்தது. 
உடல் நலமோ தூய்மையான சுற்றுச் சூழலைச் சார்ந்தது.

எனவே  நோயால் நிகழும் மரணங்களைத் தவிர்க்க ,சுற்றுச் சூழலைக் காக்கும் பொறுப்பில் நாமும் ஆள்வோரும் கருத்தூன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .



Tuesday, October 27, 2015

மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்

வாசிப்பு முகாமில்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 24.10.2015 ,25.10.2015 ஆகிய இரண்டு நாள்கள் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான “மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாமினை நடத்தியது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் தலைமையில்  கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் உமாராணி அவர்கள் முதல்நாள் முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாற்றுக்கல்வியின் அவசியம் பற்றி மருத்துவர் சலீம், ஸ்டீபன்நாதன்  ஆகியோர் உரையாற்றினர்.
“நம்கல்வி நம்உரிமை” ”2016-புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்” ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நூல்கள் பற்றிய குழுவிவாதங்கள் செய்யப்பட்டது.
வாசிப்பிற்கான புத்தகங்களின் மேன்மை பற்றிய பாவலர் பொன்.க.அவர்களின் பாடல் முகாமில் பாடப்பட்டது
பாடல்
புத்தகம் நம்மோடு பேசத் துடிக்குது பேசிப் பார்ப்போமா
புத்தகப் பேச்சினில் வித்தகம் ஆயிரம் விளங்கிக் கேட்போமா?
மௌன மொழியினாலே நம் மௌனம் கலைத்து விடுமே
மனசுக்குள் புதுப்புது மாற்றங்கள் தந்திடும் மகத்துவம் அறிவோமா?

நேற்றைய மாந்தரின் மாட்சியை 
வீழ்ச்சியை நிரல்படச் சொல்லிடுமே
இன்றையப் புதுமையின் எழுச்சியை
 வளர்ச்சியை எழிலாய்க் காட்டிடுமே
நாளையத் தலைமுறை நாடிடும் 
செயலுக்கு நம்பிக்கை ஊட்டிடுமே
நாளொரு நிகழ்வையும் பொழுதொரு
 நடப்பையும் நலிவின்றிப் பேசிடுமே

அறிவியல் வளர்ச்சியை அணுயுகப் 
புரட்சியை ஆய்வுடன் சொல்லித் தரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல்
 மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித் தரும்
வானியல் மருத்துவப் பொறியியல் 
வேளாண் கருத்துகள் ஊட்டிவிடும்
வாழ்வியல் சுவைகளை வகைவகை 
இலக்கிய ஏடுகள் அள்ளித் தரும்.

நம்கல்வி நம்உரிமை என்னும் நூல் பற்றிய விவாதக் கருத்துகள்  தொகுத்தளிக்கப் பட்டன. 

இரண்டாம் நாள் முகாம்  லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்“ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்னும் நூல் பற்றிய அறிமுகத்தினை கவிஞர் ஆர்.நீலா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நூலாசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் தனது ஏற்புரையில் கல்வித் திட்டம் மாறவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்.
முனைவர் ஆர்.இராமானுசம், பேராசிரியர்.பொ.இராஜமாணிக்கம் ஆகியோர் எழுதிய“புதிய கல்விக்கொள்கை விளக்கமும் விமர்சனமும்” நூல் பற்றிய குழுவிவாதம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கை பற்றி பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் அவர்கள் விளக்கஉரை நிகழ்த்தினார் 

இரண்டாம் நாள் முகாமில்  குழந்தைகளின் மனவெழுச்சிகளுக்கும் இயல்பிற்கேற்பவும் .குழந்தை மையக் கல்வித் திட்டம் இருக்க வேண்டும் என்னும் பொருளமைந்த பாடலைப்  பாவலர் பொன்.க .,பாடினார்
                                                                   பாடல் 
சிறகடிச்சுப் பறக்கட்டுங்க சின்னச் சிட்டுக்குருவி -அதன்
சிறகைஒடிச்சு முடக்காதீங்க சிறைக்குள்ளே அடக்கி
குழந்தைங்க மனசுக்குள்ளே கோடிஎண்ணம் ஒளிஞ்சிருக்கு 
கொஞ்சிநாம அன்பு செஞ்சா குறைவில்லாதத் திறன் வளரும்

தவறித் தெளிஞ்சுக் கத்துக்கிடத்தான் பிள்ளைகளே விரும்பும்- அதைத்
தடுத்து நமது கருத்தைத் திணிச்சா உரிமையை இழக்கும்
போகுற போக்குல போயித் திருத்துங்க புரிஞ்சுக்கும் நிறைய-சில
போக்கிரிப் பிள்ளையும்  புத்திசாலியாகி புதுப்பிக்கும் அறிவை

சொல்வதையெல்லாம் கேட்டுக்கக் குழந்தை அடிமை இல்லைங்க
சொந்தமாச் சிந்திச்சுக் கேட்டு அறியும் துடுக்குப் பிள்ளைங்க
பரிசும் அடியும் பழகிப் போனா பாதிப்பு ரொம்பவுங்க - எதிலும்
பட்டுத் திருந்தும் அனுபவந்தான் பலனை வெல்லுங்க

ஆடிஓடித் திரியும் பருவம் அனுபவப் படிப்பு - அது
ஆற்றலோடு சிக்லைத் தீர்க்கும் அறிவையும் வளர்த்து
ஆக்கப் புர்வச் செயலை வளர்க்கும் கல்வி தேவை்ங்க -அது 
ஆளுமையை வளர்க்கும் கருவி அறிந்து கொள்ளுங்க

நிறைவாக பாலகிருஷ்ணன் அவர்களின் தொகுப்புரையோடு முகாம் நிறைவுற்றது.





Tuesday, October 6, 2015

வலைப்பதிவர் திருவிழாக் காண எல்லோரும் வரலாம்

வாருங்கள் வலைப்பதிவர் திருவிழாக்காண.....

11.10.2015 புதுக்கோட்டை ஆரோக்யமாதா மக்கள் மன்றத்தில் சிறப்பாக  நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழா, ஏதோ இணைய தளத்தில் வலைப்பூ வைத்திருப்பவர் மட்டும்தான் கலந்து கொள்ளலாம் என்பதில்லை. 

சமூக வலைததளங்களில் இயங்குபவர்கள், 
மின்னஞ்சல் மட்டும் வைத்திருப்பவர்கள்,
 ஏன் கணினி கைளாயத் தெரியாத 
தமிழார்வம் உள்ளவர்கள் கூட
 இந்தத் திருவிழாவிற்கு  
அன்போடு வரவேற்கப்படுகிறார்கள் 

வாருங்கள் ... கணித்தமிழ் மின்னணு ஊடகவழி
 உருவாகி வளரும் பதிப்புலகப் 
பரிணாமத்தினைப் பாருங்கள்.
உலகளாவிய உறவுகளைத் தொடருங்கள்.

புத்துணர்வு  பூக்கும் நெஞ்சில்.

Monday, October 5, 2015

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

Sunday, October 4, 2015

இயற்கையோடு வாழப் பழகுவோம்.

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். 
ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.


இயற்கை யோடு வாழப் பழகு மனிதா மனிதா
செயற்கை வாழ்வு  தரும் துயரம் சிறிதா சிறிதா

மரமும் செடி கொடியும் 
பறவை விலங்கு இனங்களும்
மறந்தும் மண்ணை  நீரைக் 
காற்றைக் கெடுப்பதே இல்லை
தாவரங் களின் தயவால் 
வாழும் மனிதன் மட்டுமே
தயக்க  மின்றி இயற்கை 
அன்னை இதயம் கிழிக்கிறான்.

வாழந்திட புவி வாழ்ந்திட- வன

வளங்களைக் காத்திடுவோம் 

மாற்றிட நிலை மாற்றிட- பல

 மரக்கன்றை   நாம் நடுவோம்                       
 உலக இயற்கை வள நாள் இன்று..

Wednesday, September 30, 2015

சுமையாகிப்போமோ சுகஊற்று?

சுமை  யென்று  நினைக்காதே முதியவரை -நீ
சுவை கொள்ளத்  சுகந்தன்னை  இழந்தவரை
சொந்த மெல்லாம்  நீயேயென்  றிருந்தவரை - வாழும் 
சொர்க்க மெனப்  போற்றிடுவாய் இறுதிவரை.

முந்நூறுநாள் வயிற்றில் சுமந்து உன்னை - நல்
முத்தாகக் காப்பாற்றி வளர்த்த அன்னை
மூப்பினால் வயதாகித் தளர்ந்த பின்னே -ஒதுக்கி
முதியோர் இல்லந் தன்னில் சேர்ப்பதென்னே?

தந்தையின் சொத்ததினில் உரிமை கொண்டாய் - அருந்
தாயவள்    கருணையதால்  வளர்ந்து  நின்றாய்
தாங்கிடும் விழுதெனவே   நினைத் திருந்தார்-உற்ற
தளர்ச்சியைப் போக்கிட  நீஏன்  மறந்தாய்?

பட்டினி    கிடந்  துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம்    இருந் துனது நோய்போக்கிப் 
பாங்குடன்   நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர் 
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து. 

முறுக்குடன்  நீயும்  இன்று விளங்கிடலாம்- நாளை
முதுமையும் உனை வந்து  முடக்கிடலாம்
முன்கையின்  வழிநீளும் முழங்கையைப் போல் -முறை
முழுதை யும்உன்  பிள்ளை தொடர்ந்திடுமே.

-- அக்தோபர் முதல் நாள் உலக முதியோர் நாள்.

Monday, September 28, 2015

மு.கோபி சரபோஜி: உன்னில் இருந்து தொடங்கு!

மு.கோபி சரபோஜி: உன்னில் இருந்து தொடங்கு!



பெ்ண்கள் தங்களின் ஆற்றல் வெளிப்பாட்டிற்குத் தடையாய் இருக்கும காரணிகளை தாங்களே உணர்ந்து  ஒதுக்கி, அறவியல் மனப்பான்மையோடான செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் பெண்ணின் பெருமை போற்றப்படும். எதார்த்தங்களை வடித்துள்ள கட்டுரை. வாழ்த்துகள்.

Wednesday, September 23, 2015

விறுவிறுப்பேறும் வலைப்பதிவர் சந்திப்பு 2015

புதுக்கோட்டையில் 11.10.2015 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவில்  தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து ஐந்து பிரிவுகளிலான மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் நடத்தி, அப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு உரூபா 50000 த்தை வழங்கியும் பேருதவி செய்துள்ளது  நமக்கெல்லாம் பெரு மகிழ்வினை அளித்துள்ளது.

த.இ.க. தமிழ் இலக்கியப் போட்டி பற்றிய செய்தியினைத் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. 

போட்டிகளும், விழாவும் சிறப்புற அமைய விழாக்குழு மட்டுமல்ல இயன்ற வழிகளிலெல்லாம் வலைப்பதிவர்கள் தங்களின் பேராதரவினை நல்குவர் என்னும் நம்பிக்கை நமக்குள்ளது.  இணையவழி கணித்தமிழுக்கு உரமூட்ட இணையுங்கள் இன்றே.

சும்மா அதிரப்போகுதுல்ல..

அக்டோபர் 11ல் அலறப்போகுது புதுக்கோட்டை..
 உலகளாவிய  வலைப்  பதிவர்கள்கள்  ஒன்றாகச் சங்கமிக்கும்  வலைப்பதிவர் திருவிழா 

ஆலங்குடி சாலை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ...  

எதுமாதிரியும் இல்லாம ஒரு புதுமாதிரியா நடக்க இருக்கும் விழா...


.
என்னோட படைப்பை மிஞ்ச யாராலும் முடியாதுன்னு கட்டுரை. கவிதைகள் என ஐந்து வகை  மின் தமிழிலக்கியப் போட்டிகளில் முனைப்பாக பங்கேற்கும்  வலைப்  படைப்பாளிகள்...

கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய ஓவியக் கவிதைக் கண்காட்சி...

நல்ல தமிழ் நூல்கள் வெளியீடு...

வெல்லத் தமிழறிஞரகளின் வாழ்த்துரை...

முதல்நாளே வரும் பதிவர்களுக்கு தங்குமிட வசதி...

அனைத்துப் பதிவர்களுக்கும் வழங்கப்பட உள்ள அழகிய பதிவர் கையேடு...

முற்பகல். பிற்பகல் இடைவேளையில் சோர்வகற்ற சுவை நீர்..

நண்பகலில் நாவினிக்க அறுசுவை விருந்து...

மின் தமிழிலக்கியப் போட்டி வெற்றியாளர்களுக்கு தகைமைசால் தமிழ்ச் சான்றோர்களால் 50000 உரூபாயுடன்  வெற்றிக் கேடயங்களும் பரிசளிப்பு 
என அதிரப் போகுது வலைப்பதிவர் திருவிழா... 
என்ன இப்பவே புறப்புட்டாச்சா... வாங்க சந்திப்போம்.

Tuesday, September 22, 2015

மு.கோபி சரபோஜி: கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

மு.கோபி சரபோஜி: கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

இயற்கையை எதிர்த்து வாழும் மனிதா மனிதா -இனி

இயற்கையோடு இணைந்து வாழு இனிதாய் இனிதாய்.



கண் விற்றுச் சித்திரம் வாங்கும்  கயமை பற்றிய கட்டுரை அருமை. வெல்க..

Tuesday, September 15, 2015

காசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்க செயற்குழு முனைவர் ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று கூடியது.
அக்சயா-ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன்,,மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, தா.சிவராமகிருஷ்ணன், முருகேசன். கந்தசாமி, வினோத், அருள், விசயலெட்சுமி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் காசநோய்ப் பாதிப்பாளர்கள் நலன் பேணுதல் பற்றி விவாதித்தனர்.

காச நோய் பாதிக்கப்பட்டவர்களின்  குடும்ப வருவாய் பெருக்கத் திட்டமாக, 

அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க உதவுதல். 

அதற்கான வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளித்தல், 

அவர்களின் செய்பொருள்களைச் சந்தைப்படுத்தல்  முதலானவை பற்றி பேசப்பட்டது.

 அக்டோபர் முதல் வாரத்தில் சிறுதொழில் முனைய விரும்புவோர்க்கு  பயிற்சியளிப்பது எ்ன்றும் திறனடைவிற்கேற்பக் கச்சாப் பொருள்களை அடுத்த கட்டமாக  வழங்குவது என்றும் முடிவாற்றப்பட்டது.

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனையில் தொடர்ந்து காச நோய்க்கான சிகிச்சை மேற்கொள்வோர்க்கு காசநோய்ப்பிரிவு இணை இயக்குநர் அனுமதி பெற்று, ஊட்டச்சத்து பயறுவகை பாரம்பரிய உணவுத் தானியப் பொட்டலங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

Monday, September 14, 2015

வலைப்பதிவர்களே  உங்கள் படைப்புகளுக்கான மகுடங்கள் காத்திருக்கின்றன. விரைந்து படைப்புகளை அனுப்பி மகுடங்களைச் சூடிக்கொள்ள வாருங்கள்.
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------

போட்டிக்கான தலைப்புகள் :

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...

Wednesday, September 9, 2015

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றது

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றத.

தமிழ்நாட்டிலுள்ள வலைப்பதிவர்களையெல்லாம் தயக்கமின்றி புதுக்கோட்டையில் நடக்கவுள்ள வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தேன்மொழிவில் கரந்தை செயக்குமார் அவர்களின் அழைப்பு அமைந்து வருகிறது. எதிர்பார்ப்பிற்கு மேலும் வலைப்பதிவர் கலந்து கொண்டு ஒரு புதிய வரலாற்றினை உருவாக்குவர் என்றே எண்ணுகிறேன்.

Friday, September 4, 2015

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
வலைப்பதிவர்கள் விரைந்து தங்கள் வருகையினைப் பதிவு செய்து, மலருக்கு விளம்பரங்கள் கொடுத்து  வலைப்பதிவர் திருவிழாவினைச் சிறப்புறச் செய்யவும்.

Monday, August 31, 2015

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

கர்னல் கணேசன் அவர்களின் தென்கங்கைப்புலச் சாதனைப் பயணக் கட்டுரை விறுவிறுப்பாக உள்ளது. தொடருங்கள் . வாழ்த்துகள்.

Friday, August 28, 2015

நடுமூளைச் செயலாக்கம்

                    விடுதலை பெற்று அறுபத்தொன்பது ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாகவே உலக அரங்கில் அறியப்படுகிறோமே ஒழிய ,வளர்ந்து விட்ட நாடாக இன்னும் ஆகவில்லையே என்னும் ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. 

ஏன் இந்த நிலை ? நமக்குப்பின்னர் விடுதலைபெற்ற நாடுகளும், இரண்டாம் உலகப்போரில் பேரழிவினைச் சந்தித்த நாடுகளும் கூட இன்று தொழில் வளர்ச்சியில் முன்னேறி, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று விளங்கும்போது நாம் மட்டும் இன்னும் ஏன் அந்த நிலையை அடைய முடியவில்லை. 

சற்று சிந்தித்தால்  காரணம் விளங்கும். அறிவியலில் அளப்பரிய  வளர்ச்சி பெற்றுள்ள நாம்,  அதனினும் மேலாக மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போய்  முயற்சியைக் கைவிட்டு முடங்கிப்போய்க் கிடக்கிறோம் என்பதுதான் உண்மை.

அறிவியல் மனப்பான்மை ஊட்டி, அதன்வழியான சிந்தனைகளை வளர்ப்பதே மனிதவள மேம்பாட்டிற்கான வழி என்கிறது  நம் அரசியல் சட்டங்களின் அடிநாதம்.

                  ஆனால் அறிவியல் பட்டதாரிகள் கூட அறிவுக்குப் பொருந்தாத செயல்களில் ஈடுபடுவதும்,  அதற்கான குழுசேர்ப்பதும்தான் பெரும் வேதனைக்குரியது. முதுநிலை அறுவை மருத்துவர், ஒரு அறுவை சிக்ச்சை மேற்கொள்ளுமுன் தனது திறமையில் நம்பிக்கை இழந்து ஆண்டவனை வேண்டுவதும், விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வுக்கோளை ஏவுமுன் அவற்றிற்குப் படையலிடுவதும் எந்த வகையில் அறிவியற்பாற்பட்டதென்பதுதான் விளங்கவில்லை.

               தொன்று தொட்டு சில பிற்போக்குவாதிகள் பாமர மக்களை ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களின் மூளைக்கு விலங்கிட்டும் சிந்தனைத் திறனை முடக்கி, மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்து வந்துள்ளமை  கண்கூடு.
               அறியாமையில் மக்களைத் தள்ளுவது என்பது சட்டப்படியான குற்றமாகும். அதிலும் அறிவியல் போர்வையில் மறைந்து கொண்டு மக்களை  மோசடி செய்து வருபவர்களை எப்படி அனுமதிக்க முடியும்?.

                அண்மைக்காலமாக  “நடுமூளை செயலாக்கம்” என்ற பெயரில் ஒரு புதிய மூடநம்பிக்கை நாடெங்கும் பரப்பப்பட்டு வருகிறது.  தங்கள் பிள்ளைகள் முதல் மதிப்பெண் எடுக்க  என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோரின் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி,வருவாய் தேடும் வழியாக இந்த “நடுமூளைச் செயலாக்கம்” என்னும் மோசடியைத் தொடங்கி யிருக்கிறார்கள் சில வியாபாரிகள்.

               மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டிற்கும் இடையில் இருக்கும் நடுமூளைப் பகுதியினைத் தூண்டுதல் செய்து மூளைத்திறனை மேம்படுத்தும் பயிற்சியினை இந்த நிறுவனங்கள் அளிப்பதாகப் பரப்புரை செய்து வருகிறார்கள்.  இதற்கு பிட்யுட்டரி சுரப்பியை வளப்படுத்தல், செரடோனின், மெலடோனின் அமிலத்திசுக்களை அதிகரித்தல் என்னும் அறிவியல் தொடர்களையும் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய நுண்ணுணர் தூண்டல்  மூலம் கண்ணைக்கட்டிக்கொண்டு கூட படிக்கும் ஆற்றல் ஏற்படும், நினைவாற்றல் பெருகும், படிக்கும் பாடங்கள் நன்றாக மூளையில் பதியும். தேர்வுகளிலும் போட்டிகளிலும் சிறப்பாகச் சாதிக்கலாம்   என்றெல்லாம் ஆசை காட்டித்  தங்கள் வியாபாரத்தை  தொடங்கியுள்ளன  இந்த நிறுவனங்கள் 

தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடங்கிய இந்த மோசடி தற்போது தமிழகத்திலும் தொடர்கிறது.

                முன்பெல்லாம் கண்கட்டி வித்தையென்று, கண்ணைக்கட்டிக் கொண்டு ஊர்திகளை ஓட்டுதல், கூட்டத்தினர் வைத்திருக்கும் பொருள்களின் பெயர்களைச் சொல்லுதல் என ஏமாற்றுச் செயல்கள் செய்து பிழைப்பு நடத்துவார்கள். பாமர மக்களிடம் கூட அத்தகைய செப்படி வித்தைகள் இப்போது செல்லுபடியாவதில்லை. ஆனால் தங்கள் பிள்ளைகள் முதன்மை பெற வேண்டுமென்னும் பேராசைகொண்ட பெருநகரப்  பெற்றோர் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற நிறுவனங்களில் சேர்த்து  முதன்மை நிலை எய்த முனைந்துள்ளனர்.


              அதிகஅளவாக பத்துபில்லியன் நரம்பணுக்கள்( நியுரான் ) அணுக்களைக் கொண்ட 1.450 கி.கி. எடையுள்ள மனித மூளை, சிறுமூளை, பெருமூளை, முகுளம் என்னும் பகுப்பில் அமைந்துள்ளதை எட்டாம் வகுப்பு அறிவியல்பாடம் விளக்கமாகச் சொல்கிறது. மண்டை ஓட்டினுள் இருபிரிவாக உள்ள மூளையின் இடப்பக்க மூளை, உடலின் வலப்பக்க உறுப்புகளையும், வலப்பக்க மூளை, உடலின் இடப்பக்க உறுப்புகளையும்  நரம்பணுக்களின் வழித் தூண்டல்களுக்கேற்ப துலங்கவைக்கின்றன. பெருமூளையின் நடுப்பகுதி இட,வலப் பகுதி மூளைகளின் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் செயலியாக உள்ளது என்கிறது உடற்கூறு அறிவியல். 
   
                இதுவரை அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவ ஆய்வுகளில் மெய்ப்பிக்கப்படாத “நடுமூளைச் செயலாக்கம்” எந்த அறிவியல் அமைப்புகளோடும் தொடர்பில்லாத இந்த நிறுவனங்களுக்குப் புலப்பட்டிருப்பது விந்தையே.

இதில் சில கேள்விகள் எழுகின்றன.
முதலாவதாக இந்த நிறுவனங்களை நடத்துகிறவர்கள் அறிவியலறிஞர்களா?
இந்த நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களா?
10,15 நாள் பயிற்சியில் இப்படி மூளைச் சலவை செய்வது சாத்தியமா?
கண்ணைக்கட்டிக்கொண்டு ஏன் படிக்க வேண்டும்?
அதற்கு இருட்டிலேயே படிக்கலாமே...
அப்படியானால் பார்வையற்றவர்கள் இப்பயிற்சியால் பலன் பெற முடியுமா?
இப்படிப் பயிற்சி பெற்ற குழந்தைகள் நுண்ணறிவில் மேம்பட்டுள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா?
என்ற இக்கேள்விக்கு மாணவர்களை “ஆம்” எனப் பதிலளிக்கப் பயிற்சியளித்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

           15 நாள் பயிற்சிக்கு 25000 ரூபாய் வரை கட்டணம் பெறும் இந்த நிறுவனம்  இரண்டுநாள்களிலேயே அந்தக் குழந்தைகளிடம் “உன் மூளையில் ஒரு அற்புத சக்தியை கொண்டு வந்திருக்கிறோம். இதைப்பற்றி உன் பெற்றோர் உட்பட யாரிடமும்  “அப்படி இல்லை” என்று சொன்னால் அந்த சக்தி செயல்படாமல் போய்விடும்” என அச்சுறுத்தி விடுகிறார்கள். சக்தி கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்த குழந்தைகள் யாரிடமும் இப்பயிற்சிக்கு முரணாக எதையும் சொல்வதே இல்லை.  கேட்பவரிடம்  தனக்குள் ஒரு சக்தி உருவாகியுள்ளதாகப் பொய்யாகவே சொல்கிறார்கள். பெற்றோரும் நம்பி ஏமாந்து வருகிறார்கள்.

             ஆக தங்களிடம் பயிற்சிக்கு வரும் குழந்தைகளைப் பெற்றோரிடம் பொய்சொல்லத்தான்  பயிற்சியளிக்கிறார்கள். மேலும் இதன் தொடர்ச்சியாக ஏமாற்றவும் அக்குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன என்கிறார்கள் அறிவியலறிஞர்கள். இதனால் குழந்தைகளின் ஆக்கப்புர்வமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும் ஆபத்தும் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

               வேகமாகப் பரவிவரும் இம் மோசடியினைத் தடுக்க, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(எப்.ஐ.ஆர்,ஏ) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் சி.இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக பிரின்ஸ் என்னாரெசு, நிர்முக்தா இயக்கத்தின் பிரிவான சென்னை சுதந்திரச் சிந்தனையாளர்கள் அமைப்பின் கணேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோர்  தீவிரமாக முனைந்துள்ளனர். அண்மையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி, இம் மோசடி பற்றியும் மூளையின் இயற்கையான செயல்திறன் பற்றிய உண்மைகளையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கியிருக்கிறார்கள.

                அத்தோடல்லாமல்  இந்த “நடுமூளைச் செயலாக்க விளைவுகள்” அறிவியல் பூர்வமானது என நிறுவுவார்களேயானால் அவர்களுக்கு  அவ்விடத்திலேயே ஐந்து இலட்சம் வழங்கப்படும் என்றும் சவால் விட்டிருக்கிறார்கள்.

              மேலும் இத்தகைய மோசடி நிறுவனங்களைத் தடை செய்யக்கோரி தில்லிஉயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றும் தொடரப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். 

            சவாலை எதிர்கொள்வார்களா? நீதிமன்றத் தடை வருமா?  என்பதற்கெல்லாம் அப்பால் நாம் நம் எதிர்காலச் சந்ததியினரை இத்தகு மோசடி வலையில் சிக்கவைக்காமல் இருப்பதும், அறிவியல் மனப்பான்மையினை வளர்த்து ஆக்கப்பூர்வமான வழியில் அவர்களை வழிநடத்துவதும்  நமக்கும் நாட்டிற்கும் நல்லது.

                                                                                     நன்றி-- பெரியார் பிஞ்சு, தீக்கதிர்





Tuesday, August 25, 2015

அறிவியல் அற்புதங்கள்

            புதுக்கோட்டை சத்தியமங்களம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில்  அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு சிறப்பாசிரியர்களுக்கான ஐந்துநாள் உண்டு உறையுள் பயிற்சிமுகாம் நடைபெற்று வருகிறது.
               
            புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் சீரிய ஒருங்கிணைப்பில் 24.08.2015ல் தொடங்கி 28.08.2015 வரையில் நடைபெற்றுவரும் மண்டல அளவிலான. இப்பயிற்சியில் பதினான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 54 சிறப்பாசிரியர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
               
            தேர்ச்சி பெற்ற சிறந்த கருத்தாளர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்  அந்நிரலில் 25.08.2015 அன்று மாலை அறிவியல் அற்புதங்கள் பற்றிய செயல்விளக்கம் பாவலர் பொன்.கருப்பையா அவர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

            அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு எளிய அறிவியல் ஆய்வுகளும், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் காணப்படும் அறிவியல் உண்மைகளும்  செயல்விளக்கத்தோடு செய்து காட்டப்பட்டது.

              பயிற்சி ஆசிரியர்கள் ஆர்வமுடன் தாங்களும் முன்வந்து ஆய்வுகளில் பங்கேற்றது சிறப்பாக அமைந்தது.

Tuesday, August 18, 2015

நாடகத்தமிழ் நல்கும் நயமிகுத் தமிழ் மரபு

ehlfj;jkpopy; eakpFj; jkpo; kuG
       jkpo; ,yf;fpaq;fspy; jkpoupd; fhjy;> tPuk;> kfspu; khz;G>,y;ywg; ghq;F> tpUe;Njhk;gy;> ,aw;ifiag; Ngzy; Kjypa tho;tpay; kuGr; nra;jpfs; Vuhskhf mwpaf;fplf;fpd;wd. mj;jF jkpo; kuGr; nra;jpfs; ciueil> ghl;byf;fpaq;fspy; fhzg;gLfpd;w msTf;F ehlf ,yf;fpaq;fspy; mjpfk; fhzf;fpilf;ftpy;iy.
.     jkpo;ehl;by; goq;fhyj;jpypUe;Nj ehlff;fiy rpwg;Gw;wpUe;jpUe;jikiaj;  njhy;fhg;gpak; $Wk; nka;g;ghl;bay; top mwpa KbfpwJ. Mdhy; mit Ngzpg; ghJfhf;fg; glhikahy; mf;fhy ehlf E}y;fs; gw;wp KOikahf ekf;F mwpaf; fpilf;ftpy;iy. kjpthzd; ehlfj;jkpo;E}y;> FzE}y;> nrapw;wpak; Kjypa ehlfE}y;fspd; ngau;fs; kl;LNk ekf;Ff; fpilj;Js;sd. Nrhou;fs; fhyk;tiu muz;kidfspYk;. Nfhapy;fspYk; gs;S FwtQ;rp tif ehlfq;fs; ehl;ba tbtpy; elj;jg;gl;lik fy;ntl;Lr; nra;jpfshy; njupa te;JsJ. gjpndl;lhk; E}w;whz;bw;Fg; gpd;dNu ehlfj;jkpo; %d;whk; jkpoha; Kfpo;j;jJ vdyhk;.
     mt;tifapy; gj;njhd;gjhk; E}w;whz;by; ,yf;fpakha;g; gbg;gjw;Fk; ,ay;Kiwapy; ebg;gjw;Fk;  Vw;wjha; Nguhrpupau; ng.Re;juk;gps;is mtu;fs; Mf;fpj; je;Js;s kNdhd;kzPak; vd;Dk; nra;As; ehlf E}ypy; fhzg;gLk; jkpo; kuGfis cw;wwpe;Jzu;tJ ek; flikahFk;.
     Mq;fpyj;jpy; ypl;ld; gpuG vOjpa kiwtop’ (the secret way) vd;Dk; fijapidj; jOtp vOjg;gl;l ehlfE}yhf ,Ue;jhYk; jkpo; kf;fspd; tho;f;if kuGfis njs;spjpd; czu;j;Jk; tifapy; ,e;E}y; mike;Js;sJ.
      E}y;kuG fUjp  tho;j;J> tzf;fj;Jld;  ehw;nghUs; gaf;Fk; eaj;NjhL ,e;E}y; njhlq;;fg;gl;bUe;jhYk; ,jw;F Ke;ija ehlf E}y;fspy; ,y;yhj mq;fk;> fsk;> fhl;rp vd;Dk; Gjpa gFg;GfSld; xU Gjpa kugpid mikj;J gz;ilj; jkpo;f; fhg;gpa cWg;Gfs; nghjpe;J Mf;fg;gl;Ls;sik Nehf;fw;FupaJ.
    ;jkpoupd; fhjy; tho;f;if> nkhopg;gw;W> ehl;Lg;gw;W> ,aw;ifNahL ,iae;j tho;f;if jkpoupd; tPuk;> tho;tpay; jj;Jtk; Kjypait ; Ritglr; nrhy;yg;gl;Ls;sJ ,e;ehlfE}ypy;;.

nkhopg;gw;W
    
,e;ehlf E}ypd; ghapuk;> E}y; kuG fUjp flTs; tzf;fj;NjhL njhlq;fg;gl;bUe;jhYk; jkpo;j; nja;t tzf;fk; vd;Dk; Gjpa kuG           mike;;;Jsik jkpopd; njhd;ikr; rpwg;ig czu;j;Jtjhf cs;sJ.                                                                   ‘ePuhUq; flYLj;jvdj;njhlq;Fk; mf;fypg;ghtpy;                                                      “mj;jpyf thridNghy; midj;JyFk; ,d;gKw                              vj;jpirAk; Gfo;kzf;f ,Ue;jngUe; jkpozq;Nf vdj; jkpo;$Wk;  ey;Yyfk; KOtJk; jkpo;nkhop gue;J gutp ,Ue;jikg; gjpT             nra;ag;gl;Ls;sJ;. jkpo;j;jhapd; cjpuj;jpypUe;J fpisj;j nkhopfshf        fd;dlk;> njYq;F> kiyahsk;> JS Mfpatw;iwf; Fwpg;gpl;Ls;s       Nguhrpupau; Mupak; cyf tof;nfhope;jpUe;jikiaAk; jkpo; moptpd;wp  ,sikNahL vd;Wk; tpsq;FtijAk;                                                                     Mupak;Nghy; cyftof; fope;njhope;J rpijahTd;                          rPupsikj; jpwk;tpae;J nray;kwe;J tho;j;JJNk vd Fwpg;Gzu;j;jp tho;j;jpAs;sJ rpwg;G.
    
ghz;ba kd;dd; [PtfDila kfs; kNdhd;kzpapd; kztpidr; rpf;fy;fis ikaf;fUj;jhff; nfhz;l fijahf ,Ug;gpDk; tha;g;Gs;s ,lq;fspnyy;yhk;   rq;f ,yf;fpak; Kjyhd  jkpopyf;fpag; ngUikfs; fpsu;j;jpf;     $wg;gl;Ls;sik Nehf;fw;ghyJ.
jkpo; tho;j;J tzf;fg; ghapuj;jpNyNa gj;Jg; ghl;bd; fw;gid tsj;jpid gj;Jg;ghlhjpkdk; gw;wpdhu; gw;WtNuh                           vj;JizAk; nghUl;fpirAk; ,yf;fzkpy; fw;gidNa? vdTk;>
ts;Stu;nra; jpUf;Fwis kWtwed; Fzu;e;Njhu;fs;                 cs;StNuh kDthjp nahUFyj;Jf; nfhUePjp?vd kDthjj;jpid       kWf;Fk; mNj Ntisapy;  jpUf;Fwspd; ePjpAzu;T epkpu;j;jpf; $wg;gl;Ls;sJ.                                                     
       ‘kdq;fiuj;J kyq;nfLf;Fk; thrfj;jpy; khz;Nlhu;fs;                    fdQ;rilnad; WUNtw;wpf; fz;%bf; fjWtNuh?                         vd tUk; ghapu tupfs;  jpUthrfj;jpd; cUf;fj;jpid czu;j;JfpwJ.
    mj;Njhlyy;yhky; ,e;ehlfE}ypd;  fijkhe;ju; $w;wpD}Nl Vwj;jho ,Ugj;ije;J  ,lq;fspy; jpUf;Fws; fUj;Jfs; ifahsg;gl;Ls;sik eak; gag;gjhAs;sd.
     ghz;ba kd;dd; [Ptfd; jd; kfs; kNdhd;kzpapd; kztpid Fwpj;J Nrukd;dd; GUNlhj;jkdplj;jpy; J}J mDg;GtJ gw;wpj;  jd; mikr;rd;    Fbydplk; fUj;Jf; Nfl;Lk;NghJ Fbyd;                                          tpidnjupe; Jiuj;jy; ngupjy> m/J                                    jided; fhw;wNy ahw;wy;’  vdf;Fwpg;gpLtJ                                nrhy;Yjy; ahu;f;Fk; vspa> mupathk;                                    nrhy;ypa tz;zk; nray;                               vd;Dk; Fwspd; nghUs; nghjpe;jJjhNd.
     
kNdhd;kzpapd; Njhop thzpf;Fk; mtspd; fhjyd; eluhrDf;Fk; ,Ue;j         fhjypd; jpz;ikia>                                                       csj;njhL csQ;nrd; nwhd;wpby; gpd;du;                                 tpau;j;jNk nra;ifAk; nkhopAk;  vdf; Fwpg;gpl;Ls;shu; Nguhrpupau;.         ,J  fz;nzhL fz;zpid Nehf;nfhf;fpd; tha;r;nrhw;fs;            vd;d gaD kpy vd;Dk; jpUf;Fwspd; rhuk;jhNd.                         
;    
kNdhd;kzpiaj; jd;kfd; gyuhkDf;F kzk; Kbj;J muirf;  ifg;gw;w vz;Zk; mikr;rd; Fbyd; #o;r;rpahy; kd;dd; [Ptfd; NruDld; Nghupl;Lj; Njhw;Wj; jd;khdk; ,oe;J jtpf;Fk; epiy>                    
gOnjz;Zk; ke;jpupapd; gf;fj;Js; njt;Nthu;                             vOgJ Nfhb AWk;vd;Dk; Fws; fUj;jhy; czu;j;jg; gl;Ls;sJ.        
 ,J mikr;ru; #jhy; murhs;Nthu; tPo;thu; vd;gij cs;Siwahff;       nfhs;sj; jFk;.      
 [Ptfd; jd;khdk; ,oe;jjhf jd; tho;it Kbj;Jf;nfhs;s vz;Zifapy;  mtidj; Njw;Wk; jsgjp ehuhazDf;F …                                                           

                ‘kapu;ePg;gpd; thohf; ftupkh dd;dhu;                                     capu;ePg;gu; khdk; tupd;   vd;Dk; Fwl;fUj;jika..                        Xu;rpW kapupid ,of;fpDk; khANk ftupkh                                ngUe;jif gpupe;Jk; Cd;Rkf;Fk; ngw;wp                                    kUe;jha; vdf;Nf ,Ue;jNj ehuzh vdf; $WtJ jkpoupd;                    khd czu;tpid ehdpykwpar; nra;tjy;yth?  
     
md;idau; jk; Foe;ijaNuhL nfhQ;rpf; Fyhtp cwf;fk; tuj;            jhyhl;Lg; ghl;L ,irj;j nkhopAk; jkpNo vdgij                                 gioNahu; ngUikAk; fpoikAk; fPu;j;jpAk;                                  kd;dpa md;gpEk; md;idau; ghb                                        epj;jpiu tUtif xj;jWj; JkJ njhl;by;jh yhl;l…”          vd;Dk; [Ptfd; ciuahy;>  jhyhl;by; gz;ilg; ngUikAk; fPu;j;jpAk; czu;j;jg;gl;lFoe;ijfNs vjpu;fhyj;jpy; nkhopg; gw;Wk; tPuKk;      nrwpe;jtu;fshf    cUththu;fs; vd;gJ cs;Siwahf mike;Js;sJ vdyhk;.
    
ehd;fhapuj;J IE}w;W ,uz;L tupfspy; mike;j ,e;ehlf E}ypy;  mWgJf;Fk; Nkw;gl;l gonkhopfs; ,lk; Nehf;fp ,dpikAwf; ifahsg; ngw;Ws;sik Gjpa rpe;jidfisj; J}z;LtdthfTk; cs;sd.
     thzpapd;  fhjYf;Fj; jilNghl;Lj; jhq;fs; $Wk; kzhsidNa       Vw;f Ntz;Lnkd tw;GWj;Jk; thzpapd; ngw;Nwhu; nraiy               KjiyAk; %u;f;fDk; nfhz;lJ tplh vd;Dk; gonkhop nahw;wpa      thzpapd; $w;W> ,d;Wk; kdnkhj;jf; fhjYf;Fj; jilaha; ,Ug;Nghiur; rhLtjhfNt ekf;Fg; gLfpwJ.                                                   mNjNghy; tpUg;gkpy;yhj kzkfid kzf;f ngz;fis tw;GWj;Jk; nraiy   G+itia tsu;j;Jg; G+idf; fPaNth? vd ,e;ehlfj;jpy;         rflu; $WtJ  fpspia tsu;j;Jg; G+idf;Ff; nfhLf;fNth? vdg; ngz;Zupikf;Fr; rhu;ghf mike;j kughu;e;j gonkhopay;yth?  ;.

jkpof;fhjy; nkhopTfs;
      ghz;bad; [Ptfd; kfs; kNdhd;kzp jhd; tpUk;Gk; Nruehl;L        kd;dd; GUNlhj;jkidNa kzf;f tpUk;GtJ> rhjpa Fy NtWghLfs;       fle;j md;gpd; topg;gl;l fhjy; jilfle;J nty;Yk; vdgij     czu;j;JtjhfNt cs;sJ.  
      ,aw;if mofpy; jd;id kwe;J
 ‘jhNk Jwf;fpDk; kwg;gNdh vd;Dsk; kd;dpa xUtiu vd;Dk;; thzpapd;   nkhopT md;iwa jkpo;g; ngz;bu; nfhz;bUe;j fhjypd; cWjpapid     njs;spjpd; tpsf;fg;gl;LsJ.     
   ,e;ehlfE}ypy; tUk; rptfhkp rupjk; vd;Dk; cl;fijg; gFjp>  rpyg;gjpfhuj;jpy; tUk; fhdy;tup Nghd;w Ritahd ghly;fisf; nfhz;lJ. kdnkhj;jf; fhjy; ,izapdupd; Nghuhl;lk;> r%fj;jpd; Gwf;fzpg;G>      re;jpf;Fk; ,lu;fs;> cWjp Fiyahikahy; xd;wpizjy;> vdf; fhjypd;     nkd;ik td;ikfis tz;zKw czu;j;Jtjhf cs;sJ.

ehl;Lg; gw;Wk; tPuKk;:
tQ;rp ehl;lhNuhlhd Nghu; Kidapy; [Ptfd; jdJ tPuu;fSf;F                    me;jzu; tsu;f;Fk; nre;joy; jd;dpYk;                                     ehl;lgp khdKs; %l;ba rpdj;jP                                         md;Nwh thNdhu;f; nfd;WNk ctg;G’    vd ciuf;fpwhd;.
,jpy; me;jzu; tsu;f;Fk; jPapdhy; Mtnjhd;Wkpy;iy. ehl;Lg;gw;Wf;       nfhOe;J tpl;nlupAk; cs;sq;fshNy ehL fhg;ghw;wg;gLk; vd;Dk;        ajhu;j;jk; Gyg;gLfpwJ.
    mNjNghy; jhapDk; jia G+z;l jha;ehl;bw;Fj; jPik tpistpf;fj;     Jzpe;j giftiuf; fz;L nfhjpj;njo Ntz;Lk; vdtUk; [Ptfdpd; $w;W>     ,d;W me;epa KjyPLfSf;F jhuhskak; fhl;Lk; murpayhu; fz;Lk;   thshjpUf;Fk; kz;zpd; ike;ju;fSf;F tpLk; miw$tyy;yth?
Nghu;f;Fwpf; fhaNk Gfopd; fhak; ahu;f;fJ tha;f;Fk;? vdtUk; [Ptfdpd;    $w;W> gz;il kwj;jkpoupd; tPuj;jpid> tUk; jiyKiwf;F czu;j;jp>    ghujpahu; $wpatop faik fz;L nghq;fplTk; nusj;jpuk; gofTk; nra;ahkyh NghFk;?

,aw;ifapd; ,dpa ngw;wpfs;:
,aw;ifapd; gpd;dzpapy; Jyq;fpa ,dpa ngUtho;T tho;e;jtu;fs;   goe;jkpou;fs;.   vq;NfDnkhUG+,iyfdpafg;gby;                                       mq;fq; fjidNa Nehf;fp Nehf;fpj;                                       jq;fh kfpo;r;rpapy; jiyjL khWtd; vdtUk; ,aw;if tpUk;gp eluhrd;     gw;wpa rflu; $w;whYk;> tQ;rpeh ljdpy; ed;nra; ehnldr;                   nre;jkpo; toq;Fe; Njankhd; WsJmjd;                         me;jkpy; ngUtsk; mwpahu; ahNuh?vd tUk; Foyd; $w;whYk; ,aw;if tsj;NjhL $ba ey tho;T tho;e;j goe;jkpou; tho;f;ifapidr; Rl;b       gpd;gw;w mwpTWj;Jtjhf cs;sJ.

jkpoupd; jj;Jt kuG:
     ‘fhyk; vd;gJ fwq;FNghw; Rod;W                                        NkyJfPohf;fPoJNkyh                                                 khw;wpLe; Njhw;w nkd;gJ kwe;jid vd [Ptfdplk; Re;juKdp ciuப;பJ       khw;wk; vd;w xd;iwj; jtpu vy;yhk; khwf;$bait vd;Dk; fhu;y; khu;f;rpd; rpe;jidapd; mbehjkpy;iyah?
,e;ehlfj;jpy; tUk; ep\;lhguu;                                            fUf;nfhz;Ls;s rpid vdtUk; jj;Jt nkhopG                 vspNahiu tijf;Fk; typNahiuf; fz;L thshjpUf;fyhFNkh? ;vd;Dk; rpe;jidia thrpg;ghsDf;Fj; J}z;Ltjhfj;jhNd cs;sJ.
  
  Nkyhff; fijj;jiytp kNdhd;kzpapd; ngaiuNa ,e;ehlfE}Yf;F itj;jpUg;gNj ngz;ikf;Fg; ngUik Nru;f;Fk; xU Gjpa kuGjhNd.


 இவ்வாறு nkhopg;gw;W> ehl;Lg;gw;W> fhjypd; rpwg;G> tPuk;> Kjyhd       jkpoupd; tho;tpay; rhu;e;j  caupa Kw;Nghf;Ff; fUj;Jfis cs;slf;fp mike;Js;s ,e;ehlf E}y; jkpo; ,yf;fpa tuyhw;wpy; ePbj;J epiyj;J            epd;W xU Gjpa jiyKiwia cUthf;Fk; vd;gjpy; rpwpJk; Iakpy;iy 

Monday, May 4, 2015

முழுநிலா முற்றம்-5

             மேழம் திங்கள் முழுநிலவு நாளன்று கீரனூர் செயா அவர்கள் இல்லத்தில்  முழுநிலா முற்றத்தின் அய்ந்தாவது கூட்டம் கூடியது.

          புதுக்கோட்டை இலக்கிய அமைப்பினர் கூடிக் கொண்டாடினர்.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அக்கொண்டாட்டத்தில் பாடல், கவிதை, தொடர் கதை உருவாக்கம், தந்திரத் திறமை, முதலிய பல்கலைகள் பகிரப்பட்டன.

          பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் “வெண்ணிலவு” பாடலோடு தொடங்கியது முற்றம்.
         
         கவிஞர் மு.கீதா அவர்கள் நிகழ்வினைத் தொகுத்தளிக்க திருமதி அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி , ஸ்டாலின் சரவணன், முத்துப்பாண்டியன், மதியழகன், பொன்.க., கவிஞர் தங்கம் மூர்த்தி, முத்துசாமி, பேரா முனைவர் கருப்பையா, புதுகை புதல்வன் ஆகியோரின் கவிதைத் தேர் வலம் வந்தது.
          
        கவிஞர் முத்துநிலவன் தொடங்கிய தொடர் கதை உருவாக்கம் அனைவரின் சிந்தனைக்கும் நல் விருந்தானது. சுரேசு மான்யாவின் நினைவில் நின்ற நிகழ்வு அனைவர் நினைவிலும் நின்றது.
       
         இரா.சம்பத்குமார், இரவிச்சந்திரன், அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகளின் (ம)தந்திரத் திறமை, பலகுரல் பேச்சு ஆகியன் சுவை ஊட்டின
         
          மூன்று மணி நேரம் செவிக்கும் சிந்தனைக்கும்  விருந்தாக அமைந்தது  முழுநிலா முற்ற நிகழ்வு.

          ஒருங்கிணைத்திருந்த சகோ.செயலெட்சுமி அவர்களின் நெகிழ்வான நன்றியும் நிறைவான சிற்றுண்டி விருந்தும் சிறப்பாக அமைந்தது.

         முழுநிலவினை மேகம் மறைத்து விட்டால் ஏங்கும் மனதின் புலம்பலை  பாடலாக எழுதி இசையமைத்துப் பாடி மகிழ்வித்தார் பாவலர் பொன்.க.
                                               இதோ அந்த பாடல்...

வெண்ணிலவு முகத்துக்கு மேகத்திரையோ?
வெட்கப்பட்டு கருங்கூந்தல் மறைநிலையோ?
உன்னில் நான் நனையவே... ஒருதிங்கள் ஏங்கியிருந்தேன்
என்னிடத்தில் ஊடல்என்ன இன்னும் திரை விலக்கலையோ?

அம்புலியே வெள்ளொளியால் மகிழ வைப்பாய்
அன்பில்லையோ கள்ளவிழி காட்டு கின்றாய்
பாலில் நான் மூழ்கிடும்... எண்ணம் பாதி நீராகுதே
பதுங்கிச் சிணுங்கிடாமல் பளிங்கு முகம் காட்டடி

நட்டநடுக் காட்டினுள்ளே நானிருந்தால்
நாணிமரக் கிளைகளைப் போர்த்திக் கொள்வாய்
பொட்டல் வெளியில் புரள்வோம்... உன்னுள் பொய்க்கோபம் ஏதுக்கடி?
பொழுது கரைகிறது பனியும் சுடுகிறது புவிதழ் மலர்த்திடடி.

உருதந்த விண்வெளித்தாய் தடை செய்தாளோ ?
ஒளிதந்த ஆதவனுக்கு அஞ்சு கின்றாயோ?
நட்சத்திரத் தோழிக் கூட்டமே.... நகைதிடும் என்னும் நினைப்போ?
நாணமென்றால் சொல்லிவிடு நானனுப்பும்
தென்றலுந்தன் துகிலை உரித்துவிடும்டீ 

Tuesday, April 28, 2015

உலக புத்தக நாள் - கலைத்திறன் போட்டிகள்

                24.04.2015 அன்று புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையற்கலைக் கல்லூரியில் , புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை உலக புத்தக நாள் கலைத்திறன் போட்டிகளை நடத்தியது.

                      மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்ச்சிக்குத்  தலைமையேற்றார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பொறியியல், கல்வியியல், செவிலியர் மாணவர்கள் போட்டிகளில பங்கேற்றனர்.

                     நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா வரவேற்றார். கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சுப் போட்டியினைத் தொடங்கி வைத்து உலக புத்தகநாள் பற்றி உரையாற்றினார்.

                   “அறிவை விரிவு செய்“ என்னும் தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டிக்கு புலவர் மா.நாகூர், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் நடுவர்களாக இருந்து  திறமையாளர்களைத் தேர்வு செய்தனர். 

                   பேச்சுப் போட்டியில் கூழையன் விடுதி மருத்துவரின் செவிலியர் கல்லூரி மாணவி மா.அமுதபாரதி முதலிடத்தையும், சிவபுரம் கற்பகவிநாயகா் செவிலியர் கல்லூரி மாணவியர்  செ.சியாமளா இரண்டாமிடத்தையும், ம.சிவரஞ்சனி மூன்றாமிடத்தையும்  சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர் டி.பிரகாசுராசு ஆறுதல் பரிசினையும் பெற்றனர்.

               அடுத்து நடைபெற்ற ” பாரதிதாசன் பாடல்கள்” இசைப்பாடல் போட்டியில்  எம்.ஆர்.எம் கல்வி நிறுவன மாணவி சு.சுபாசினி முதலிடத்தையும், கற்பக விநாயகா கல்வி நிறுவன மாணவியர் சோ.டெல்பினாமேரி இரண்டாமிடத்தையும், வெ.திவ்யா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

             “ புத்தகங்களும் படைப்பாளிகளும் ” என்னும் தலைப்பில் நடைபெற்ற வினாடி-வினா ப்போட்டியில்  கே.வி. செவிலியர் கல்லூரிக் குழு சு.சிறீநித்யா, பு.அங்காளீசுவரி ஆகியோர் முதலிடத்தையும், சுதர்சன் பொறியியல் கல்லூரிக் குழு ஜெ.வனிதா, அ.சிந்து ஆகியோர் இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா கல்வி நிறுவனக் குழு
 


மு.நசுரீன்பானு, ரெ.சுபரஞ்சனி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

                மன்றச் செயலாளர் ஆ.குமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க, மன்றத் துணைச்செயலாளர் கவிஞர் மு.கீதா, மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன், துணைச் செயலாளர் கவிஞர் மகா.சுந்தர்  ஆகியோர் போட்டி நடுவர்களாகச் செயலாற்றினர்.

              வெற்றியாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் லெ.பிரபாகரன், ஆக்சுபோர்டு சமையற்கலைக் கல்லூரி தாளாளர் சுரேசு ஆகியோர் பரிசுகளை ( மதிப்புள்ள நூல், சான்றிதழ், மணிமன்ற பொன்விழா மலர், கைப்பை ஆகியன)  வழங்கிப் பாராட்டினர். 

            போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
           வருகை தந்திருந்த  அனைவருக்கும் ரொட்டியும் கோதுமை பாலும் வழங்கப்பட்டது.
நிறைவாக கவிஞர் மு.கீதா நன்றி கூறினார்.