Sunday, February 24, 2013

செம்மொழிக் கருத்தரங்கம் - ஜே.ஜே. கல்லூரி

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
             சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் சிவபுரம் . ஜே.ஜே.கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, புதுக்கோட்டை சிவபுரம் ஜே,ஜே. கலைஅறிவியல் கல்லூரியில், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் தலைப்பில் பிப்ரவரி 4,5,6 நாள்களில் சிறப்பான கருத்தரங்கினை நடத்தியது.
             அக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்விற்கு ஜெ.ஜெ.கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு நா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தவத்திரு தயானந்த சந்திர சேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடக்க உரையினை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் வ.குருநாதன் ஆற்றினார்.  அன்றைய பிற்பகல் சிலப்பதிகாரத்தில் சமயப் பொதுமை என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் கு.சிவமணி தலைமையேற்றார். சைவம் என்னும் தலைப்பில் முனைவர் சேதுராமன் , வைணவம் என்னும் தலைப்பில் இரா.சம்பத்குமார், சமணம் என்னும் தலைப்பில் முனைவர் மு.பழனியப்பன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். கவிஞர் மு.பா. வரவேற்புரையினையும் கவிஞர் பறம்பு நடராசன் நன்றியுரையும் ஆற்றினர்.

                இரண்டாம் நாள் (5.02.13) முற்பகல் அமர்வில் சிலப்பதிகாரத்தில் அரசியல் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செந்தூரான் கல்விக் குழுமத் தலைவர் இராம.வைரவன் தலைமை  வகித்தார். முனைவர் முத்து வரவேற்புரையாற்றினார். அரசன் எனும் தலைப்பில் முனைவர் அய்க்கண் , குடி என்னும் தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், சுற்றம் என்னும் தலைப்பில் பேரா. கு.தயாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர் . மணிச்சுடர் கலைக்கூட நிருவாகி புலவர் பொன்.கருப்பையா நன்றியுரையாற்றினார்.


No comments:

Post a Comment