Tuesday, October 1, 2013

பெரியார் 1000 வினா-விடை - பரிசளிப்பு

                      29.09.2013 பிற்பகல் புதுக்கோட்டை நில அளவையர் கூட்ட அரங்கில் மாநில பெரியார் உயராய்வு  மையம் நடத்திய “ பெரியார் 1000 வினா-விடை” ப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டஅளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

                மானமிகு மு.அறிவொளி அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.

               மாவட்டச் செயலாளர் மானமிகு ப.வீரப்பன் அவர்கள் வரவேற்றார்.  ஆ.சுப்பையா, ரெ.புட்பநாதன், ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலையேற்றனர். 
           
               
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா வெற்றியாளர் களை அறிவிக்க,  பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் மானமிகு முனைவர். க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் மானமிகு அ.சரவணன் நன்றி கூறினார். 


1 comment:

மகிழ்நிறை said...

அய்யா வணக்கம்.நான் கஸ்தூரி ரெங்கன் அவர்களின் மனைவி.தங்களிடம் கணினி தமிழ் பயிலரங்கில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டேன் .அய்யா எனது மாணவர்கள் கூட பெரியார் ஆயிரம் விழாவில் கலந்துகொண்டனர் .எப்போது பரிசு அறிவிப்பார்கள் என கேட்ட வண்ணம் இருந்தனர்.தங்களின் பதிவால் எனக்கு விடை கிடைத்து விட்டது.என் மாணவர்கள் பரிசு பெறவில்லை பரவாயில்லை கிடைத்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .பெரியாரை பற்றி என் மாணவர்கள் இப்போது என்னை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளனர்.அதுவே பெரிய வெற்றி தான் .என்ன இந்த சிறியவள் சொல்வது சரிதானே அய்யா?

Post a Comment