Monday, April 28, 2014

வீதி கலை இலக்கிய அமைப்பு - ஏப்ரல்-14


           இன்று 20.04.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் “வீதி” கலை இலக்கிய அமைப்பின் ஏப்ரல் திங்கள் கூட்டம் முனைவர் நா. அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

         கவிஞர் செ.சுவாதி அவர்கள் சந்தக் கவிதையில் வரவேற்புரை யாற்றினார்.
         பாவலர் பொன்.க. அவர்கள் கடந்த மார்ச்சு திங்கள் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 'மோசம்' என்னும் தலைப்பில முனைவர் வீ.கே.கஸதூரிநாதன் அவர்களும் 'தொலைதூரத்தை அறிதல்' என்னும் தலைப்பில் சுரேசு மான்யா அவர்களும் கவிதைகள் வழங்கினர்.

          2975 லும் என்னும் அறிவியல் நுட்ப கவிதை இழையோடிய காதல் சிறுகதையினை கவிஞர் இராசி.பன்னீர் செல்வன் அவர்கள் வழங்கினா்ர்.

         “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” என்னும் தலைப்பில் ஊடறு- பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு நூல் பற்றி கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் திறனாய்வு செய்தார்.

        சிசிலியன் ஆங்கில புதினத்தின் திரைத் தழுவல்களாக வந்த “பீமா” “சுப்பிரமணியபுரம்“ ஆகிய திரைப்படங்களின் ஒப்பீட்டாய்வினை திரு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் வழங்கினார்.

        “தாழ்ந்த என் தாயகமே“ என்னும் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலினை திரு கும.திருப்பதி அவர்கள் அறிமுகம் செய்தார்.

         நிறைவுரையாற்றிய முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்“ வீதி” இலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்கான கருத்துகளை வகுத்தளித்தார். 

        திருமதி பிரியதர்சினி அவர்கள் நன்றி கூறினார்.
இத்திங்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்திருந்த கவிஞர்கள் கீதா, சுவாதி அவர்களின் பெருமுயற்சியால் புதுகையின் புகழ்மிக்க இலக்கிய ஆர்வலர்கள் நிறையப் பேர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. 

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


பார்வையிட முகவரி-வலைச்சரம்


ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
என்பக்கம் கவிதையாக

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment