Tuesday, April 28, 2015

உலக புத்தக நாள் - கலைத்திறன் போட்டிகள்

                24.04.2015 அன்று புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையற்கலைக் கல்லூரியில் , புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை உலக புத்தக நாள் கலைத்திறன் போட்டிகளை நடத்தியது.

                      மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்ச்சிக்குத்  தலைமையேற்றார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பொறியியல், கல்வியியல், செவிலியர் மாணவர்கள் போட்டிகளில பங்கேற்றனர்.

                     நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா வரவேற்றார். கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சுப் போட்டியினைத் தொடங்கி வைத்து உலக புத்தகநாள் பற்றி உரையாற்றினார்.

                   “அறிவை விரிவு செய்“ என்னும் தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டிக்கு புலவர் மா.நாகூர், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் நடுவர்களாக இருந்து  திறமையாளர்களைத் தேர்வு செய்தனர். 

                   பேச்சுப் போட்டியில் கூழையன் விடுதி மருத்துவரின் செவிலியர் கல்லூரி மாணவி மா.அமுதபாரதி முதலிடத்தையும், சிவபுரம் கற்பகவிநாயகா் செவிலியர் கல்லூரி மாணவியர்  செ.சியாமளா இரண்டாமிடத்தையும், ம.சிவரஞ்சனி மூன்றாமிடத்தையும்  சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர் டி.பிரகாசுராசு ஆறுதல் பரிசினையும் பெற்றனர்.

               அடுத்து நடைபெற்ற ” பாரதிதாசன் பாடல்கள்” இசைப்பாடல் போட்டியில்  எம்.ஆர்.எம் கல்வி நிறுவன மாணவி சு.சுபாசினி முதலிடத்தையும், கற்பக விநாயகா கல்வி நிறுவன மாணவியர் சோ.டெல்பினாமேரி இரண்டாமிடத்தையும், வெ.திவ்யா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

             “ புத்தகங்களும் படைப்பாளிகளும் ” என்னும் தலைப்பில் நடைபெற்ற வினாடி-வினா ப்போட்டியில்  கே.வி. செவிலியர் கல்லூரிக் குழு சு.சிறீநித்யா, பு.அங்காளீசுவரி ஆகியோர் முதலிடத்தையும், சுதர்சன் பொறியியல் கல்லூரிக் குழு ஜெ.வனிதா, அ.சிந்து ஆகியோர் இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா கல்வி நிறுவனக் குழு
 


மு.நசுரீன்பானு, ரெ.சுபரஞ்சனி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

                மன்றச் செயலாளர் ஆ.குமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க, மன்றத் துணைச்செயலாளர் கவிஞர் மு.கீதா, மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன், துணைச் செயலாளர் கவிஞர் மகா.சுந்தர்  ஆகியோர் போட்டி நடுவர்களாகச் செயலாற்றினர்.

              வெற்றியாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் லெ.பிரபாகரன், ஆக்சுபோர்டு சமையற்கலைக் கல்லூரி தாளாளர் சுரேசு ஆகியோர் பரிசுகளை ( மதிப்புள்ள நூல், சான்றிதழ், மணிமன்ற பொன்விழா மலர், கைப்பை ஆகியன)  வழங்கிப் பாராட்டினர். 

            போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
           வருகை தந்திருந்த  அனைவருக்கும் ரொட்டியும் கோதுமை பாலும் வழங்கப்பட்டது.
நிறைவாக கவிஞர் மு.கீதா நன்றி கூறினார்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விழா நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

Post a Comment