Sunday, October 4, 2015

இயற்கையோடு வாழப் பழகுவோம்.

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். 
ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.


இயற்கை யோடு வாழப் பழகு மனிதா மனிதா
செயற்கை வாழ்வு  தரும் துயரம் சிறிதா சிறிதா

மரமும் செடி கொடியும் 
பறவை விலங்கு இனங்களும்
மறந்தும் மண்ணை  நீரைக் 
காற்றைக் கெடுப்பதே இல்லை
தாவரங் களின் தயவால் 
வாழும் மனிதன் மட்டுமே
தயக்க  மின்றி இயற்கை 
அன்னை இதயம் கிழிக்கிறான்.

வாழந்திட புவி வாழ்ந்திட- வன

வளங்களைக் காத்திடுவோம் 

மாற்றிட நிலை மாற்றிட- பல

 மரக்கன்றை   நாம் நடுவோம்                       
 உலக இயற்கை வள நாள் இன்று..

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
இயற்கையோடு வாழப் பழகுவோம் ஐயா
நன்றி

Yarlpavanan said...

"இயற்கை யோடு வாழப் பழகு மனிதா மனிதா
செயற்கை வாழ்வு தரும் துயரம் சிறிதா சிறிதா" என
நன்றே சிந்திக்க வைக்கிறியளே!

http://www.ypvnpubs.com/

Post a Comment