Sunday, October 23, 2016

வீதி கலை இலக்ககியக் களம் -32


இன்று வீதி கலை இலக்கியக் களம் -32 ஆவது நிகழ்வு புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியில்  திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக  பாண்டிச்சேரி முனைவர் செல்வக்குமாரி அவர்களும், தோழர் பிரியா பாபு அவர்களும் கலந்து கொண்டனர்.

திருநங்கையர் பற்றிய சிறப்புக் கூட்டமாக அமைத்திருந்தனர்  கூட்ட அமைப்பாளர்கள் திருவாளர்கள் செல்வா மற்றும் மீரா செல்வகுமார் ஆகியோர்.

திருநங்கை பற்றிய கவிதைகள் அரங்கேறின. கவிஞர்  கீதா அவர்கள் சிறுகதை வாசிக்க  கருத்துகள் பகிர்வு நடந்தது.

திருநங்கையரின்  சமூக நிலைப்பாடு பற்றி முனைவர் செல்வக்குமாரி அவர்கள் உரையாற்றினார்,  தோழர் பிரியாபாபு நான் எவ்வாறு திருநங்கையானேன்?  திருநங்கையர் எவ்வாறு பாலின சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பாக முகநூல் நண்பர்கள் திருநங்கை பற்றிப் பகிர்ந்த கவிதைகள் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சி முழுமையும்  காணொளிப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்    “ ஆணாகப்பிறந்து” என்ற பாடலை, 
பாவலர் பொன்.கருப்பையா எழுதி இசையமைத்து   அவரே பாடினார்.

பாடல்
ஆணாகப் பிறந்து பெண்ணாகி வாழும் 
நங்கையரே திருநங்கையரே
ஆணவம் தவிர்த்து அன்பினில்  தழைத்து
ஆற்றல் வாய்ந்ததிரு நங்கையரே

அர்ச்சுணன் சிகண்டிஉம் முன்னோடிகள்
அழகிய வரலாற்றுக் கண்ணாடிகள்
இரக்கமும் வலிமையும் இருக்கும் உம்மை
இரண்டும் கெட்டான்என எவன் சொன்னது?

விடைதேடும் இயற்கையின் விளைவுகளே
வேண்டுமென்றா வேடம் புனைந்து கொண்டீர்?
வளரிளம் பருவத்தின் மாற்றம் கண்டே 
வலியின் வலிதாங்கி மாற்றிக் கொண்டீர்.

நிசங்களின் வெளிச்சம் போனாலென்ன?
நிழலின் இருட்டினில் சிரித்துக் கொள்வீர்
உறவுகள் வெறுத்தும்மை ஒதுக்கியென்ன?
உலகெங்கும் உமக்குறவு பறந்திடுவீர்

பாகனின் துரட்டிவழி துதிக்கை நீட்டும்
பலமறியா யானைபோலா நீங்கள்?
பாவிகளின் பாரத்தை சுமத்தல்விட்டு
பணிசெய்வீர் பாலின பேதம்விட்டு.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாலின பேதம் விட்டு பணி செய்யட்டும்இவர்கள்
அருமை ஐயா
நன்றி

மணிச்சுடர் said...

கருத்தளிப்பிற்கு நன்றி அய்யா.

Post a Comment