Saturday, April 7, 2018

உலக சுகாதார நாள்


  1.  நலம்... நலமடைய ஆவல் 


 ஒரு நாட்டின்  வளம் அங்கு வாழும் மக்களின்  நலத்தைச் சார்ந்தே.அமைகிறது. . 

அடிப்படையாக    தனிமனிதனின் நலம் பெருக, 
அக் குடும்பத்தில் நலம் பெருகும். 

குடும்பங்களின் நலம் பெருக  அவ்வூரின் நலம் பெருகும்.

 ஒவ்வொரு ஊரின் நலமும் பெருக பெருக       
அம்மாநிலம்  நலம் பெருகும் . 

மாநில மக்களின் நலமே 
மனித வளத்தின் பெருக்கம். 

மனித வளம் பெருகிட , 
உழைப்பும் உற்பத்தியும் பெருகும். 
தொழில்துறை பெருகும்,  

தனிமனித வருவாயின் பெருக்கமே
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளம்.   
நாம் தன்னிறைவு பெற்ற சமூகத்தில் வாழ்வதாக
அப்போதுதானே பெருமைப்பட முடியும். 

எனவே உலக சுகாதார நாளைக் கொண்டாடுவதாகப் 
பெருமைப் பட்டுக் கொள்வதைவிட, 
 நல ஆதாரங்களைக் காப்பதையும் 
பெருக்குவதையும் நோக்கி 
நாம் செயல்பட முனைவோம்..
---------------------------------------------------------------------------------------------------------


சித்திரம் வரையச் சுவர் வேண்டும்-நம்
அத்தனை பேருக்கும் நலம் வேண்டும்
நோயற்ற வாழ்வு பெற வேண்டும்
நூறாண்டு வாழவும் வழி வேண்டும்.

நோயற்ற வாழ்வே பெருஞ் செல்வம்
நோயைத் தவிர்க்க வழிவகை செய்வோம்
தூய்மையை எதிலும் கடைப் பிடிப்போம் 
துயரத்தைத் தூரத்தில் விரட்டிடுவோம்.

உண்ணும் நீரும் உறிஞ்சும் காற்றும்
ஒழுங்காய் இருந்தால் நோய் வருமா?
வேதி உரத்தினில் விளையும்பொருளால்
வேதனை உடலுக்கு  உடன் வருமே .

கருத்தின்றி வீசும் கழிவுப் பொருளால்
காற்றும் நீரும் கடும் நஞ்சாச்சு
  கவனமாய்க் கழிவைக் கையாளத்  தெரிந்தால்
  கவலைகள் காற்றினில் பறந்தாச்சு

   சுற்றுப் புறமெலாம் சுத்தமாய் இருந்தால்
  சுகாதாரக் கேடுகள் பரவாது
  சுழற்சிக்கு ஏலாத வன்பொருள் தவிர்த்தால்
  சூழலை மாசுகள் கெடுக்காது

  காய்ச்சிய நீரையேப் பருகிடப் பழகு
  காற்று வெளியினில் தினந்தினம் உலவு
  உணவிலும் உடையிலும் தூய்மையை நிறுவு
  உழைத்தபின் ஓய்வெடு உடலுக்கு அழகு







2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
சுகாதாரம் போற்றுவோம்

மணிச்சுடர் said...

நன்றி அய்யா

Post a Comment