Thursday, February 23, 2012

தமிழ்ப் புத்தாண்டு நாள் -2043

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                 புதுக்கோட்டை சண்முகா நகர் இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக தி.பி 2043 சுறவம் முதல் நாள்  சண்முகாநகரில் 7 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாள் விழாச்  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
              விழாவினையொட்டி பகுதி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகளும், இளைஞர்களுக்கான இறகுப் பந்துப் போட்டிகளும், மகளிர்க்கான கோலப்போட்டிகளும், நடைபெற்றன.
             திறந்த வெளியில் பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து, விளையாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் காலையில்தொடங்கியது.                                  விளையாட்டுப் போட்டி நடுவர்களாக தலைமையாசிரியர் திரு பொன்.க.மதிவாணன், திரு சத்தியமூர்த்தி, திரு.இரா.மணிமாறன், திரு கருணாநிதி, திரு சாண்டில்யன் ஆகியோர் செயல்பட்டனர்
 அதனைத் தொடர்ந்து  மழலையர், சிறுவர், இளைஞர். பெற்றோர் முதலியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள் முழுவதும் நடைபெற்றது. பகுதி மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
            இரவு நிகழ்வாக போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 
            விழாவிற்குப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் திரு உ.சரவணன் தலைமையேற்க, திரு ப. இராமசாமி, முன்னிலையேற்றார். கவிநாடு மேற்கு ஊராட்சி மன்றத் த லைவர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
            அதனைத் தொடர்ந்து புதுகை சாலமன் வழங்கும் இராகம் மெலோடி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவிற்கு தமிழாசிரியர் அ.சுப்பையா அவர்கள் வரவேற்புரையாற்ற, ஆசிரியர் திரு சீனிவாச நாராயணன் அவர்கள் நன்றிகூறினார். விழா ஏற்பாடுகளை இளந்தென்றல் கலைமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் செய்திருந்தார். திரு சோமசுந்தரம், திரு. கனகராசு, திரு .பா.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் விழாக்குழுவாகச் செயல்பட்டனர்.

No comments:

Post a Comment