Wednesday, December 18, 2013

பாரதியார் பிறந்தநாள் - வினாடி-வினாப் போட்டி- இரண்டாம் சுற்று.

13.12.2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் வினாடி-வினாப் போட்டியின் இரண்டாம் சுற்று வினாக்கள்

                         இரண்டாம்  சுற்று - பாரதியாரின் மொழிப் பற்று.

1. நெஞ்சை அள்ளும் காப்பியம் என எதைப்  பாரதியார் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.?

2. தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்.... இதன் அடுத்த வரி என்ன?

3. எதற்காக எட்டுத் திக்கும் சென்றிடுவீர்  எனப் பாரதியார் கூறுகிறார்?

4. புமிதனில் யாங்கனும் பிறந்ததில்லை என எம்மூன்று புலவர்களைப் பாரதியார் குறிப்பிடுகிறார்?

5. கற்றபின் நிற்க அதற்குத் தக எனும் குறள் கருத்தைப் பாரதியார் எப்படித் தன் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

 6. சேமமுற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்கிறார் பாரதி?

7. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு என்பதில் மாமுனி என யாரைக் குறிப்பிடுகிறார்?

8. பயில், பயிற்சி கொள் என எவற்றைப் பாரதியார் ஆத்திச்சூடியில் கூறுகிறார்?

9. எப்போது வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிறார்?

10. எல்லையொன்றின்மை என்று எந்தக் கவிஞரரிக் கவியைப் பாரதி சுட்டுகிறார்?

என்ன? விடைகளைத் தந்துவிட்டீர்களா?  சரிபார்க்க “ மணிமன்றம், புதுகை” வலைப்பக்கம் வாருங்கள்

2 comments:

Kasthuri Rengan said...

சபாஷ் சரியான கேள்வி ...
௩. வள்ளுவன்,இளங்கோ கம்பன்

(நான் அப்பீட்டு)

மணிச்சுடர் said...

மதிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே.

Post a Comment