Wednesday, January 15, 2014

அனைத்துத் தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்திருநாள், திருவள்ளுவர்நாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்.

கடந்த ஒரு வாரகாலமாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கையிட நேரமின்றி நெருங்கிய பணிகள்.
நபார்டு வங்கி மற்றும் செஸ்டாட் அமைப்பின் மூலம்  கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை பற்றிய விழிப்புணர்வு பரப்புரைக்காகப் பாடல்கள் எழுதி,  இசையமைத்துப் பாடி, குறுந்தகடு ஒலிப்பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து.... கிராமியச் சாயலில் வங்கிகள் தரும் வளர்ச்சி பற்றி “ அண்ணே ஒரு சந்தேகம்” என்னும் நிகழ்ச்சியினைத் தயாரித்து  இயக்கி காணொளிப் பதிவு செய்து குறுவட்டு வெளியிட்டமையிலும் கிராமத்துச் சொந்தங்களுக்கு பரப்புரை நிகழ்வுகளில் கலந்து கொண்டமையிலும் பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன.

அதனைத் தொடர்ந்து கவிநாடு மேற்கு சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதி இளந்தென்றல் கலை மன்றத்தின் 9 ஆம் ஆண்ட தமிழர்திருநாள் பொங்கல்விழா,  கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் ஆயத்த முனைப்பு.

4.01.2014 அன்று பகுதிக் குழந்தைகளுக்கு கவிஞர் செ.சுவாதி, கவிஞர்.மு.கீதா , தலைமை ஆசிரியர் இரா.சிவகுருநாதன் ஆகியோரைக் கொண்டு பேச்சு, பாட்டு. திருக்குறள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல், விழிப்புணர்வுப் பாடல் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தியது

12.01.2014 அன்று சண்முகநகர், மங்களம் நகர், கே.கே.நகர், சாய்ராம்நகர், கிருஷ்ணாநகர், விரிவாக்கப் பகுதி ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவாக ஆறு நடுவர்களைக் கொண்டு வண்ணக்கோலப்போட்டி நடத்தியது.
13.01.2014 அன்று  கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் புகையிலாப் போகி, மற்றும் இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தியது.

அன்று மாலை வெள்ளியரங்கில் நடந்த நல்லிணக்கப் பொங்கல் நிகழ்வு மன்றும் மனிதநேய மாண்பாளர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது.

14..01.2014 தமிழர்திருநாளன்று  பகுதி இல்லங்களில் பொங்கலிட்டு  இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம்  இணைந்து சிறுவர் முதல் பெரியவர் வரைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள்முழுவதும் நடத்தியது.

அன்றுமாலை, பகுதிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மே டையேற்றியது.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு.
நிறைவாக கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை நடுவராகக் கொண்டு ” மக்களின் மனங்களில் பெரிதும் நிலைத்திருப்பவை “பழைய திரைஇசைப்பாடல்களா? புதிய திரையிசைப் பாடல்களா?“ என்னும் இன்னிசைப் பட்டிமன்றம்.  பழையபாடல்களே அணியில் கீழாத்தூர் மக்களிசைக் கலைஞர் ரெ.வெள்ளைச்சாமி, நன்னிலம் மகேசுவரி, ஆலங்குடி லெ.வடிவேலு ஆகியோரும், புதிய திரையிசைப் பாடல்களே


அணியில் இராச.ஜெய்சங்கர், திண்டுக்கல் கிலோனா மணிமொழி, புலவர் மகா.சுந்தர் ஆகியோரும் வாதிட்டனர். சிறப்பாக அமைந்தது.
15.01.2014 அன்று காலை புதுக்கோட்டை சின்னப்பாத் திடலருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, பொங்கலிட்டு வாழ்த்துப் பகிர்வு.
அதனைத் தொடர்ந்து பிச்சத்தான்பட்டி இளைஞர் நற்பணிமன்றத்தினர் நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்து நடத்தியது. 
இத்தகு நிகழ்வுகளால் நட்புகளோடும், உறவினர்களோடும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் மகிழ்வினையும் உளமாறப் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையாக கொண்டாட்டம் ஐயா...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
அப்பப்பா படிப்பதற்கே மூச்சு வாங்கிறதே இதை எல்லாம் செய்த தங்களுக்கு! தங்களது சுறுசுறுப்பு நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஐயா. தொடரட்டும் தங்கள் நற்பணி. கொஞ்சம் உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றி..

Post a Comment