Saturday, February 1, 2014

நாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.

01.02.2014 அன்று புதுக்கோட்டை அழகம்மாள் புரத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு “முதலுதவி பற்றிய விழிப்புணர்வு” கருத்துரையினைச் செயல் விளக்கத்தோடு முகமையர்க்கு நடத்தினார்.


இயற்கைச் சீற்றங்கள், பேரிடர், வருமுன்னர் காத்தல், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டியன, விபத்து, பேரிடர்களில் பாதிக்கப் பட்டோர்க்குச் செய்ய வேண்டிய முதலுதவி ஆகியன பற்றி நடப்பியல் சான்றுகளுடன் விளக்கமளிக்கப் பட்டது.

மூர்ச்சையடைந்தவரை  இயல்பு நிலைக்குக் கொணர்தல், சி.பி.ஆர் என்னும் மார்பழுத்த சிகிச்சை , செயற்கைச் சுவாசமளித்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழிமுறைகள்,  எலும்பு முறிவுகளின் வகைகளும் அவற்றிற்கான கட்டுகளும், முதலுதவியில் பயன்படும் முடிச்சுகள், தீக்காயம் பட்டோர்க்கான முதலுதவி, நீரில் மூழ்கியவரை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் முறைகள், நச்சுக்கடிகள், மின்விபத்துகளுக்கான முதலுதவி முதலானவை செயல் விளக்கங்களோடு மாணவியர்க்கு பயிற்றுவிக்கப் பட்டது.

கதை, பாடல், நகைச்சுவையோடான இந்நிகழ்வில் முகமையர் சிறிதும் சோர்வின்றி ஈடுபாட்டுடன் பங்கேற்றமை சிறப்பாக இருந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...

மணிச்சுடர் said...

வாழ்த்தினுக்கு நன்றிகள் அய்யா.

Post a Comment