Monday, September 14, 2015

வலைப்பதிவர்களே  உங்கள் படைப்புகளுக்கான மகுடங்கள் காத்திருக்கின்றன. விரைந்து படைப்புகளை அனுப்பி மகுடங்களைச் சூடிக்கொள்ள வாருங்கள்.
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------

போட்டிக்கான தலைப்புகள் :

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...

5 comments:

Kasthuri Rengan said...

பல பதிவுகளைப் பார்த்தேன் இப்போதுதான் !

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...


அறிவிப்புகள் கூடிக் கொண்டே போகின்றன
நிகழ்ச்சி மெருகேறிக் கொண்டே இருக்கிறது
நன்றி ஐயா

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அய்யா போட்டிக்குத் தலைப்புகள் தரப்படவில்லை. அது முன்னர் தவறாக வந்துவிட்டது, பின்னர் சரிசெய்துவிட்டோம். உஙகள் பதிவிலும் செய்திடுக.

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அதாவது “போட்டிக்கான தலைப்புகள்“ என்பதை எடுத்துவிட்டு, போட்டிக்கு எழுதவேண்டிய பொருள் (Subject) என்று மாற்றுக (நமது தளத்தில் செய்திருப்பது போல)

Post a Comment