Wednesday, November 20, 2013

சிறுவர் செஞ்சிலுவைச் சங்க ஒருநாள் கருத்தரங்கம்

20.11.2013 அன்று புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் , புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி. ஆலோசக ஆசிரியர் களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.அதில்  “முதலுதவி” பற்றிய கருத்துரையினைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.க. விபத்தில் காயமுற்றோர்க்கு முக்கோணக் கட்டுத்துணிகளைக் கொண்டு எவ்வாறு தாடைக்கட்டு போட்டு இரத்த ஒழுக்கை நிறுத்துவது என்பது பற்றிய செயல் விளக்கத்தினைச் செய்து காட்டினார்.
ஒரு ஆலோசக ஆசிரியருக்கு விலா எலும்பு முறிவுக்கு எப்படிக் கட்டுப் போட்டு முதலுதவி செய்ய வேண்டுமென்பதை விளக்கினார்.
இரண்டு அகலக் கட்டுத்துணிகளைக் கொண்டு விலா எலும்பு முறிவுக்கு ஆலோசகர் போட்ட கட்டினைக் காட்டி விளக்கியபோது..

தலைப் பகுதியில் பட்ட காயத்துள் கண்ணாடித் துண்டு, தகரம், ஆணி முதலியன இருக்குமானால் அவ்விடத்தில் பாதுகாப்புத் வளையம் வைத்துத் தலைக் கட்டு எவ்வாறு போடுவது என்பதைச் செய்து காட்டுகிறார்

1 comment:

Kasthuri Rengan said...

கருத்தரங்கின் அருமையான நிகழ்வுகளின் ஒன்று...
நன்றி

Post a Comment