Friday, January 31, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை விழிப்புணர்வு பரப்புரை

30.01.2014 அன்று புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் , தேசிய விவசாயம்  மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியுடன் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து வங்கிச் சேவைகள் குறித்த கிராம அளவிலான விழிப்புணர்வு பரப்புரை முகாமினை நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.மனோகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்                                           திரு துரை.குமரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நபார்டு வங்கி  மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. எஸ்.சோமசுந்தரம் அவர்கள் கருத்துரையாற்றினார்.

வங்கிச் சேவைகள் குறித்த பாடல்களுடன் பாவலர் பொன்.கருப்பையா மக்களிடையே பரப்புரை நிகழ்த்தினார.

ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு.எஸ்.சந்துரு, செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு எல்.பிரபாகரன், இந்தியன் வங்கி மேலாளர் திரு.சி.வி.என்.ஜனார்தன், இந்தியன் ஓவர்சீஸ வங்கி மேலாளர் திரு ஆர். இராமநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 



செஸ்டாட்ஸ் மேலாளர் திரு வீரமுத்து அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பகுதி மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினார்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...

மணிச்சுடர் said...

வாழ்த்தினுக்கு நன்றிகள் அய்யா.

Post a Comment