Wednesday, March 5, 2014

சேவைக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மத்திய சுழற்கழகமும்.புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகமும் இணைந்து 04.03.2014 அன்று சுழற்கழக அரங்கத்தில் ஆளுநரின் அலுவல் சார்ந்த வருகைக் கூட்டத்தினை நடத்தியது.

                 அந்நிகழ்வில் இரண்டு அமைப்புகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

                பல துறைகளிலும் செயற்கரிய சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

                புதுக்கோட்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதரவற்று இறந்த, கோரப்படாத 149 உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று முறையாக நல்லடக்கம் செய்தும், 

              அகவை முதிர்ந்த முதியோர்களுக்கு இல்லங்களிலேயே சென்று மருத்துவ உதவிகள் செய்தும், 

               நடக்க இயலாத நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்சு வண்டி மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் வரும் சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை சிறந்த சேவை நிறுவனமாகப் பாராட்டப் பட்டது

              அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மு.சரவணன், தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு, செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, அறங்காவலர் திரு.அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் சுழற்கழக ஆளுநர்  ரொட்டேரியன் கோபால் அவர்கள் வழங்கிய அவ்விருதினை பலத்த கையொலிகளுக்கிடையே பெற்றனர். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

2. Word Verification-யை நீக்க...!

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

நன்றி ஐயா...

Post a Comment