Wednesday, September 23, 2015

சும்மா அதிரப்போகுதுல்ல..

அக்டோபர் 11ல் அலறப்போகுது புதுக்கோட்டை..
 உலகளாவிய  வலைப்  பதிவர்கள்கள்  ஒன்றாகச் சங்கமிக்கும்  வலைப்பதிவர் திருவிழா 

ஆலங்குடி சாலை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ...  

எதுமாதிரியும் இல்லாம ஒரு புதுமாதிரியா நடக்க இருக்கும் விழா...


.
என்னோட படைப்பை மிஞ்ச யாராலும் முடியாதுன்னு கட்டுரை. கவிதைகள் என ஐந்து வகை  மின் தமிழிலக்கியப் போட்டிகளில் முனைப்பாக பங்கேற்கும்  வலைப்  படைப்பாளிகள்...

கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய ஓவியக் கவிதைக் கண்காட்சி...

நல்ல தமிழ் நூல்கள் வெளியீடு...

வெல்லத் தமிழறிஞரகளின் வாழ்த்துரை...

முதல்நாளே வரும் பதிவர்களுக்கு தங்குமிட வசதி...

அனைத்துப் பதிவர்களுக்கும் வழங்கப்பட உள்ள அழகிய பதிவர் கையேடு...

முற்பகல். பிற்பகல் இடைவேளையில் சோர்வகற்ற சுவை நீர்..

நண்பகலில் நாவினிக்க அறுசுவை விருந்து...

மின் தமிழிலக்கியப் போட்டி வெற்றியாளர்களுக்கு தகைமைசால் தமிழ்ச் சான்றோர்களால் 50000 உரூபாயுடன்  வெற்றிக் கேடயங்களும் பரிசளிப்பு 
என அதிரப் போகுது வலைப்பதிவர் திருவிழா... 
என்ன இப்பவே புறப்புட்டாச்சா... வாங்க சந்திப்போம்.

3 comments:

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா
நிச்சயமாக புதுக்கோட்டையே 11.10.2015 அன்று அதிரப் போகிறது தான். நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்தளித்து விட்டீர்கள். அதிலும் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி அசத்தல் அய்யா.

மகிழ்நிறை said...

அய்யா! படிக்கும் அனைவரும் புதுகை நோக்கி ஓடோடி வரசெய்கிறது உங்க அட்டகாசமான பதிவு!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
இப்பொழுதே கிளம்பியாச்சு

Post a Comment