Saturday, March 2, 2013

சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரி- செஞ்சுருள் சங்கம்

                 26.02.2013 அன்று முற்பகல் புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில்  செஞ்சுருள் சங்க விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.  செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விசயசாமுண்டீசுவரி வரவேற்புரை நிகழ்த்தினார். 
                    சிறப்பு விருந்தினராக புலவர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு  ஹெச்.ஐ.வி. மற்றும் குருதிக் கொடை பற்றிக் கருத்துரையாற்றினார். அவர் தனது உரையில் பெண்களுக்கான இயற்கை பாதிப்புகள்., அவற்றிலிருந்த பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள் , வளரிளம் பெண்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகள், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றித் தெளிவாக விளக்கினார்.
                    உயிர் காக்கும் திரவமான குருதியின் பகுதிப் பொருள்களின் தன்மை, குருதி வகைகள், குருதிக் கொடையின் அவசியம், குருதிக் கொடையளிக்கத் தகுதியுடையோர். குருதிக் கொடையளிக்கக் கூடாதோர். அக்கொடையின் பலன்கள், ஆகிய செய்திகளை செஞ்சுருள் சங்க மாணவியர்க்கு மனங்கொளத் தக்க வகையில் வழங்கினார். 
                 செஞ்சுருள் சங்க மாணவ ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment