Sunday, May 5, 2013

சண்முகா நகரில் நுகர்வோர் குழு

இயமாற்றங்களை யோசிப்போம்.ற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும்
                            புதுக்கோட்டைமாவட்டம் புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகர் மற்றும் விரிவாக்கப் பகுதியி்ல்  04.05.2013 அன்று நுகர்வோர் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
                                புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு தலைவர் ( பொ ) ரொட்டேரியன் திரு ஆர்.யு.இராமன், மாவட்டப் பொருளாளர் திரு வேழவேந்தன் ஆகியோர்  வருகை தந்து சண்முகா நகர் நுகர்வோர் குழுவினை அமைத்து வைத்தனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையாநுகர்வோர் குழுவினரை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார்.அவர் பேசுகையில்  நுகர்வோர் குழுவின் அவசியம், தனிநபர் விழிப்புணர்வும், பொதுநலனும் பற்றிக் குறிப்பிட்டார்.                                                  திரு வேழவேந்தன் தனது உரையில் மாவட்ட நுகர்வோர் குழு தொடங்கப்பட்ட 1985 ஆம் ஆண்டிலிருந்து குழுவின் செயல்பாடுகள், சாதித்தவை , நுகர்வோர்யார்? நுகர்வோரின்பாதிப்புகளும் விழிப்புணர்வும் பற்றிக் கூறினார்.
                               இராமன் அவர்கள் பேசுகையி்ல் நுகர்வோரின்  எட்டு உரிமைகள், பத்துக் கடமைகள் பற்றி விளக்கி தனி நபர்க்காக மட்டுமன்றி பகுதிமக்களின் பாதிப்பின்போதும் நுகர்வோர் குழு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி விளக்கினார். 
                               திருவாளர்கள் பாவலர் பொன்.கருப்பையா, உ.சரவணபாண்டி, அ.சுப்பையா,க.கனகராஜ், சி.சோமசுந்தரம், குரு.முத்துராஜ்பாண்டிக்குமார், வெ.சீனிவாசநாராயணன், க.சுப்பிரமணியன், சுரேஷ் அகிலா,ச.கோபாலகிருஷ்ணன், அ.சோமசுந்தரம், பா.வெங்கடசுப்பிரமணியன்,சண்முகபாண்டி,கரு.கருணாநிதி, சாண்டில்யன், கண்ணன், இரவி, க.இராசசேகர், அருணாசலம்,ச.சுப்புராமன், இரா.ஜெயக்குமார்,  திருமதியர் சித்ராசத்தியமூர்த்தி, வள்ளிக்கண்ணு, ஞானசுந்தரி, ஆனந்தவள்ளி ஆகியோர் கொண்ட நுகர்வோர் குழு அமைக்கப்பட்டது. ஆண்டு உறுப்பினர் கட்டணம் செலுத்தித் தங்களை நுகர்வோ்ர் குழு உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், 
                           இக்குழுவிற்குத் தலைவராக பாவலர் பொன்.கருப்பையா, செயலாளராக திரு அ.சோமசுந்தரம், பொருளாளராக திரு அ.சுப்பையா ஆகியோர் அமைப்புக் குழுவால் தேர்வு செய்யப் பட்டனர், 
உறுப்பினர்களின் சந்தேகங்களும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
                            நிறைவில் பொருளாளர் திரு அ.சுப்பையா அவர்கள் நன்றி கூறினார்.  

No comments:

Post a Comment