Wednesday, June 26, 2013

திருவள்ளுவர் சிலை நிறுவிய நினைவு

            திருவள்ளுவராண்டு 2044 ஆடவைத் திங்கள் கக ஆம் நாள்(.25.06.2013) புதுக்கோட்டை சின்னப்பாத்திடலருகே உலகப் பொதுமறை தந்த தமிழ்ப்பாட்டன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் பொருட்டு அவரது சிலைக்குத் தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் படிமத்திற்கு மலர் மாலை அணிவித்துப் பெருமை செய்யப் பட்டது.
  
          இந்நிகழ்வில் சிலை அமைப்புக் குழுத்தலைவர் சீனு.சின்னப்பா,  திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, மூத்தகுடிமக்கள் அமைப்புத் தலைவர் க.இராமையா, தமிழிசைச் சங்கத் தலைவர் இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார்,மணிமன்ற நிறுவுனர் பாவலர் பொன்.கருப்பையா, கம்பன் கழகச் செயலாளர் இரா.சம்பத்குமார், பாவேந்தர் இலக்கியப் பேரவைச் செயலாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கோவிந்தசாமி மற்றும் தமிழார்வலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
          
         கடந்த ஆண்டு இதே நாளில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே நிறுவப்பட்ட இச்சிலை அரசியல் மாச்சரியங்களால் இன்னும் முறையான திறப்பு விழா செய்யப் படாமல் இருப்பது தமிழார்வலர்கள் மனதில் நெருடலாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment