Sunday, November 17, 2013

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்

17.11.2011 அன்று புதுக்கோட்டை  ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் நடந்த             த மு எ க ச திருக்கோகர்ணம் கிளைக் கூட்டத்தில் பாவலர் பொன்.க . எழுதி இசைத்துப்                                                                                           பாடிய பாடல்.

ஓடுகிற ஓடைநீரைப் போல மனசு இருக்கணும்
ஒவ்வொரு நாளு விடியும் போதும் புதுசு புதுசாப் பொறக்கணும் -நாம                                               புதுசு புதுசாப் பொறக்கணும்                                                                                                  -- ஓடுகிற 

தேங்கிக் கெடக்கும் குட்டைநீரில்  தீங்குசெய்யும்   புழுக்கள்    நெளியும்
தேக்கி     வைக்கும்  துயரம்நெஞ்சில்  தேடலுக்குத் தடையா  அமையும்
தென்றல் நம்மைத்  தீண்டுமுன்னே  சூறாவளிக்  காற்றாய்த்  தோன்றும்
தேவையற்ற  சுமையை  நீக்கத் தேன்மலரின்  இதழ்கள்  விரியும்                     -- ஓடுகிற

வெம்மை   குளிரக்    கருமேகம்        மண்ணில்   மழையைப்        பொழியுது
வெடிச்சுச் செதறும்  மகரந்தந்தான்  வெளைச்சல்  பெருக்கித்  தருகுது
வெந்தனலாய்க்  கவலை  தேங்க      மனசில்         மகிழ்ச்சி             கருகுது
வெளியேறும்  வேர்வைத்  துளியே வியக்கு ம் உழைப்பைப்  பெருக்குது    -- ஓடுகிற

அழுத்தம்  நெறைஞ்ச  எடந்தனிலே  வெடிக்கும்  நிகழ்வு      இயற்கையே 
அரும்பும்  இடரைக்     கடப்பதிலே    ஆற்றல்  பெருகும்          நெறையவே                                         ஆற்றாத   சோகம்      ஆழியும்             அடுத்து    சுமையைப்       பகிரவே
ஆறுதலை ஏற்கும்      நெஞ்சில்            அமைதி    தவழும்           நெடுகவே          -- ஓடுகிற 

3 comments:

Rathinam Padmanaban said...

வணக்கம். பாடல் அருமை.
முடிந்தால் வீடியோ-வையும் பகிருங்கள்.

அ.பாண்டியன் said...

அய்யாவிற்கு வணக்கம்..
பாடல் மிக அருமை. கேட்கும் வாய்ப்பு தவிர்க்க முடியாத காரணத்தால் நழுவிப்போனது. மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

Kasthuri Rengan said...

அருமை அய்யா ...

Post a Comment