Tuesday, March 24, 2015

உலக காசநோய் நாள்.24.03.2015

உலக காசநோய் நாளன்று (24.03.2015) புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கூட்ட அரங்கி்ல் , புதுக்கோட்டை மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம்  கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்தியது.
புதுக்கோட்டையில் உள்ள செவிலியர் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த எண்பத்திரண்டு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
காசநோய் இல்லாத சமூகத்தை நோக்கி.. என்னும் தலைப்பிலான பேச்சுப் போட்டியில்  கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி மாணவி புனிதவள்ளி முதலிடத்தையும், பொன்மாரி கல்வியியல் கல்லூரி மாணவர் புகழ்மணி இரண்டாமிடத்தையும், கீரை தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரி மாணவி கீர்த்திகா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
“காசநோய்க் கட்டுப்பாட்டில்  சமூகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவி தெ.செல்வராணி முதலிடத்தையும், மவுண்ட் சீயோன் செவிலியர் கல்லூரி மாணவி சு.சத்யா இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி  ம.ஜீவிதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
“காசநோயற்ற வாழ்க்கைக்கு சமூகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் கீரை தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரி மாணவி செ.அன்னைதெரசா முதலிடத்தையும், கிருபாஸ்ரீ இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி இரா.கஸ்தூரி மூன்றாமிடத்தையும் பெற்றனர். புலவர் மா.நாகூர், கவிஞர் சு.இளங்கோ, திரு முத்தையா, ஆர்.சுப்பிரமணியன், ஓவியர் அண்ணாமலை, மு.கருப்பையா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
வெற்றியாளர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கத் தலைவர் ஆர்.இராசகுமார் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் புலவர் பொன்.கருப்பையா வரவேற்புரையாற்றினா்ர்,  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு முருகேசன் அவர்கள் வெற்றியாளர்களுக்குக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்ட காசநோய்ப் பிரிவு துணை இயக்குநர்  மருத்துவர் எஸ்.ஆர்.சன்திரசேகரன் , மாமன்னர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் கணேசன், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சேதுராமன் , இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் திரு. லெ.பிரபாகரன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத் தலைவர் திரு தா.சிவராமகிருஷ்ணன்  ஆகியோர் காசநோய் தடுப்பு பற்றி உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு ம.வீரமுத்து அவர்கள் நன்றி நவில்ன்றார்.
 போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
கிராமப்புற மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையினைச் சிறப்பாகச் செய்த களப்பணியாளர்  தட்சிணாபுரம் கந்தசாமி அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
அனைவருக்கும் தேநீர், ரொட்டி, பகலுணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு புலவர் பொன்.கருப்பையா.

 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காச நோய் இல்லா உலகு அமையட்டும்
நன்றி ஐயா

மணிச்சுடர் said...

நோயற்ற வாழ்வுதானே குறைவற்ற செல்வம் அய்யா.

Post a Comment