Friday, March 6, 2015

முழுநிலா முற்றத்தில்...

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

05.03.2015 மாலை கவிஞர் மு.கீதா அவர்கள் இல்ல மேல்தளத்தில் புதுக்கோட்டை முழுநிலா முற்றத்தின் இரண்டாம் கூட்டம் கவிஞர் ஆர்.நீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கவிஞர் அமிர்தா அவர்களின் மகள் செல்வி எழில்ஓவியாவின் “புகலிடம் தேடிப்பறவையாய்“ எனும் ஈழத்தமிழ்ப் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. 

கவிஞர்கள் மாலதி, மகாசுந்தர், அமிர்தா ஆகியோர் கவிதைகள் வழங்கினர்.

கவிஞர் நீலா அவர்கள் “ சொல்லமுடியாத கதை” என்னும் சிறுகதை வாசிக்க,  கதை பற்றிய கருத்துகள் பகிரப்பட்டன.

கவிஞர் முத்துநிலவன் “பண்டைப் புகழும்” என்னும் பாடலோடு ஐக்கூ கவிதை பற்றிய விளக்கமளித்தார்.

பாவலர் பொன்.கருப்பையா ” காலநிலை மாறிப்போச்சுங்க” என்னும் பாடலோடு  திரு வெ.இறையன்பு அவர்கள் காஞ்சிபுரத்தில் தொடங்கிய “நிலவொளி இயக்கம்” பற்றிய கருத்தினைப் பதிவு செய்தார்.

கவிஞர் வைகறை அறிமுகம் செய்த பாஷோ ஐக்கூ கவிதை இதழை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் வெளியி்ட கவிஞர் ஆர்.நீலா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில்  கவிஞர்கள் பொன்னையா, உப்பை தமிழ்க்கிறுக்கன், சிவா, சுரேசுமான்யா, சோலச்சி,  அப்பாசு, நாணயவியல் கழக பஷீர், மல்லிகா, செயலெட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தினை ஏற்பாடு செய்த கவிஞர் மு.கீதா அவர்கள் பெருமாள் முருகன் அவர்களின் “மாதொருபாகன்“ தொடர் நூல் பற்றிய  அறிமுகத்தோடு, ரொட்டி, கோதுமைப்பால், தேநீர் ஆகியனவற்றையும் வழங்கி வருகை தந்தோர்க்கு நன்றிகளை நவில்ன்றார்

 நிறைவாக வைகறை அவர்களின் நன்றி அறிவிப்போடு அடுத்த  முழுநிலா முற்றக் கூட்டம் காமராசபுரம் கவிஞர் ரேவதி அவர்களின் இல்லத்தில் நடத்த முடிவுசெய்யப்பட்டது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நிலவொளியில் ஓர் இலக்கிய விழா
மகிழ்ந்தேன் ஐயா

Kasthuri Rengan said...

வாழ்த்துக்கள் அய்யா

Post a Comment