Thursday, August 15, 2013

67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாவில்...

                      மூன்றடுக்குப் பாதுகாப்போடும், குண்டு துளைக்காத கவச உடைகளோடும், சுற்றிலும் இராணுவப் பாதுகாப்போடும் இன்றைய 67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாக்களும் கொடியேற்றங்களும் நாடெங்கும் நடைபெற்றது.

                   புதுக்கோட்டை தாகூர் மழலையர் பள்ளி விடுதலைநாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு நாட்டுக் கொடியினையேற்றி, பேதமறியாப் பிஞ்சு உள்ளங்களுக்கு, விடுதலைபெற உழைத்த உத்தமர்களின் தியாகங்கள் பற்றியும், இன்று பெருகிவரும் வன்முறைகள் களையப்பட இளயை தலைமுறை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, அறவழி ஆகியவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதையும்  அறஉரையாற்றினார்.


                 பள்ளிக் குழந்தைகளின்  விடுதலை பற்றிய உரை, பேச்சுகள் சிறப்பாக இருந்தன.


               சாதனை புரிந்த மழலையர்க்கு இனிப்போடு எழுதுகோல்களையும் பரிசுகளாக வழங்கினார்.


No comments:

Post a Comment