Thursday, August 15, 2013

மூத்த குடிமக்கள் அமைப்பில்...

              புதுக்கோட்டை பாலா தமிழரங்கில் நடைபெற்ற 67 ஆவது இந்திய விடுதலை நாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டார். 
             மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா நாட்டுக் கொடியினை ஏற்றினார். கொடிவணக்கப் பாடலை துளசிராமன் பாடினார். உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

               அதனையடுத்து அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையேற்றார்.

            மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா அவர்கள் வரவேற்புரையினையும் நிதிஅறிக்கையினையும் அளித்தார்.

            சூன், சூலை, ஆகத்துத் திங்கள்களில் பிறந்த மூத்த குடிமக்கள் ஆடைபோர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர். 

           தலைமை உரையினையடுத்து பாவலர் பொன்.க விடுதலைநாள் விழா உரையாற்றினார்.

            தனியார் மயம் , தாராளமயம், உலகமயம் கொள்கை களால்.அடித்தட்டு மக்கள் தங்கள்  அடிப்படை உரிமைகளை இழந்து கொண்டிருப்பதையும், நாட்டில் பெருகி வரும் பன்னாட்டுக் கலாச்சாரங்களையும்  பயங்கரவாதங்களையும் குறிப்பிட்டு, சமூக, பொருளாதார, பெண்விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற, நாட்டில் அமைதி நிலவ, உலக அரங்கில் இந்தியா  நல்லரசாக, வல்லரசாக விளங்க, வலிமையும் திறமையும் மிக்க இளைய தலைமுறை முனைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment