Monday, August 26, 2013

காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பில்

                26.08.2013 முற்பகல் , புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில். ரீச் தொண்டு நிறுவனமும், செல்வா அறக்கட்டளையும் நடத்திய காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.

               ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா மகேசுவரன் அவர்கள் தலைமையி்ல் , புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு மையச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, காசநோய் பராமரிப்பிற்கான நோயாளிகளின் சாசனம் பற்றி விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினார்.

              செல்வா அறக்கட்டளை வாசுகி முகாமினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். த.நா.அ.இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். 

               ரீச் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டி நன்றி கூறினார்.

              காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் பயணடைந்தனர்.

No comments:

Post a Comment